Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 9

0
8th - மக்களின் புரட்சி
1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன? 1757.
2) ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரால் ஏற்பட்டது? பூலித்தேவர்.
3) எந்த அரசு தனது மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தது? விஜய நகர அரசு.
4) தமிழ்நாட்டில் பாளையக்காரரை நியமித்தவர்கள் யார்? மதுரை நாயக்கர்கள்.
5) விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு நாயக்கர் ஆனார்? 1529.
6) விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்? அரியநாதர்.
7) தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1529.
8) நாடு மொத்தம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டது? 72.
பாளையக்காரர்கள் வசூலிக்கப்பட்ட வரி:
I) வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்கும்.
II) அடுத்த மூன்றில் ஒரு பங்கு இராணுவ செலவிற்கும்.
III) மீதியை தங்களின் சொந்த செலவிற்கு பயன்படுத்தினர்.
9) தமிழ்நாட்டில் பாளையக்காரர் எந்த நூற்றாண்டில் முக்கிய பங்கு வகித்தனர்? 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு.
10) பாளையக்கார்ர்களிடையே எத்தனை பாளையங்கள் இருந்தன? இரண்டு (கிழக்கு, மேற்கு)
11) கிழக்கு பாளையங்களை ஆட்சி செய்தவர்கள் யார்? நயக்கர்கள்.
12) கிழக்கு பாளையக்காரர்கள் யாருடைய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்தனர்? கட்டபொம்மன்.
13) மேற்கு பாளையங்களில் இருந்தவர்கள் யார்? மறவர்கள்.
14) மேற்கு பாளையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? பூலித்தேவர்.
15) பாளையகார்ர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் புரட்சி எதனால் ஏற்பட்டது? கப்பம் கட்ட மறுத்ததால்.
16) கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1792.
17) இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்? பூலித்தேவர்.
18) பூலித்தேவர் எந்தப் பகுதியின் பாளையக்கார்ர் ஆவார்? திருநெல்வேலி அருகே இருந்த நெற்கட்டும்செவல்.
19) பூலித்தேவர் யாருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்க்க தொடங்கினார்? ஆற்காடு நவாப் முகமது அலி.
20) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் யாரைத் தாக்கின? பூலித்தேவர்.
21) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரால் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்? திருநெல்வேலியில்.
22) இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்? பூலித்தேவர்.
23) யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலை தாக்கிய ஆண்டு? 1759.
24) யூசுப்கான் படையினால் பூலித்தேவர் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டார்? அந்தநல்லூர்.
25) ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு? 1761.
26) பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கைக்கு பின் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு என்ன? 1764.
27) கேப்டன் கேம்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1767.
28) கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? ஆந்திரா.
29) கட்டபொம்மனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நூற்றாண்டில் குடிபெயர்ந்தனர்? 11ஆம் நூற்றாண்டு.
30) பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் யார்? ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
31) ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது? வீரபாண்டியபுரம்.
32) ஜெகவீரபாண்டியனின் மகன் யார்? வீரபாண்டிய கட்டபொம்மன்.
33) வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி யார்? ஜக்கம்மாள்.
34) வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்? ஊமைத்துரை, செவத்தையா
35) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குபின் தெற்கில் தங்கள் மேலாண்மையை நிறுவியவர்கள் யார்? முகலாயர்கள்.
36) கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநியாக செயல்பட்டார்.
37) பாஞ்சாலங்குறிச்சி பாளையம் யாருடைய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருந்தது? ஆற்காடு நவாப்.
38) எந்த உடன்படிக்கையின்படி கம்பெனி பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றது? கர்நாடகா உடன்படிக்கை 1792.
39) இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் எந்த ஆண்டு கட்டபொம்மனை நிலுவைத் தொகை செலுத்த சொல்லி கடிதம் எழுதனார்? 1798.
40) கலெக்டர் ஜாக்சனுக்கு கட்டபொம்மன் எழுதிய பதில் கடிதம் என்ன? "பஞ்சத்தின் காரணமாக நிலுவையைச் செலுத்தும் சூழ்நிலையில் இல்லை".
41) 1798 இல் கட்டபொம்மன் யாருடன் சென்று இராமநாதபுரத்தில் கலெக்டர் ஜாக்சனை சந்தித்தார்? அமைச்சர் சிவசுப்பிரமணியம்.
42) கட்டபொம்மன் எவ்வளவு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினார்? 1080 பகோடா நீங்கலாக.
43) கட்டபொம்மனும், சிவசுப்பிரமணியமும் ஜாக்சன் முன்பு எவ்வளவு நேரம் நிற்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்? 3 மணிநேரம்.
44) ஜாக்சனால் சிறை பிடிக்கப்பட்ட கட்டபொம்மனை தப்பிக்க உதவி செய்தவர் யார்? ஊமைத்துரை.
45) இறுதியில் சிறை பிடிக்கப்பட்டவர் யார்? சிவசுப்பிரமணியம்.
46) பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்துகொண்டதை யாருக்கு கடிதம் மூலம் தெரிவுபடுத்தினார்? சென்னைக் கவுன்சில்.
47) கட்டபொம்மனின் கடிதத்தைக் கண்ட சென்னை கவுன்சில் ஜாக்சனை பதவி நீக்கி யாரை இராமநாதபுர கலெக்டராக நியமிக்கப்பட்டது? எஸ்.ஆர். லூஷிங்டன்.
48) சென்னை கவுன்சிலின் கவர்னர் யார்? எட்வர்டு கிளைவ்.
49) "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள்" கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
50) "திருச்சிராப்பள்ளி பிரகடத்தை" வெளியிட்டவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
51) தென்னிந்திய கூட்டமைப்பில் இணைய மறுத்த பாளையம் எது? சிவகிரி பாளையம்.
52) 1799 செப்டம்பர் 05 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையை அனுப்பி வைத்த ஆங்கிலேயர் யார்? மேஜர் பானர்மேன்.
53) சிவசுப்பிரமணியம் எங்கு நடைபெற்ற சண்டையில் கைது செய்யப்பட்டார்? கள்ளர்பட்டி.
54) கட்டபொம்மன் எங்கு தப்பித்துச் சென்றார்? புதுக்கோட்டை
55) களப்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மனை காட்டிக்கொடுத்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்? ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
56) பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கம்பெனியின் கைவசம் வந்த பிறகு மேஜர பான்ர்மேன் கைதிகளை என்ன செய்தார்? மாதண்டனை வழங்கினார்.
57) சிவசுப்பிரமணியம் எந்த இடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்? நாகலாபுரம்.
58) 1799 அக்டோபர் 16 ஆம் நாள் கட்டபொம்மன் பாளையக்காரர் அவையின் முன் விசாரிக்கப்பட்டார். 
59) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு (1799 அக்டோபர் 17)
60) சிவகங்கையின் ராணி வேலுநாச்சியார் எந்த வயதில் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார்? 16 ஆம் வயதில்.
