5th & 7th New Book |
---|
வகைப்பாடு: I) நேர்மறைத் தொடர்கள்: 1) இரண்டு நேர்மறையான தொடர்களை இணைக்கப் பயன்படுவது. எ.கா: நான் நன்றாகப் படித்தேன் நல்ல மதிப்பெண் பெற்றேன் விடை : நான் நன்றாகப் படித்தேன் அதனால் நல்ல மதிப்பெண் பெற்றேன். இரண்டு நேர்மறையான தொடர்களை இணைக்கப் பயன்படும் இணைப்புச் சொற்கள். ● அதனால் ● ஆதலால் ● அவ்விதமாய் ● அப்படியானால் ● எனவே ● மேலும் ● அவ்வாறெனில் ● ஆகவே ● என்றால் ● ஆகையால் ● ஏனெனில் ● அதுபோல II) எதிர்மறைத் தொடர்கள்: இரண்டு எதிர்மறையான தொடர்களை இணைப்பது. எ.கா: நான் நன்றாகப் படித்தேன் நான் தேர்ச்சி பெறவில்லை விடை : நான் நன்றாகப் படித்தேன் "ஆனால்" தேர்ச்சி பெறவில்லை இரண்டு எதிர்மறையான தொடர்களை இணைக்கப் பயன்படும் இணைப்புச் சொற்கள்: ● ஆனால் ● ஆனாலும் ● ஆயினும் ● இருந்தாலும் ● இருப்பினும் ● இருந்தபோதிலும் ● எனினும் 3) வேறு வேறு பெயர்கள்: இரண்டு வேறு வேறு சொற்களை இணைக்கப் பயன்படும் இணைப்புச் சொற்கள்: ● உம் ● இருவரும் ● மற்றும் ● உம்: எ.கா: கயல் பள்ளிக்குச் சென்றாள், கயலின் சகோதரி பள்ளிக்குச் சென்றாள். விடை : கயலும், கயலின் சகோதரியும் பள்ளிக்குச் சென்றனர். "உம்" இணைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
● மற்றும் எ.கா: கயல் "மற்றும்" கயலின் சகோதரி பள்ளிக்குச் சென்றனர்.
● இருவரும் எ.கா: கயல், கயலின் சகோதரி இருவரும் பள்ளிக்குச் சென்றனர். (5th New Tamil Book) ● இணைப்புச் சொற்கள் எதற்குப் பயன்படுகின்றன? தங்கு தடையின்றிப் பேசவும், எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. ● நாம் கண்டுபிடித்த இணைப்புச் சொற்களைப் பட்டியலிடலாமா? மட்டும், அதனால், அப்படியானால், ஆதலால், அல்லது, ஆகையால், ஏனெனில், ஆகவே படித்தீர்களா? இவைபோன்ற இணைப்புச்சொற்கள், நாம் பேசும் பேச்சில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திப் பேசவும் எழுதவும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. நாம் தங்குதடையின்றிப் பேசவும் எழுதவும் இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. தொடர்களை இணைப்பதற்கு இணைப்புச்சொற்கள் பயன்படுகின்றன. இவற்றை இணைப்பிடைச் சொற்கள் எனவும் கூறுவர். தொடர்களில் பயன்படும் சில இணைப்புச்சொற்கள் பின்வருமாறு: அதனால், அப்படியானால், அல்லது, அவ்வாறெனில், ஆனால், ஆகையால், ஆகவே, ஆதலால், ஆயினும், இருந்தபோதும், உம், எனவே, எனில், ஏனெனில், எவ்வாறெனில் ● கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருத்தமான இணைப்புச்சொற்களை இணைத்து எழுதுக. (ஆனால், அதனால், ஏனெனில், ஆகையால், எனவே, ஆகவே, பிற) அடர்ந்த காடு ஒன்றில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. "ஆனால்", சிங்கம் மட்டும் அரசனாக விளங்கியது. "ஏனெனில்", அது பார்ப்பதற்கு மிடுக்கான தோற்றமுடையது. "ஆகையால்", அதனைக் கண்டு பிற விலங்குகள் அஞ்சின. "எனவே", அது தனியாகக் குகையில் வசித்தது. "ஆனால்" அது எப்போதும் விழிப்போடு இருந்தது. ஒருநாள் அதற்குப் பசித்தது. "அதனால்" குகைக்கு வெளியே வந்து இரைக்காகக் காத்திருந்தது. சிங்கத்தைப் பார்த்தவுடன் பிற விலங்குகள் அஞ்சியோடின. "ஏனெனில்", அவற்றைச் சிங்கம் அடித்துவிடும் அல்லவா? ● கீழ்க்காணும் தொடர்களை இணைத்து எழுதுக. 1. நான் விளையாடச் சென்றேன். கண்ணன் விளையாடச் சென்றான். (உம்) விடை- நானும் கண்ணனும் விளையாடச் சென்றோம். 2. வள்ளி எழுதி முடித்துவிட்டாள். எழிலி எழுதவில்லை . (ஆனால்) விடை - வள்ளி எழுதி முடித்துவிட்டாள். ஆனால் எழிலி எழுதவில்லை. 3. பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. (அதனால்) விடை - பெருமழை பெய்தது. அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. 4. முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு உடல்நலமில்லை. (ஏனெனில்) விடை - முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில் அவனுக்கு உடல்நலமில்லை. 5. அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். (ஆகவே) விடை - அறிவு வளர்ச்சிக்குக் கணினி தேவை. ஆகவே கணினியை இயக்கத் தெரிதல் வேண்டும். ● சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1) 'அதனால்' என்பது (அ) பெயர்ச்சொல் (ஆ) வினைச்சொல் (இ) உரிச்சொல் (ஈ) இணைப்புச்சொல் [விடை : ஈ) இணைப்புச்சொல்] அ) எனவே ஆ) ஆகையால் இ) ஏனெனில் ஈ) ஆயினும் [விடை : ஈ) ஆயினும்] அ) அதனால் ஆ) ஆதலால் இ) இருந்தபோதிலும் ஈ) ஆனால் [விடை : ஈ) ஆனால்] (7th New Tamil Book) ● சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக. (எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும் ) 1. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். "இல்லையென்றால்" துன்பப்பட நேரிடும். 2. குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது. "ஆகையால்" காக்கையின் கூட்டில் முட்டையிடும். 3. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். "ஏனெனில்" மரங்கள் தான் மழைக்கு அடிப்படை. 4. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். "எனவே" பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம். 5. தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது. "மேலும்" இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. |
பள்ளிப் புத்தகங்களில் இருப்பினும், 'எனினும்', 'இதனால்', 'எனவே', 'ஏனெனில்', 'ஆகையால்', 'அதுபோல', 'அதனால்', 'வரை', 'பின்பு" முதலிய இணைப்புச் சொற்கள் இடம்பெறும் இடங்கள் பின்வருமாறு: |
