📝Where to study 📝 |
---|
--> பத்தாம் வகுப்பு - கோபல்லபுரத்து மக்கள் - வட்டார் வழக்கு சொற்கள் |
7 ஆம் வகுப்பு இயல் 1 |
---|
1) தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. |
தெரிந்து தெளிவோம் |
---|
1) "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" - நன்னூல் 2) "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்." - என்பது பாவேந்தரின் ஆசை. அதன்படி நம் செந்தமிழ்மொழி செழுந்தமிழாய் விளங்கப் பாடுபடுவோம். 3) தெரிந்து தெளிவோம் 'பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்' - மு.வரதராசனார் 4) தெரிந்து தெளிவோம் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார். 5) தெரிந்து தெளிவோம் கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன. 6) தெரிந்து தெளிவோம் இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
Book Back |
---|
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 2. ஒலியின் வரிவடிவம் ------------ ஆகும். 3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று ----------- 4. பேச்சுமொழியை -------- வழக்கு என்றும் கூறுவர். 5) ஊடகங்களை வகைப்படுத்துக. 6) உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக. |
10 ஆம் வகுப்பு |
---|
இயல் 8 பின்வரும் உரையாடலில் பேச்சு வழக்கினை எழுத்து வழக்கமாக மாற்றுக. "தம்பி? எங்க நிக்கிறே?" "நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!” எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது அங்ஙனக்குள்ளேயே பேப்பர் படிச்சிக்கிட்டு இரு "நா வெரசா வந்துருவேன்" "அண்ணே! சம்முவத்தையம் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு" "அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.'' "ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்.'' "இப்ப ஒசரமா வளர்ந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்". சரிங்கண்ணே. விடை "தம்பி! எங்கே நிற்கிறாய் "நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா! எதிர் பக்கத்தில் ஒரு தேனீர்க் கடை இருக்கிறது. "அந்த இடத்திற்குள்ளே தேனீர் அருந்தி விட்டு செய்தித் தாளைப் படித்துக் கொண்டு இரு நாட்களில் விரைவாக வந்து விடுவேன்.'' "அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து வெகு நாட்களாகியும் விட்டன.'' "அவன் பாட்டியோடு வெளியூர் போய் இருக்கிறான். உங்க ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்.'' "மிகச்சிறிய வயதில் பார்த்தது அண்ணா அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!" "இப்போது உயரமாக வளர்ந்து விட்டான் உனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பார். சரி தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன் "சரி அண்ணா,” இயல் 3 வட்டார வழக்குச் சொற்கள் |
12 ஆம் வகுப்பு |
---|
இயல் 2 செய்து கற்போம் இயல் 3 தெரிந்து தெளிவோம் (உரிமைத்தாகம்) இயல் 4 Book Back தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது. 1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது. 2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. 5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். இயல் 5 பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக. 1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும் 2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான. 3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. 4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது 5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் தலைக்குளம் தெரிந்து தெளிவோம் |
minnal vega kanitham