61) ஆற்காடு நவாப் படைகள் எந்த ஆண்டு சிவகங்கையை தாக்கியது? 1772.
62) முத்துவடுகநாதர் எங்கு நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்? காளையார்கோவில் (1772).
63) வேலுநாச்சியார்-முத்துவடுகநாதர் தம்பதியருக்கு பிறந்த பெண் மகள் யார்? வெள்ளச்சி நாச்சியார்.
64) வேலுநாச்சியார் தனது பெண்மகளுடன் யாருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்? திண்டுக்கல்-விருபாட்சியில் கோபாலநாயக்கர்.
65) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி யார்? குயிலி.
66) வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்க்க உதவி புரிந்தவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
67) இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி யார்? வேலுநாச்சியார்.
68) வேலுநாச்சியார் தமிழர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? "வீரமங்கை", "தென்னிந்தியாவின் ஜான்சிராணி".
69) பொன்னாத்தாள்-மூக்கைய்யா பழனியப்பன் ஆகியோரின் புதல்வர்கள் யார்? மருது சகோதரர்கள்.
70) மருது சகோதரர்களில் மூத்தவர் யார்? பெரிய மருது (வெள்ளை மருது)
71) மருது சகோதரர்களில் இளையவர் யார்? சின்ன மருது (மருது பாண்டியன்)
72) சின்ன மருது யாரிடம் பணிபுரிந்தார்? முத்துவடுக நாத பெரிய உடையத்தேவர்.
73) சிவகங்கை மீண்டும் கைப்பற்றப்பட்டு அரசராக பொறுப்பேற்றவர் யார்? பெரிய மருது.
74) பெரிய மருதுவிற்கு ஆலோசகராக இருந்தவர் யார்? சின்ன மருது.
75) "சிவகங்கை சிங்கம்" யார்? சின்ன மருது.
76) மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்ற மோதலுக்கான 
காரணங்கள்:
I) கட்டபொம்மனின் இறப்பிற்கு பின் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் சிவகங்கைக்குத் தப்பித்தனர்.
II) சிவகங்கையில் மருது சகோதரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.
III) சிவகங்கை வியாபாரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை.
77) எந்த ஆண்டு கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் சிறையிலிருந்து தப்பித்து கமுதியை வந்தடைந்தனர்? 1801 பிப்ரவரி.
78) சிறையிலிருந்து தப்பித்த ஊமைத்துரையும், செவத்தையாவையும் சின்ன மருது எங்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்? சிறுவயல்.
79) கட்டபொம்மனின் சகோதரர்கள் மீண்டும் புனரமைத்த கோட்டை எது? பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
80) மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கிய ஆங்கில படை எது? காலின் மெக்காலே.
81) மருது சகோதரர்களுக்கு எதிராக படைநடத்தி சென்றவர்கள் யார்? கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ்.
82) தென்னிந்திய கூட்டமைப்பில் இருந்தவர்கள் யாவர்:
I) சிவகங்கையின் மருது சகோதரர்கள்.
II) திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்.
III) மலபாரின் கேரளவர்மன்.
IV) மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர்.
V) துண்டாஜி.
83) "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" அல்லது "சுதந்திர பிரகடனம்" அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1801 ஜீன்.
84) ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது எது? திருச்சிராப்பள்ளி பிரகடனம்.
85) திருச்சிராப்பள்ளி பிரகடனம் எங்கெங்கு ஒட்டப்பட்டது?
I) ஆற்காடு நவாப்பின் அரண்மனையான திருச்சி கோட்டை சுவரிலும்.
II) ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது.
86) ஆங்கிலேயரை எதிர்த்து போரிட மருது சகோதரர்களிடம் இருந்த வீரர்கள் எத்தனை பேர்? 20000 பேர்.
87) ஆங்கிலேய படைகளுக்கு வலுவூட்ட எந்தப் பகுதியிலிருந்து படைகளை வரவழைத்தனர்? இலங்கை, மலேயா.
88) புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசர்கள் யாருக்கு ஆதரவு அளித்தனர்? ஆங்கிலேயர்களுக்கு.
89) பாளையக்கார்ர்களின் படைகளில் பிளவை ஏற்படுத்தியது எது? ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை.
90) 1801 இல் ஆங்கிலேயர்கள் எந்தப் பகுதியை தாக்கினர்? தஞ்சாவூர், திருச்சி.
91) கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பயந்து எப்பகுதிக்குச் சென்றனர்? பிரான்மலை, காளையார் கோயில்.
92) தென்னிந்திய கிளர்ச்சியில் வென்றவர்கள் யார்? ஆங்கிலேயர்கள்.
93) சிவகங்கையை மருது சகோதர்ர்கள் இணைத்துக் கொண்டது எந்த ஆண்டு? 1801.
94) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? இராமநாதபுரம் திருப்பத்தூர் கோட்டை
95) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் எது? அக்டோபர் 24, 1801.
96) ஊமைத்துரை, செவத்தையா தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நாள் எது? பாஞ்சாலங்குறிச்சி? 1801 நவம்பர் 16.
97) கிளர்ச்சியாளர்களில் எத்தனை பேர் மலேயாவில் உள்ள பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர்? 73 பேர்.
98) பினாங் தீவு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வேல்ஸ் இளவரசர் தீவு.
99) ஆங்கிலேய ஆவணங்களில் "இரண்டாவது பாளையக்காரர் போர்" எனக் குறிப்பிடப்படும் போர் எது? தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801)
100) கர்நாடக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட நாள் எது? 1801 ஜீலை 31.
101) தீரன் சின்னமலை பிறந்த ஊர்? ஈரோடு சென்னிமலை (மேலப்பாளையம்).
102) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் யார்? தீரன் சின்னமலை.
103) கொங்கு நாடு: சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர்.
104) கொங்கு பகுதி யாரால் இணைக்கப்பட்டது? மைசூர் உடையார்களால்.
105) மைசூர் உடையார்கள் வீழ்ந்த பிறகு அப்பகுதி யாரால் ஆளப்பட்டது? மைசூர் சுல்தான்கள்.
106) தீரன் சின்னமலை எந்த இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார்? பிரெஞ்சு.
107) திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிரேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றவர் யார்? தீரன் சின்னமலை.
108) தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்க்க கோட்டை கட்டிய இடம் எது? ஓடாநிலை.
109) தீரன் சின்னமலை எப்பகுதிகளில் கொரில்லா போர் முறையைப் பின்பற்றி ஆங்கிலேயர்களை தோற்கடித்தார்? காவேரி, ஓடாநிலை, அரச்சலூர்.
110) இறுதி போரின் போது தீரன் சின்னமலையை காட்டிக் கொடுத்தவர் யார்? அவரின் சமையற்காரர் நல்லப்பன்.
111) தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்? 1805 சங்ககிரி கோட்டை
112) நான்காம் மைசூர் போருக்கு பின் திப்புவின் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டனர்? வேலூர் கோட்டை
113) ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் எங்கு இடம்பெயர்ந்தனர்? வேலூர்.
114) 1803 இல் சென்னை மாகாண கவர்னர் யார்? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
115) யாருடைய காலத்தில் இராணுவத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
116) 1803 ல் சென்னை மாகாண படைத்தளபதி யார்? சர் ஜான் கிடராக்.
117) வேலூர் புரட்சிக்கான காரணங்கள்:
I) புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் சிப்பாய்களுக்கு அறிமுகம்.
II) தாடி, மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
III) சமய அடையாளத்தை நெற்றியில் இடுதல், காதுகளில் வளையம் அணிதல் ஆகியவை தடை செய்யப்பட்டன.
IV) ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை தாழ்வாகவும், இன பாரட்சமும் காட்டி நடத்தினர்.
118) வேலூர் புரட்சிக்கான உடனடிக் காரணங்கள்:
I) ஜீன் 1806 இல் இராணுவத் தளபதி அக்னியூ தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.
II) "அக்னியூ தலைப்பாகை" எனப்பட்டது.
III) இந்து முஸ்லீம் வீரர்கள் இதனை ஒன்றாக எதிர்த்தனர்.
IV) இதனால் ஆங்கிலேயர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
119) திப்புவின் மூத்த மகன் யார்? பதே ஹைதர்.
120) வேலூர் புரட்சியை தொடங்கியவர்கள் யாவர்? 1 வது மற்றும 23 வது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள்.
121) ஆங்கிலேய படையை வழிநடத்தியவர் யார்? கர்னல் பான்கோர்ட்.
122) திப்புவின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் என்ன? புலி.
123) கிளர்ச்சியாளர்கள் யாரை புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்? பதே ஹைதர்.
124) கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் கூட்ஸ்.
125) வேலூர் கிளர்ச்சியை அடக்கிய ஆங்கில தளபதி யார்? கர்னல் கில்லெஸ்பி.
126) வேலூர் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை? மொத்தம் 113 பேர். (ஐரோப்பியர்கள்&300 சிப்பாய்கள்).
127) வேலூர் கலகத்தின் விளைவுகள்:
I) புதிய முறைகள்.
II) சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
III) வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
128) புரட்சிக்கு பிறகு திப்புவின் குடும்பம் எங்கு அனுப்பப்பட்டனர்? கல்கத்தா.
129) வேலூர் கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:
I) இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
II) கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
III) ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
130) 1806 இல் நடந்த வேலூர் கலக்ம் 1857 இல் நடைபெற்ற "முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி" என்று கூறியவர் யார்? வி.டி. சவார்க்கர்.
131) 1857 புரட்சிக்கான காரணங்கள்:
I) ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் கெள்கை.
II) வாரிசு இழப்புக் கொள்கை.
III) துணைப்படைத் திட்டம்.
IV) நாடு இணைக்கும் கொள்கை.
V) கிறிஸ்துவ சமய பரப்பாளர்களின் மத மாற்ற கொள்கை.
VI) சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் ஒழிப்பு நடவடிக்க்கைள் இந்திய கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதினார்.
VII) ஆங்கிலேய சிப்பாய்களைக் காட்டிலும் இந்திய சிப்பாய்கள் குறைவான ஊதியமே பெற்றனர்.
132) பெரும்புரட்சிக்கான உடனடிக் காரணம்:
I) இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி.
II) குண்டுகளின் மேலுறை பசுவின் கொப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
III) இந்துக்கள் பசுவை புனிதமாக கருதினர்.
IV) முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்கள்.
133) புரட்சியின் முதல் பொறி எங்கு தொடங்கப்பட்டது? 1857 மார்ச் 29 பாரக்பூர்.
134) புரட்சியை தொடங்கி வைத்தவர் யார்? மங்கள் பாண்டே. (இவர் கொழுப்பு தடவிய துப்பாக்கியை தொட மறுத்து தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்றார்)
135) 1857 ஆம் ஆண்ட மே 10 ஆம் நாள் புரட்சி எங்கு வெடித்தது? மீரட்.
136) மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சக படைவீரர்களை விடுவித்தன் மூலம், வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
137) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாருடன் இணைந்தனர்? 11 வது மற்றும் 20 வது உள்ளூர் காலாட்படை.
138) டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் மே 11 ஆம் நாள் யாரை இந்தியாவின் பேர்ரசராக அறிவித்தனர்? இரண்டாம் பகதூர்ஷா.
139) புரட்சி பரவிய இடங்கள்? லக்னோ, கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத்.
140) ஆங்கிலப் படை குவாலியரை எப்போது கைப்பற்றியது? 1858 ஜீன்.
141) மத்திய இந்தியாவில் புரட்சி வழிநடத்திய பெண்மணி யார்? ராணி லட்சுமிபாய்.
142) புரட்சியை உடனடியாக அடக்க முயற்சி எடுத்தவர் யார்? கானிங் பிரபு.
143) கானிங் பிரபு புரட்சியை அடக்க படைகளை எங்கிருந்து வரவழைத்தார்? இலங்கை, சென்னை, பம்பாய்.
144) டெல்லி மீண்டும் யாரால் கைப்பற்றப்பட்டது? 1857 செப்டம்பர் 20 இல் நிக்கல்சன்.
145) இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்? ரங்கூன்.
146) இரண்டான் பகதூர்ஷா இறந்த ஆண்டு? 1862.
147) கான்பூரை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி யார்? சர் காலின் கேம்பெல்.
148) கான்பூரில் புரட்சியை வழி நடத்தி சென்றவர் யார்? நானாசாகிப்.
149) நானாசாகிப் எங்கு தப்பியோடினார்? நேபாளம்.
150) கலகம் பற்றியவை:
கலகம் நடைபெற்ற இடங்கள் இந்திய தலைவர்கள் கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள்
டெல்லி இரண்டாம் பகதூர்ஷா ஜான் நிக்கல்சன்
லக்னோ பேகம் ஹஸ்ரத் மகால் ஹென்றி லாரன்ஸ்
கான்பூர் நானாசாகிப் சர் காலின் கேம்பெல்
ஜான்சி&குவாலியர் ராணி லட்சுமிபாய், தாந்தியா தோப் ஜெனரல் ஹக்ரோஸ்
பரெய்லி கான் பகதூர் கான் சர் காலின் கேம்பெல்
பீகார் கன்வர் சிங் வில்லியம் டைலர்

151) பெருங்கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:
I) சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லை.
II) கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை.
III) வங்காளம், பம்பாய், சென்னை. மேற்கு பஞ்சாப், இராஜபுதனம் புரட்சியில் கலந்துகொள்ளவில்லை.
IV) நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
V) சீக்கியர்கள், ஆப்கானியர்கள், கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் ஆதரவை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
152) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? 1858.