---|
1) கண்ணே மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. "அதுபோலப்" பாரதிதாசன் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்கிறார். 2) பாரதிதாசன் புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். "எனவே", இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். 3) சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். "அதுபோல" இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். 4) சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். "அதனால்", தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். 5) சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். "அதனால்தான்" விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம். 6) தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். "அதனால்", அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். 7) பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. "எனவே" இவற்றை முதல் எழுத்துகள் என்பர். 8) வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது "அதனால்" வெண்ணிலவைப் போற்றுவோம். 9) தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப்படுகின்றன. "எனவே" சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. 10) மனிதன் சில நேரங்களில் வெற்றி பெறுகிறான். சில நேரங்களில் தோல்வி அடைகிறான். "ஆனால்" முயற்சிகள் என்றும் ஓய்வதில்லை. 11) தமது வேலைகளை எளிமையாகச் செய்ய முதலில் தானியங்கிகளை உருவாக்கினான் மனிதன், "பிறகு" தன்னைப் போன்றே சிந்தித்துச் செயல்படும் தானியங்கிகளை உருவாக்க முயன்றான். 12) அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏவூர்திகளில் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம். "எனவே", நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள். 13) கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். "எனவே" குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள். 14) பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும். "எனவே", படிப்போம்! பண்பாட்டோடு நிற்போம்! பார் போற்ற வாழ்வோம் 15) படிப்பறிவு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். "எனவேதான்" நாடு முழுக்க ஐம்பதாயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு பண்ணியிருக்கோம். 16) உழவர்கள் தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். "எனவே", இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். 17) உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். "எனவே", இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். 18) பொங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் "வரை" கொண்டாடப்படுகிறது. 19) திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31 இல் பிறந்தவர். "எனவே". திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். 20) நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். "எனவே", நீ போட்டியில் கலந்துகொள் என்றார் அப்பா. 21) இவன், இவர், இது, இவை, இம்மரம் இவ்விடு இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. "எனவே", இஃது அண்மைச்சுட்டு எனப்படும். 22) நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். "அதனால்" இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. 23) அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். "அதுபோல" ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம். 24) கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். "எனவே", குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள். 25) கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். "எனவே", நாமும் கற்போம்: வளம்பெறுவோம். 26) உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். "அதனால்", இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகிறேன். 27) மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். "அதனால்" அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. 28) கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழைபெய்யும்போது நீரில் கரைந்துவிடுவதால் அமிலமழை பெய்கிறது. "இதனால்" மண், நீர், கட்டடங்கள், காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை துன்பத்துக்குள்ளாகின்றன. 29) நச்சுக் காற்று ஓசோன் படலத்தை ஓட்டையிடுகின்றது. "இதனால்" புறஊதாக் கதிர்கள் நேரடியாக உங்களைத் தாக்குகின்றன. 30) ஓசோன் படல ஒட்டையால் புறஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகின்றன. "இதனால்" ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் அடைகின்றன. 31) இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; "எனவே", அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது. 32) பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? "அதுபோல", இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்? 33) அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். "ஏனெனில்" அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. 34) உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். "எனவே" அதைப் போற்றிக் கற்க வேண்டும். 35) பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். "அதுபோல்" அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும். 36) அருமந்திரத்தை அனைவருக்கும் கூறினால், துன்பத்தில் உழன்று பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணி நீங்கி பேறு பெறுவார்கள். "இதனால்", நான் மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்று நரகத்தைச் சேர்வேன். "ஆனால்" என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். 37) பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும்! "அதனால்" வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது. 38) தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். "அதுபோல" நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும். 39) நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. "அதுபோல" மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். 40) தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். "அதுபோல" நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும். |
41) நீ படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க. "அதனால்" நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க. 42) ஆதினி 'யானை! யானை!' என்று மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். "பின்பு" அந்த யானைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். 43) புலி தனக்கான உணவை வேட்டையாடிய "பின்பு" வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. "எனவே", அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுகிறோம். 44) ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடையது. என்றும் அதை அசைக்க எவராலும் ஆகாதென்றும் அப்போது பொதுமக்கள் எண்ணியிருந்தார்கள். "அதனால்" அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நாட்டு மக்களிடையே வளர்ந்தது. 45) இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். "எனவே", இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர். 46) பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. "எனவே" கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். 47) அந்த விலங்கு எங்கள் கண்ணில் படவே இல்லை. "எனவே", கப்பல் எங்கள் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. 48) தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். "அதுபோல்" கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும். 49) மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு பாணர்களுக்குத் தந்தனர். "அதனால்" பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம். 50) நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். "அதுபோலவே" சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். 51) மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம். இடையில் "அதுபோல்" என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. 52) ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். "அதுபோல" செய்யும்போதே ஒரு செயலால் செயலைச் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும். 53) இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். "இதனால்" இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 54) பேச்சு மொழியில் சிந்திப்பதற்கான நேரம் குறைவு: திருத்திக்கொள்ள வாய்ப்பும் இல்லை. "எனவே" பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை. 55) தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. "எனவே" தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர். 56) ஒரு நாட்டின் வளம். அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. "அதனால்தான்" 'காட்டின் வளமே நாட்டின் வளம்' என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 57) சுரதா, பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். "எனவே" தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். 58) கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு "அல்லது" மூன்று குட்டிகள் ஈனும், அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். 59) புலி தனக்கான உணவை வேட்டையாடிய "பின்பு" வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. "எனவே", அதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுகின்றனர். 60) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே உயர்ந்தது. "எனவே" இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள். 61) மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். "அதனால்" அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 62) இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். "எனவே", இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர். 63) செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். "எனவே", செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். 64) "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்" என்றார். ஏன் அப்படிச் சொன்னார் பாரதி? "ஏனெனில்" கல்விக் கூடங்களில்தான் குழந்தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. 65) பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. "எனவே", இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும். 66) தொல்காப்பியம் கடற்பயணத்தைக் முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடுகிறது. "எனவே", தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம். 67) தானும் மரத்துண்டுகளைத் துடுப்புகளாகப் பயன்படுத்தத் தொடங்கினான். "பிறகு" மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின் மீது ஏறிப் பயணம் செய்தான் 68) பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. "எனவே" கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். 69) மனிதன் எதிர்காலத்தில் என்ன ஆவான் என்று சொல்லவே முடியாது. "அதனால்தான்" அஃது அருமையான பிறவி. 70) கத்தரிக்காய், வாழைக்காய், கீரை இவையெல்லாம் பூமிக்கு மேலே விளையும். சில மண்ணுக்குள்ளேயே உண்டாகி இருக்கும். அவற்றை நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும். "அதுபோல" நாம் படிக்கும் நூல்களில் சிலவற்றை ஒரு முறை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் அதன் பொருள் விளங்கும். 71) இளமைப்பருவம் கல்விக்கு உரியது. "எனவேதான்" "இளமையில் கல்" என்று ஔவையார் கூறினார். 72) ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். "அதனால்தான்" ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். 73) தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். "அதுபோல" கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும். 74) பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். "அதனால்" பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம். 75) கிராமத்தில் கூரை வீட்டிலும், "பின்பு" ஒட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். 76) பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார் "எனவே", அவர் "புதுக்கவிதையின் தந்தை' என்று போற்றப்படுகிறார். 77) உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். "ஏனெனில்", வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது. 78) சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. "அதனால்" வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. 79) மொழியின் மேன்மையும் எழுத்துகளின் பெருமையும் அவை எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. "எனவே", காலவளர்ச்சிக்கேற்பத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்கத் தயங்கக் கூடாது என்று பெரியார் கருதினார். 80) அக்காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டிருந்தனர். "எனவே", நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார். 81) தமிழ்நாட்டில் இருசக்கர ஊர்திகள் 50 கி.மீ. வேகத்திலும், நான்கு சக்கர ஊர்திகள் 60 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்பது பொது விதி "எனினும்" பள்ளிகள், மருத்துவமனைகள். பெருஞ்சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் போன்ற ஊர்ப்பகுதிகள், மலைப் பாதைகள், நெடுஞ்சாலைகள். பாலங்கள் ஆகியவற்றில் வேகக்கட்டுப்பாட்டில் செல்லவேண்டிய இடங்களையும் வேக அளவையும் காட்டும் குறியீடுகள் இருக்கும். 82) வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டுபோவதும் பொருள் வாங்கிவருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது. "இருப்பினும்", இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது. 83) பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும் "அதனால்" வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது. 84) சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடனும் மிகுந்த தேர்ச்சியுடனும் சிற்பிகள் சிற்பங்களை வடிவமைக்கின்றனர். "அதனால்", அவர்களைக் "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கின்றனர். 85) குட்டி இளைப்பாற எங்கும் நிழலில்லை. "எனவே" கடும் வெயிலில் தான் துன்புற்று நின்று, தனது நிழலில் குட்டியை இளைப்பாறச் செய்தது. 86) தூய ஒழுக்கமுறையைப் பின்பற்றுபவர்கள். பசித்துயரால் துன்புறுவோரைக் கண்டு வருந்துவார்கள். "அதுபோலத்" தான் வாழும் இடமானது மூழ்குமாறு பெரும் கடலலை புகுந்து விட்டாலும், மலையளவுக்குப் பவளங்களையும் நல்இயல்பு தோன்றும் ஒளி முத்துகளையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பர். 87) பெரும் மழை பெய்தது. "அதனால்" வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 88) வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. "எனவே" பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. 89) பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். "எனவே", அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது. 90) கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. "அதுபோல" கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். 91) பாத்தி அமைத்து விதை விதைக்காமலே. தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. "அதைப் போலவே" மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர். 92) ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகிறது. "அதுபோலச்" சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. 93) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. "அதுபோல", ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன. 94) அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச்சமூகம். "எனவே" அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். 95) நாம் வாழும் தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. "எனவே", நீர் சார்ந்த தன்னுணர்ச்சி தமிழக மக்களுக்கு மிகுதி. 96) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். "அதனால்" அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்தன. 97) நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாக உடையது. "எனவே" உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். 98) நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. "அதனால்", நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக. 97) நீர் அதிகம் தேவைப்படும் உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். "இதனால்" நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும். 98) எவராலும் அடக்க முடியாத காளைகளும் உண்டு. "எனவே", காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். 99) திருக்குறள் "இதுவரை" நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 100) எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. "ஏனெனில்" இதுவே எமக்குத் தாயாகும். 101) நாங்கள் மனநிறைவுடன் வாழ எங்களுக்கென்று தனியிடம் ஒதுக்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். "எனவே", அவர் எங்களுக்குத் தந்தையாகவும் நாங்கள் அவருக்குப் பிள்ளையாகவும் ஆகிறோம். "எனினும்", இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இதற்குச் சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும். 102) இப்பூமியின் மீது எது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவேயாகும். "மேலும்", இப்பூமியின் மீது மக்கள் துப்பக்கூடுமானால் அஃது அவர்கள் தம் தாய் மீது ஒப்புவதற்கு ஒப்பானதாகும். 103) கேள்விக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்த பொழுது, கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. "எனவே", உடனே வாயை மூடிக்கொண்டது. 104) பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். "அதுபோல" நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும். 105) நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. "அதுபோல" மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். 106) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். "எனவே", நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! 107) எல்லா நாடுகளிலும் இருக்கும் மரபுசார்ந்த மருத்துவ முறைகளின் மீது, நவீன அறிவியல் பார்வை விழத் தொடங்கியது. "அதனால்", சித்த மருத்துவத்தின் தொன்மையும் தமிழர்களின் தொன்மையும் புரிய ஆரம்பித்தன. 108) சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும். "அதனால்", உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. 109) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. "அதுபோலக்" கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். 110) திருக்குறள், எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல் "எனவே" திருக்குறளில்லாத வீடும் இருக்கக் கூடாது! திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது. 111) எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர்வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது. "எனவே", இந்தப்போரைத் தவிர்த்தால் என்ன? 112) இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். "இதனால்" இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 113) வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. "எனவே" இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும். 114) நல்ல பாடங்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். "அதுபோல" சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். 115) இளங்கோ தந்த சிலம்பு. தமிழினத்தின் பொதுச்சொத்து, "எனவேதான்" தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம். 116) மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம். மகாபாரதம். அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. "இதனால்" இவர்கள் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம். 117) பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைகொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் அயோத்திதாசரே. "என்வே", அவரை அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர். 118) தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். "அதுபோல" நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும். 119) மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். "இதனால்", பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார். 120) நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. "எனவே" இது வேற்றுமை அணி ஆகும் 121) மூளைக்கு அத்தனை ஆற்றல் தேவைதான். தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க அதற்கு இடமும் இல்லை. அதனால் அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். |
minnal vega kanitham