Type Here to Get Search Results !

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு சொற்களுக்கு இனியான தூய தமிழ் சொல், பேச்சு வழக்கு சொற்களில் பிழை திருத்தம்

0
📝Where to study 📝

--> பத்தாம் வகுப்பு - கோபல்லபுரத்து மக்கள் - வட்டார் வழக்கு சொற்கள்
--> பத்தாம் வகுப்பு - இயல் 8 மொழியை ஆள்வோம் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
--> ஒன்பதாம் வகுப்பு - இயல் 2 - நீரின்றி அமையாது உலகு - நீர்நிலை அட்டவனை
--> ஏழாம் வகுப்பு - இயல் 1 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
--> 12 ஆம் வகுப்பு இயல் 3 - உரிமைத் தாகம் தெரிந்து தெளிவோம்
--> 12 ஆம் வகுப்பு - இயல் 4 தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
--> 12 ஆம் வகுப்பு இயல் 5 -தலைக்குளம் தெரிந்து தெளிவோம் - வட்டார வழக்கு
--> 12 ஆம் வகுப்பு இயல் 5 மொழியை ஆள்வோம் -பேச்சு வழக்கை எழுத்து எழுத்து வழக்காக மாற்றுதல்
--> 12 ஆம் வகுப்பு தமிழ் பழையது -பக்கம் 130, 149, 150 பேச்சு மொழி
--> 11 ஆம் வகுப்பு தமிழ் பழையது -பக்கம் 126,147
--> 9 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 2 -இயல் 2- மொழித்திறன் பிழை நீக்கி எழுதுதல்
--> 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1 இயல் 2 - இலக்கிய கை சொற்கள்
--> 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1- இயல் 3 வழக்கு
--> 8 ஆம் வகுப்பு தமிழ் பழையது - பருவம் 2- இயல் 1- மொழித்திறன் - பேச்சு வழக்கு
--> 7 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 1 - இயல் 1 - மொழித்திறன்
--> 7 ஆம் வகுப்பு தமிழ் பழையது பருவம் 2- இயல் 1 - மொழித்திறன்


7 ஆம் வகுப்பு இயல் 1

1) தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. 
2) தமது எண்ணங்களையும் உணர்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே ----- ஆகும்? மொழி
3) மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது? மொழியின் மூலமாக
4) வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது? பேச்சுமொழியாகும்
5) பேசுவதும், கேட்பதும் மொழியின் ----- நிலையாகும்? முதல்நிலை
6) எழுதப்படுவதும், பாடிக்கப்படுவதும் மொழியின் ----- நிலை ஆகும்? இரண்டாம் நிலை
7) உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது? ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி
8) நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது? எழுத்து மொழி
9) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது? பேச்சுமொழி
10) 'எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்' எனக் கூரியவர்? மு. வரதராசனார்
11) "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? நன்நூல்
12) பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ----- என்பர்? வட்டார மொழி
13) வட்டார மொழிக்கு எகா? இருக்கிறது என்னும் சொல் 'இருக்கு', 'இருக்குது ', 'கீது '
14) தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் எவை? கன்னடம், தெலுங்கு
15) பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே ----- மொழியாகும்? எழுத்து மொழியாகும்
16) பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? உலகவழக்கு
17) எழுத்து மொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? இலக்கிய வழக்கு
18) பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது? இறட்டை வழக்கு மொழி
19) தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்? தொல்காப்பியர்
20) 'நல்லாச் சாப்ட்டான்' என்பது? பேச்சுமொழி (உலக வழக்கு)
21) 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது? எழுத்து மொழி (இலக்கிய வழக்கு)
22) எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிக்கு இடமில்லை? எழுத்து மொழி
23) எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம் மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை? பேச்சு மொழி
24) குழந்தைக்கு தாய் மொழி எவ்வாறு அறிமுகமாகிறது? கேட்டல், பேசுதல்
25) குழந்தைக்கு பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது? படித்தல், எழுதுதல்
26) தமிழை ----- மொழி என்பர்? இறட்டை வழக்கு மொழி
27) "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாவேந்தர்
28) "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுஉம் வேண்டும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? பாவேந்தர்
29) மொழியின் முதல் நிலை பேசுதல் ----- ஆகியவனாகும்? கேட்டல்
30) ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்? எழுத்து
31) தமிழின் கிளை மொழிகளில் ஒன்று? தெலுங்கு
32) பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்? உலக


தெரிந்து தெளிவோம்

1) "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் 

திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" - நன்னூல் 

2) "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். 

வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு 

தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்."  - என்பது பாவேந்தரின் ஆசை. அதன்படி நம் செந்தமிழ்மொழி செழுந்தமிழாய் விளங்கப் பாடுபடுவோம்.

3) தெரிந்து தெளிவோம்

'பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்' - மு.வரதராசனார்

4) தெரிந்து தெளிவோம்

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

5) தெரிந்து தெளிவோம்

கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.

6) தெரிந்து தெளிவோம்

இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Book Back

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 
1. மொழியின் முதல் நிலை பேசுதல், -------- ஆகியனவாகும். 
அ) படித்தல் 
ஆ) கேட்டல் 
இ) எழுதுதல் 
ஈ) வரைதல் 
[விடை : ஆ. கேட்டல்] 

2. ஒலியின் வரிவடிவம் ------------ ஆகும்.
அ) பேச்சு 
ஆ) எழுத்து 
இ) குரல் 
ஈ) பாட்டு 
[விடை : ஆ. எழுத்து]

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று -----------
அ) உருது 
ஆ) இந்தி
இ) தெலுங்கு 
ஈ) ஆங்கிலம் 
[விடை : இ. தெலுங்கு]

4. பேச்சுமொழியை  -------- வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய 
ஆ) உலக 
இ) நூல்
ஈ) மொழி
[விடை : ஆ. உலக]

5) ஊடகங்களை வகைப்படுத்துக. 
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல். 
எழுத்துமொழி : செய்தித்தாள், நூல்கள், மின்னஞ்சல். 
பேச்சுமொழி : வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம். 

6) உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக. 
(எ.கா.)  பேச்சுமொழி - அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி - அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். 
1. பேச்சுமொழி - வூட்டுக்கு போகனும்.
எழுத்துமொழி - வீட்டிற்குப் போக வேண்டும்.
2. பேச்சுமொழி - வவுறு நிறையா சாப்புடு. 
எழுத்துமொழி - வயிறு நிறைய சாப்பிடு. 
3. பேச்சுமொழி - இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே
எழுத்துமொழி - இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன். 
4. பேச்சுமொழி - தண்ணி கொண்டா
எழுத்துமொழி - தண்ணீர் கொண்டு வா. 


10 ஆம் வகுப்பு
இயல் 8

பின்வரும் உரையாடலில் பேச்சு வழக்கினை எழுத்து வழக்கமாக மாற்றுக.

"தம்பி? எங்க நிக்கிறே?"

"நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!” எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது அங்ஙனக்குள்ளேயே பேப்பர் படிச்சிக்கிட்டு இரு "நா வெரசா வந்துருவேன்"

"அண்ணே! சம்முவத்தையம் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு"

"அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.''

"ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்.''

"இப்ப ஒசரமா வளர்ந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்". சரிங்கண்ணே.

விடை

"தம்பி! எங்கே நிற்கிறாய்

"நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா! எதிர் பக்கத்தில் ஒரு தேனீர்க் கடை இருக்கிறது.

"அந்த இடத்திற்குள்ளே தேனீர் அருந்தி விட்டு செய்தித் தாளைப் படித்துக் கொண்டு இரு நாட்களில் விரைவாக வந்து விடுவேன்.''

"அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து வெகு நாட்களாகியும் விட்டன.''

"அவன் பாட்டியோடு வெளியூர் போய் இருக்கிறான். உங்க ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்.''

"மிகச்சிறிய வயதில் பார்த்தது அண்ணா அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!"