153) கவர்னர்-ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டது? வைசிராய்.
154) இயக்குநர் குழு மற்றும கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் எத்தனை பேர் கொண்ட சபை அமைக்கப்பட்டது? 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சில்.
155) ஆங்கில இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்திய கொள்கை எது? "பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல்".
156) நவீன இந்திய இயக்கம் தோன்ற வழிவகுத்த போர் எது? 1857 பெரும்புரட்சி.
157) "முதல் இந்திய சுதந்திரபோர்" என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு புரட்சியை எவ்வாறு குறிப்பிட்டிருந்தார்? "ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்" எனக் குறிப்பிட்டார்.

10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

1) நெற்கட்டும்செவலில் ஆட்சிப்புரிந்த மன்னர் யார்? பூலித்தேவர்.
2) "பாளையக்காரர் போர்" எந்தப் புரட்சிக்கு வழி வகுத்தது? 1806 வேலூர் புரட்சி.
3) ஒரு பகுதியையோ, ஒரு இராணுவ முகாமையோ அல்லது ஒரு சிற்றரசையோ குறிப்பது? பாளையக்காரர் முறை.
4) பாளையக்காரர்களை ஆங்கிலேயர்களை எவ்வாறு அழைத்தனர்? போலிக்கார்.
5) பாளையக்காரர் முறை யாருடைய அரசில் முதலில் ஏற்படுத்தப்பட்டது? பிரதாபருத்ரன் (காகதீய அரசு-வாரங்கல்).
6) யாருடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்டது? விஸ்வநாத நாயக்கர்.
7) எந்த ஆண்டு தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை அறிமுகம் செய்யப்பட்டது? 1529.
8) நாயக்கர் காலத்தில் எத்தனை பாளையங்கள் தமிழ்நாட்டில் இருந்தன? 72.
9) பாளையக்காரர்களில் காவல் காக்கும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? "படிக்காவல்", "அரசுக்காவல்".
10) கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள் யாவை? சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி.
11) மேற்கில் அமையப்பெற்ற பாளையங்கள் யாவை? ஊத்துமலை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர்.
12) பூலித்தேவரின் ஆட்சியின் காலம்? 1755-1767.
13) கர்னங்ல ஹெரான் தலைமையிலான கம்பெனியின் படை ஒன்றை அழைத்துக்கொண்டு மார்ச் 1755 இல் மாபூஸ்கான் எங்கு சென்றார்? திருநெல்வேலிக்கு.
14) பூலித்தேவரை அடக்கப் முதலில் பணிக்கப்பட்ட ஆங்கிலேயர் யார்? கர்னல் ஹெரான்.
15) மதுரை மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் பொறுப்பு வகித்த நவாப் சந்தாசாகிப்பின் முகவர்கள் யாவர்? மியானா, முடிமையா, நபீகான் கட்டாக்.
16) சந்தாகாகிப்பின் முகவர்கள் யாருக்கு ஆதரவு வழக்கினர்? மேற்கு பாளையக்காரர்கள்.
17) பூலித்தேவருக்கு ஆதரவு வழங்காத பாளையம் எது? சிவகிரிப் பாளையம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.
18) பூலித்தேவருக்கு எதிராக போர் புரிய ஆங்கிலேயர்கள் யாருடைய ஆதரவைப் பெற்றனர்? இராமநாதபுரம் & புதுக்கோட்டை மன்னர்கள்.
19) களக்காடு போர் யார் யாருக்கும் நடைபெற்றது? பூலித்தேவர் மற்றும் மாபூஸ்கான்.
20) களக்காடு போரில் பூலித்தேவரிடம் இருந்த வீரர்கள் எத்தனைப் பேர்? திருவிதாங்கூரை சேர்ந்த 2000 வீரர்கள்.
21) களக்காடு போரில் யார் வெற்றி பெற்றது? பூலித்தேவர்.
22) யூசுப்கான் என்பவரின் மறபெயர்கள் என்ன? "கான்சாகிப்", "மருதநாயகம்".
23) யூசுப்கான் நெற்கட்டும்செவல் கோட்டையை எத்தனை மாதங்கள் முற்றுயையிட்டார்? 2 மாதங்கள்.
24) யூசுப்கானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பகுதிகள் யாவை? நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், பனையூர்.
25) கம்பெனியின் நிர்வாகத்திற்கு முறையாக தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கானை நம்பிக்கை துரோகம் குற்றம் சுமத்தப்பட்டு எப்போது தூக்கிலிட்டனர்? 1764 ஆம் ஆண்டு.
26) பூலித்தேவர் கான்சாகிப்பின் இறப்பிற்கு பின் மீண்டும் எப்போது நெற்கட்டும் செவலை மீட்டார்? 1764.
27) 1787 இல் புலித்தேவர் யாரால் தோற்கடிக்கப்பட்டார்? கேப்டன் கேம்பெல்.
28) பூலித்தேவரின் படைப்பிரிவுகளுள் ஒன்றனுக்கு தலைமைத் தாங்கியவர் யார்? ஒண்டிவீரன்.
29) வேலுநாச்சியாரின் காலம்? 1730-1796.
30) செல்லமுத்து சேதுபதி அரசக் குடும்பத்தின் பெண் வாரிசு யார்? வேலுநாச்சியார்.
31) வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு? 1730.
32) செல்லமுத்து சேதுபதி எந்தப் பகுதியின் அரசர்? இராமநாதபுரம்.
33) வேலுநாச்சியாருக்கு தெரிந்திருந்த மொழிகள் யாவை? ஆங்கிலம், பிரெஞ்சு, உருது.
34) வேலுநாச்சியார் எந்தெந்த பிரிவுகளில் திறமையாக இருந்தார்? குதிரையேற்றம், வில்வித்தை, வளரி, சிலம்பம்.
35) சிவகங்கை மன்னரான முத்துவடுகநாதரை வேலுநாச்சியார் திருமணம் செய்து கொண்ட ஆண்டு? 16 வது வயதில்.
36) முத்துவடுகநாதர் மற்றும் வேலுநாச்சியாருக்கு பிறந்த பெண் மகள் யார்? வெள்ளச்சி நாச்சியார்.
37) 1772 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபும், லெப்டினென்ட் கர்னல் பான் ஜோரும் எந்தப் பகுதியைத் தாக்கினர்? காளையார்கோவில்.
38) முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்? காளையார்கோவில்.
39) முத்துவடுகநாதரின் இறப்பிற்கு பின்பு வேலுநாச்சியார் எங்கு யாருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்? திண்டுக்கல் (விருபாட்சி) - கோபால நாயக்கர் (8 ஆண்டுகள்).
40) வேலுநாச்சியார் ஒரு படைப்பிரிவை உருவாக்கி யார் யாரிடம் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்? ஹைதர்அலி, கோபால நாயக்கர்.
41) வேலுநாச்சியாரின் தளவாய் (இராணுவத்தலைவர்) யார்? தாண்டவராயர்.
42) ஹைதர் அலி வேலுநாச்சியாருக்கு எவ்வளவு குதிரைப்படைகளை அனுப்பி வைத்தார்? 5000 காலட்படை, 5000 குதிரைப்படைகள்.
43) வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் எம்மொழியில் பேசினார்? உருது.
44) திண்டுக்கல் கூட்டமைப்பில் இருந்தவர்கள் யார்?
I) தலைவர் கோபால நாயக்கர்.
II) மணப்பாறையின் லெட்சுமி நாயக்கர்.
II) தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கர்
45) திண்டுக்கல்லில் இருந்த ஹைதர் அலியின் படைத்தலைவர் யார்? சையது.
46) சிவகங்கையை வேலுநாச்சியார் யாருடைய உதவியோடு மீட்டெடுத்தார்? கோபால நாயக்கர், ஹைதர் அலி.
47) வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் முடி சூட்டிக்கொண்டார்? மருது சகோதரர்கள்.
48) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழி யார்? குயிலி.
49) "உடையாள்" என்ற பெண்கள் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தி சென்றவர் யார்? குயிலி.
50) குயிலி தனக்குத்தானே நெருப்பை வைத்துக்கொண்டு ஆங்கிலேய ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்த ஆண்டு? 1780.
51) கட்டபொம்மனின் தந்தை யார்? ஜெகவீரபாண்டியன்.
52) கட்டபொம்மன் எந்த வயதில் பாஞ்சாலஞ்குறிச்சியின் பாளையக்காரராகப் பெறுப்பேற்றார்? 30 வது வயதில்.
53) கட்டபொம்மனின் ஆட்சிக் காலத்தில் இருந்த கம்பெனி நிர்வாகிகள் யார்? ஜேம்ஸ் லண்டன், காலின் ஜாக்சன்.
54) கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798 ஆம் ஆண்டு வாக்கில் எவ்வளவு இருந்தது? 3310 பகோடாக்கள்.
55) ஜாக்சன் கட்டபொம்மனை இராமநாதபுரத்தில் எந்த நாள் சந்திக்க கூறினார்? 1798 ஆகஸ்ட் 18.
56) கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்ட இடங்களில் ஜாக்சன் சந்திக்க மறுத்த இடங்கள் எவை? குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
57) கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த ஆண்டு? 1798 செப்டம்பர் 19.
58) ஜாக்சனின் முன்பு கட்டபொம்மன் எத்தனை மணிநேரம் நிற்க வைக்கப்பட்டார்? மூன்று.
59) கட்டபொம்மனின் அமைச்சர் யார்? சிவசுப்ரமணியனார்.
60) கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்? ஊமைத்துரை, செவத்தையா.
61) இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர் யார்? லெப்டினென்ட் கிளார்க்.
62) மதராஸ் ஆட்சிக்குழு கட்டபொம்மனை எவர்கள் முன்னிலையில் ஆஜராகும்படி உத்தரவிட்டது?
I) வில்லியம் ப்ரௌன்.
II) வில்லியன் ஓரம்.
III) ஜான் காஸாமேஜர்.
63) கட்டபொம்மனை அவமானப்படுத்திய ஜாக்சனை பணி இடைநீக்கம் செய்தவர் யார்? எட்வர்ட் கிளைவ்.
64) 1798 டிசம்பர் 15 அன்று கட்டபொம்மன் ஆஜராகி நடந்தவற்றை கூறினார்.
65) இராமநாபுரத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் யார்? எஸ்.ஆர்.லூசிங்டன்.
66) கட்டபொம்மன் எவ்வளவு நிலுவைத் தொகை நீங்கலாக செலுத்தினார்? 1080 பகோடாக்கள் நீங்கலாக.
67) தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
68) தென்னிந்திய கூட்டமைப்பில் இருந்தவர்கள் யார்? திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், ஆனைமலை யதுல் நாயக்கர்.
69) 1799 இல் மதராஸ் கவர்னர் ஜெனரல் யார்? வெல்வெஸ்லி பிரபு.
70) திருச்சி, தஞ்சை, மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டவர் யார்? வெல்வெஸ்லி பிரபு.
71) திருநெல்வேலி நோக்கி சென்ற படைப்பிரிவுகளுக்கு தலைமையேற்றவர் யார்? மேஜர் பானெர்மேன்.
72) மீண்டும் கட்டபொம்மனை எப்பொழுது சரணடையச் செய்ய நிபந்தனை வழங்கப்பட்டது? 1799 செப்டம்பர் 1.
73) மேஜர் பானெர்மேன் யாரை தூதாக அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொன்னார்? இராமலிங்கர்.
74) சிவசுப்ரமணியனார் எங்கு நடைபெற்ற மோதலில் கைது செய்யப்பட்டார்? கள்ளர்பட்டி.
75) சிவசுப்ரமணியனார் தூக்கிலிடப்பட்ட ஆண்டு மற்றும் இடம்? நாகலாபுரம் & செப்டம்பர் 13.
76) கட்டபொம்மன் எங்கு தப்பித்துச் சென்றார்? புதுக்கோட்டை.
77) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நாள்? கயத்தாறு & 1799 அக்டோபர் 17.
78) பெரிய மருது எவ்வாறு அழைக்கப்பட்டார்? வெள்ளை மருது.
79) சிவகங்கை முத்துவடுகநாதரின் படைத் தளபதிகள் யார்? சின்ன மருது, பெரிய மருது.
80) மருது சகோதரர்கள் யாருடன் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர்? ஊமைத்துரை.
81) கட்டபொம்மனின் கலகம் எப்போது ஒடுக்கப்பட்டது? 1799.
82) பிரிட்டிஷாரின் குறிப்புகளில் "இரண்டாவது பாளையக்காரர் போர்" என்று குறிப்பிடப்படும் போர் எது? மருது சகோதரர்கள் கலகம்.
83) இரண்டாவது பாளைக்காரர் போரால் யாரால் வழி நடத்தப்பட்டது? 
I) மருது பாண்டியர்.
II) திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்.
III) மலபாரின் கேரள வர்மா.
IV) மைசூரின் கிருஷ்ணப்பா.
V) துண்டாஜி.
84) இரண்டாவது பாளையக்காரர் போர் எப்போது கிளர்தெழுந்தது? 1800 ல் விருபாட்சியில்.
85) 1800 இல் புரட்சி அதிவேகமாக பரவிய இடங்கள் யாவை? கோயம்புத்தூர், இராமநாதபுரம். மதுரை.
86) கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் 1801 இல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி எங்கு பதுங்கி வாழ்ந்தனர்? கமுதி.
87) மருது சகோதரர்கள் கட்டபொம்மனின் சகோதரர்களை கமுதியிலிருந்து எங்கு அழைத்து வந்தனர்? சிறுவயல்.