"இப்போது உயரமாக வளர்ந்து விட்டான் உனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்களுடன் வருவான் பார். சரி தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்

"சரி அண்ணா,”


இயல் 3

வட்டார வழக்குச் சொற்கள்
பாச்சல் - பாத்தி
பதனம் - கவனமாக
நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
மகுளி - சோற்றுக் கஞ்சி
வரத்துக்காரன் - புதியவன்
சடைத்து புளித்து - சலிப்பு
அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
தொலவட்டையில் - தொலைவில்


12 ஆம் வகுப்பு
இயல் 2

செய்து கற்போம்
உங்கள் பகுதியில் புழங்கும் இருபது சொற்களைக் கொண்டு வட்டார வழக்குச் சொல் தொகுப்பு ஒன்றை உருவாக்குக. 
1. நான் சொல்லுதேன் - நான் சொல்கிறேன் 
2.அவன் நிக்கான் - அவன் நிற்கிறான் 
3. நீங்க வருதியகளா? - நீங்கள் வருகிறீர்களா? 
4. ஏளா ! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்? 
5. முடுக்குது - நெருங்குகிறது 
6. சொல்லுதான் - சொல்கிறான் 
7. செய்தான் – செய்கிறான்
8. ஆச்சி - வயதான பெண்மணி / பாட்டி 
9. ஏல(லே) - நண்பனை அழைப்பது 
10. மக்கா - நண்பா 
11. பைதா - சக்கரம் 
12. கொண்டி - தாழ்ப்பாள் 
13. பைய - மெதுவாக 
14. சாரம் - லுங்கி 
15. கோட்டி - மனநிலை சரியில்லாதவர் 
16. வளவு - முடுக்கு, சந்து 
17. சிரை - தொந்தரவு 
18. மச்சி - மாடி 
19. ஆக்கங்கெட்டது - கெட்ட நேரம் 
20. செத்த நேரம் - கொஞ்ச நேரம்


இயல் 3

தெரிந்து தெளிவோம் (உரிமைத்தாகம்)
அனயம்  - நிறைவானது 
எச்சௌந்தவன்  - ஏழை எளியவன். 
கீழத்தார்   - புன்செய்யின் ஒரு பகுதி 
கெராமுனுசு - கிராம நிர்வாக
அலுவலர் கொடவாங்கல் - கொடுக்கல் வாங்கல் 
திருணை - திண்ணை 
தெகஞ்சத  - முடிந்ததை 
பிஞ்சை - புன்செய் 
ரோசி  - உரசுதல் 
வாந்தக்கமாக - இணக்கமாக 
வெதப்பெட்டி - விதைப்பெட்டி 
வெள்ளங்காட்டி  - விடியற்காலை 
வேண்டாற  - வேண்டாத 
திருகை - மாவு அரைக்கும் கல் 
குறுக்கம் - சிறிய நிலப்பரப்பு 
கடகம் - ஓலைப்பெட்டி


இயல் 4 Book Back

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. 

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது. 

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. 

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். 

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. 

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. 
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது. 

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். 
இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.


இயல் 5

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
எ.கா. இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ  
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள். 

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும். 

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். 

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. 
வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். 

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது 
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது. 

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் 
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.


தலைக்குளம்

தெரிந்து தெளிவோம்
உம்மா - அம்மா
வாப்பா - அப்பா
ஏச்சு - திட்டுதல் 
கடவு - படித்துறை 
கன்னியார், கோணம் - ஒரு வயற்காட்டின் பெயர் 
உப்பா - தாத்தா 
பாவாத்து - துணி நெய்ய வேண்டிய நூலுக்குப் பசை கொடுப்பது 
சுள்ளைக்கு உள்ளிருந்து - (செங்கல்) நெருப்புச்  சுள்ளைக்கு உள்ளிருந்து
அடிபற்றி இருக்கும் - அடித்தரை தெரியும்படி இருக்கும்
வேசாடையாக - சற்றுக் கோபமாக 
அமானிதம் - பாதுகாக்கப்பட வேண்டிய விசயம் 
ஏலாவிலிருந்து - பெரிய வயலில் இருந்து 
முக்கால், மூண்டானி - ஒரு அளவு 
புன்ன மூட்டடி - புன்னை மரத்தின் நிழல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்