88) பாஞ்சாலங்குறிச்சியை மீண்டும் தாக்கிய பிரிட்டிஷ் படைத்தளபதி யார்? காலின் மெக்காலே.
89) பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யாரிடம் அடைக்கலம் கோரினர்? மருது சகோதரர்கள் (சிவகங்கை).
90) சிவகங்கை நோக்கி படையை நடத்தி சென்றவர்கள் யார்? கர்னல் அக்னியூ, கர்ணல் இன்னஸ்.
91) "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" வெளியிடப்பட்ட ஆண்டு? 1801 ஜீன்.
92) திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
93) பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவல் எது? திருச்சிராப்பள்ளி பிரகடணம்.
94) திருச்சிராப்பள்ளி பிரகடனம் எந்தெந்த பகுதியில் ஒட்டப்பட்டது? நவாபின் கோட்டையின் முன்சுவரிலும். ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும்.
95) ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது ஏறத்தாழ எவ்வளவு ஆட்களை ஒன்று திரட்டினார்? 20000.
96) பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்? புதுக்கோட்டை, எட்டையபுரம், தஞ்சை அரசர்கள்.
97) 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எந்தப் பகுதியில் இருந்த கலக்காரர்களை தாக்கினர்? தஞ்சை, திருச்சி.
98) கலகக்காரர்கள் எப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர்? காளையார் கோவில், பிரான்மலை.
99) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? திருப்பத்தூர் கோட்டை
100) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட ஆண்டு என்ன? 1801 அக்டோபர் 24.
101) ஊமைத்துரையும் செவத்தையாவும் எங்கு சொல்லப்பட்டனர்? பாஞ்சாலங்குறிச்சி.
102) ஊமைத்துரையும் செவத்தையாவும் இறந்த ஆண்டு? 1801 நவம்பர் 16.
103) கலக்காரர்களில் 73 பேர் சிறை பிடிக்கப்பட்டு எங்கு நாடு கடத்தப்பட்டனர்? மலேயா, பினாங்.
104) மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? "தென்னிந்தியப் புரட்சி".
105) "கர்நாடகா உடன்படிக்கை" செய்து கொள்ளப்பட்ட ஆண்டு? 1801 ஜீலை 31.
106) தீரன் சின்னமலை எவ்வாறு அழைக்கப்பட்டார்? தீர்த்தகிரி.
107) தீரன் சின்னமலை பிறந்த ஆண்டு? 1756.
108) தீர்த்தகிரி யாரிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கிக் கொண்டார்? திவான் முகமது அலி.
109) தீரன் சின்னமலை முகமது அலியிடம் கூறியது யாது? "சிவமலைக்கும். சென்னிமலைக்கும் இடையே இருந்த 'சின்னமலையே' வரிப்பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாக சுல்தானுக்கு சொல் என்று கூறினார்".
110) முகமது அலியின் படைகளும், தீரன் சின்னமலையின் படைகளும் எந்த இடத்தில் மோதிக் கொண்டன? நொய்யல் ஆற்றங்கரை.
111) திப்புவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய சின்னமலை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பகுதியின் பெயர் என்ன? "ஓடாநிலை".
112) தீரன் சின்னமலை ஆங்கிலேயரை அடக்க பின்பற்றிய முறை யாது? "கொரில்லா போர்முறை".
113) தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் எப்பகுதியில் சிறைவைத்தனர்? சங்ககிரி கோட்டை
114) தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் எது? சங்ககிரி கோட்டை.
115) தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட ஆண்டு என்ன? 1805 ஜீலை 31.
116) 1792 திப்புவுடன் ஏற்பட்ட போரின் முடிவின் கிழக்கிந்திய கம்பெனி பெற்ற இடங்கள்? சேலம், திண்டுக்கல்.
117) தஞ்சாவூரின் அரசர் அப்பகுதியின் இறையாண்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்த ஆண்டு? 1798.
118) வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு? 1806 ஜீலை 10.
119) வேலூர் புரட்சிக்கான காரணங்கள்?
I) குறைவான ஊதியம்.
II) பதவி உயர்வு மறுப்பு.
III) சமூக சமய நம்பிக்கைகளை ஆங்கிலேயர் அவமதிப்பது.
120) திப்புவின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்? வேலூர்.
121) ஆங்கிலேய-மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு? 1799.
122) வேலூர் புரட்சியின் இறுதி நிகழ்வு என்னவாக இருந்த்து? அந்நிய ஆட்சியை தூக்கி எறிவது.
123) வேலூர் புரட்சியின் இயக்க சக்தியாக இருந்த தலைமைத்தளபதி யார்? சர் ஜான் கிடராக்.
124) வேலூர் புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் யாவர்? முதல் மற்றும் 23 வது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள்.
125) கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்தவர் யார்? "கர்னல் பேன்கோர்ட்".
126) வேலூர் புரட்சியில் 23 வது படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
127) வேலூர் புரட்சியின் போது எத்தனை அதிகாரிகள் ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டனர்? 12 அதிகாரிகள்.
128) திப்பு சுல்தானின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் என்ன? புலி.
129) கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த யாருக்கு தகவல் தெரிவித்தார்? கர்னல் ஜில்லஸ்பிக்கு.
130) திப்பு சுல்தானின் மூத்த மகன் யார்? ஃபதே ஹைதர்.
131) கர்னல் ஜில்லஸ்பி கோட்டையை வந்தடைந்த நேரம்? காலை 9 மணி.
132) வாய்மொழி வாக்குமூலப்படி கோட்டையில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எண்ணூறு வீரர்கள்.
133) திருச்சிராப்பள்ளியிலும் வேலூரிலும் எத்தனை வீரர்கள் விசாரணையை எதிர்நோக்கி சிறையிலடைக்கப்பட்டார்கள்? அறுநூறு.
134) வேலூர் புரட்சியின் பின்விளைவுகள்:
I) நீதிமன்ற விசாரணைக்குப்பின் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ஆறு நபர்கள் பீரங்கியில் கட்டிய நிலையில் சுடப்பட்டனர்.
II) ஐந்து நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
III) எட்டு நபர்கள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
IV) கர்னல் ஜில்லஸ்பிக்கு 7000 பகோடாக்கள் வெகுமதியாக வழங்கப்பட்டது.
135) தலைமைத் தளபதி ஜான் கிரடாக்கும், உதவித் தளபதி அக்னியூவும், ஆளுநர் வில்லியம் பெண்டிங்கும் புரட்சி நடக்க காரணமானவர்கள் என்று கருதப்பட்டு அவர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டனர்.
136) திப்புவின் மகன்களை புரட்சிக்கு பின் எங்கு செல்ல உத்தரவிடப்பட்டது? கல்கத்தா.
137) வேலூர் புரட்சி தோல்வியுற காரணங்கள்:
I) வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை.
II) சமீபகால ஆய்வுகளின்படி புரட்சிக்கான ஏற்பாடுகளை 23 ஆம் படைப்பிரிவின் 2 ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1 ஆம் படைப்பிரிவின் 1 ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதாரர்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.
138) 1857 ஆம் ஆண்டு புரட்சியின் முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் கொண்டிருந்த புரட்சி எது? வேலூர் புரட்சி.
139) வேலூர் புரட்சி எதிரொலித்த பிற பகுதிகள் யாவை?
I) பெல்லாரி.
II) வாலாஜாபாத்.
III) ஹைதராபாத்.
IV) பெங்களூரு.
V) நந்திதுர்க்கம்.
VI) சங்கரிதுர்க்கம்.


11th - வரலாறு - ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள்

1) விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக எந்த பகுதி இருந்தது? மைசூர்.
2) உடையார் வம்சம்:
I) ராஜா உடையார் 1578 இல் அரியணை ஏறினார்.
II) 1610 இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு மாற்றப்பட்டது.
III) உடையார் வம்சத்தினரின் ஆட்சி 1760 வரை நீடித்தது.
IV) ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.
3) ஹைதர் அலியின் தந்தை பதே முகமது, கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக இருந்தவர் யார்? பௌஜ்தார்.
4) மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்ததால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன? பதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்).
5) 1760 ஆம் ஆண்டு ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக எங்கிருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டு சேர்ந்தார்? பாண்டிச்சேரி.
6) 1770 இல் நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட மைசூர் அரசர் யார்? நஞ்சராஜா.
7) ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை எந்தக் கொள்கை மூலம் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தொடர்ந்து அனுமதித்தார்? சுற்று வேலிக்கொள்கை.
8) மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்தியவர் யார் மற்றும் எந்த பகுதியைக் கைப்பற்றினார்? கர்னல் போர்டே (ம) மசூலிப்பட்டிணம்.
9) வட சர்க்கார் என அறியப்படும் மாவட்டங்கள் எவை? கஞ்சம், விசாகப்பட்டிணம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர்.
10) வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் இருந்ததை முகாலயப் பேரரசு 1765 இல் எந்த உடன்படிக்கையின் மூலம் அங்கீகரித்தது? அலகாபாத் உடன்படிக்கை.
11) எங்கிருந்து வந்த ஆங்கிலேயர்கள் மேற்கு கடற்கரையின் மங்க ளூரையும் அதைச் சுற்றியிருந்த பகுதியையும் கைப்பற்றினர்? பம்பாய்.
12) 1768 இல் ஹைதர் பாராமகால் மீது போர் திடீர் தாக்குதல் நடத்தி யாரைத் தோற்கடித்து கரூரையும், ஈரோட்டையும் கைப்பற்றினார்? கேப்டன் நிக்சன்.
13) மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஹைதரின் படைகளை வழிநடத்திச் சென்றவர் யார்? பசலுல்லா கான்.
14) ஹைதருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே கையெழுத்தான ஒப்பந்தம் எது? சென்னை உடன்படிக்கை.
I) இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
II) கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும்.
III) இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.
IV) ஆனால் மராத்தியருக்கு எதிரான போரில் ஹைதருக்கு ஆங்கிலேயர்கள் உதவவில்லை, அதனால் ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான் மாறினார்.
15) இரண்டாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு? 1780-1784.
16) வந்தவாசி போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர் யார்? சர் அயர்கூட்.
17) ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கர்னல் ப்ரெய்த்வெயிட்டை எங்கு தோற்கடித்து சிறைபிடித்தார்? கும்பகோணம்.
18) இரண்டாம் மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது? மங்களூர் உடன்படிக்கை.
19) மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு? 1790-92.
20) முதல் ஆங்கிலேயப் போருக்குப் பின் மராத்தியர் மற்றும் ஆங்கிலேயருக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தம் எது? சால்பை உடன்படிக்கை.
21) கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியை எங்கு தோற்கடித்தார்? கள்ளிக்கோட்டை
22) காரன்வாலிஸ் திப்புவை எதிர்கொண்டு தோற்கடித்த இடம்? ஸ்ரீரங்கப்பட்டினம்.
23) மூன்றாம் மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது? ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
I) போர் இழப்பீடு மூன்று கோடி திப்பு ஆங்கிலேயருக்கு அளிக்க வேண்டும்.
II) அவருடைய மகன்களில் இருவரை பிணைக்கைதிகளாக அனுப்ப வேண்டும்.
24) நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு? 1799.
25) பிரான்சில் உள்ளதைப் போல் எங்கு ஜேக்கோப்பியர் கழகம் தொடங்கப்பட்டது? ஸ்ரீரங்கப்பட்டினம்.
26) வெல்லஸ்லி பிரபு எந்த திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படைகளை நிரந்தரமாக வைத்திருந்தார்? துணைப்படைத்திட்டம்.
27) திப்புவின் மகன்கள் எங்கு சிறைவைக்கப்பட்டனர்? வேலூர்.
28) திப்புவின் மகன்கள் வேலூர் சிறையிலிருந்து எங்கு மாற்றப்பட்டனர்? கொல்கத்தா.
29) விஜயநகரப் பேரரசு எத்தனை பாளையங்களாக மாற்றப்பட்டது? 72 பாளையங்கள்.
30) மேற்கு பாளையக்காரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? மறவர்கள்.
31) கிழக்கு பாளையக்காரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? நாயக்கர்கள்.
32) கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? யூசப்கான் என்ற கான் சாகிப்.
33) பாளையக்காரர் முறை முதலில் பின்பற்றப்பட்டது எங்கு? வாரங்கல் - காகதீய அரசர் பிரதாபருத்ரன்.
34) பாளையக்காரர்கள் தோன்றுவதற்கு முன் காவல் பணிகளுக்காக வரி வசூல் செய்தவர்கள் யார்? சேர்வைக்காரர்கள், தலையாரிகள்.
35) மாபூஸ்கான் கர்னல் ஹெரானுடன் எந்த பகுதியை நோக்கி படையெடுத்துச் சென்றார்? திருநெல்வேலி.
36) ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராக தமிழகப் பாளையக்காரர்களை ஆதரித்தவர் யார்? நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள் (மியானா, முடிமய்யா, நபிகான் கட்டக்).
37) ஊற்றுமலை, சுரண்டை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம்கொண்டான், வடகரை போன்றவை யாருடைய கூட்டமைப்பில் இடம்பெற்றன? பூலித்தேவர்.
38) கம்பெனியை சேர்ந்த 1000 வீரர்களுடன் நவாப் மூலமாக அனுப்பி வைக்கப்ட்ட எத்தனை வீரர்கள் மாபூஸ்கானின் படையில் இணைந்தன? 600 வீரர்கள்.
39) திருவிதாங்கூரிலிருந்து எத்தனை வீரர்கள் பூலித்தேவரின் படையில் இணைந்தனர்? 2000 வீரர்கள்.
40) எங்கு நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் மாபூஸ்கானின் படைகளை தோற்கடித்தது? களக்காடு.
41) யூசப்கான் நெற்கட்டும் செவல் கோட்டையை இடிக்கும் நோக்கத்துடன் நடத்திய தாக்குதல் எத்தனை மாதங்கள் நீடித்தது? 2 மாதங்கள்.
42) யூசப்கான் என்கிற மருதநாயகம்:
I) புதுச்சேரியில் இருந்தபோது இசுலாம் மதத்தை தழுவினார்.
II) 1756 -1761 வரை ஆளஞராகப் பொறுப்பேற்றார்.
III) ஹைதர் அலியைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றினார்.
IV) லாலியின் மதராஸ் முற்றுகைக்கு சிறப்பான பங்காற்றினார்.
V) மதுரையில் நெசவுத்தொழிலை ஊக்குவித்தவர்.
43) 1761 மே 16 இல் நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய இடங்களில் இருந்த முக்கியமான கோட்டைகள் யாருடைய வசமாயின? யூசப்கான்.
44) எந்த ஆண்டு கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசப்கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார்? 1764.
45) 1767 மீண்டும் நெற்கட்டும் செவல் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றியவர் யார்? கேப்டன் கேம்பல்.
46) சிவகங்கை மன்னரான செல்லமுத்து சேதுபதியின் மகள் யார்? வேலுநாச்சியார்.
I) வேலுநாச்சியாரின் கணவர் பெரிய உடையார்.
II) வேலுநாச்சியார் மகள் - வெள்ளச்சி நாச்சியார்.
47) வேலுநாச்சியாரின் படைகள் நவாபின் படைகளால் கொல்லப்பட்டபோது, எங்கு தன் மகளுடன் ஹைதர் அலியின் பாதுகாப்பின் 8 ஆண்டுகள் தங்கியிருந்தார்? திண்டுக்கல் விருப்பாச்சி.
48) வேலுநாச்சியார் ஆங்கிலேயருடன் போரிட்டு வென்ற ஆண்டு? 1780.
49) வேலுநாச்சியாரின் படையில் இருந்த யார் தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்? குயிலி.
50) வேலுநாச்சியார் படையிலிருந்த மற்றுமொரு உளவாளி யார்? உடையாள்.
51) சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய வேலுநாச்சியார் யாருடைய துணையுடன் இராணியாக முடிசூடினார்? மருது சகோதரர்கள்.
52) மருதுசகோதரர்கள்:
I) சின்ன மருது - நாச்சியாரின் ஆலோசகர்.
II) பெரிய மருது - படைத்தளபதி,
53) ஆங்கிலேயர்கள் மீண்டும் சிவகங்கைக்கு படையெடுத்த ஆண்டு? 1783.
54) ஆங்கிலேயரின் உடன்பாட்டுக்கு பின்னர் யார் சிவகங்கை அரசராகப் பொறுப்பேற்றார்? பெரிய உடைய தேவர்.
55) வேலுநாச்சியார் மரணம்:
I) வேலுநாச்சியார் மரணம் -1796.
II) வெள்ளச்சி நாச்சியார் 1796 இல் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார்.
56) கட்டபொம்மன் எந்த பகுதியின் ஆட்சியாளாராக இருந்தார்? பாஞ்சாலங்குறிச்சி.
I) கட்டபொம்மன் என்பது அவரது குடும்பப் பட்டம்.
II) கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீரப் கட்டபொம்மன்.
III) 1760 இல் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
57) 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பம் செலுத்தப்படாததால், யார் கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பியது? கலெக்டர் ஜாக்சன்.
58) கட்டபொம்மனை எங்கு வரவழைத்து கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது? இராமநாதபுரம்.
59) 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் எத்தனை வாரங்களுக்குள் தன்னை சந்திக்க வேண்டும் என்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவிடப்பட்டது? இரண்டு வாரங்கள்.
60) கட்டபொம்மன் எவ்வளவு தூரம் பயணம் செய்து இறுதியாக, செப்டம்பர் 19 ஆம் நாள் இராமநாதபுரத்தை அடைத்து கலெக்டரை சந்தித்தார்? 23 நாட்களில் 400 மைல் தூரம்.
61) பகோடா:
I) விஜயநகரத்தில் அறிமுகமான தங்க நாணயம்.
II) திப்பு சுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்கு சமமாக இருந்தது.
III) பகோடா மரத்தை உலுக்குதல் என்ற சொலவடை இங்கிலாந்து மக்களிடையே நிலவியது.
IV) தமிழில் "வாராகன்" எனப்பட்டது.
62) கட்டபொம்மன் கம்பெனிக்கு கட்ட வேண்டிய கப்பத்தொகை எவ்வளவு? 1080 வராகன்.
63) ஜாக்சன் கட்டபொம்மன் சந்திப்பில் கட்டபொம்மன் தப்ப முயன்ற போது நடந்த மோதலில் இறந்தவர் யார்? கைது செய்யப்பட்டவர் யார்? லெப்டினெண்ட் கிளார்க், சிவசுப்ரமணியம் கைது.
64) கட்டபொம்மன் சென்னை கவுன்சிலுக்கு கடிதம் எழுதியபோது, கட்டபொம்மன் கம்பெனி நிர்வாகத்திடம் சரணடைந்தால் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறும் என்று கூறியவர் யார்? எட்வர்டு கிளைவ்.
65) விசாரணையின் பிறகு கலெக்டர் ஜாக்சன் நிக்கப்பட்டு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்? லூஷிங்க்டன்.
66) மருதுபாண்டியர்கள் கூட்டமைப்பு:
I) திண்டுக்கல் - கோபால் நாயக்கர்
II) ஆனைமலை யதுல் நாயக்கர்.
67) கட்டபொம்மனின் நிலைவயை பலப்படுத்துவதற்காக வீரபாண்டியன் தன்னுடைய வீரர்கள் மற்றும் கூட்டணித் தவைர்களுடன் யாருடடைய தலைமையில் மேற்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர்? தளவாய் குமாரசாமி.
68) 1799 ஜூன் 01 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கையின் எந்த பகுதியில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்? பழையனாறு.
69) 1799 செப்டம்பர் 01 அன்று யார் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி எச்சரிக்கை விடுத்தார்? மேஜர் பானர்மேன்.
70) "கட்டபொம்மனின் வீரர்கள் கம்பீரத்துடன் போரிட்டனர்" என்று கட்டபொம்மனின் படைவீரர்களின் வீரத்தை பதிவிட்டவர் யார்? கர்னல் வெல்ஷ்.
71) எங்கு நடைபெற்ற மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியபிள்ளை பிடித்து வைக்கப்பட்டார்? கோலார்பட்டி.
72) களப்பூர் காட்டிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் யார்? புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான்.
73) 1799 அக்டோபர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை எந்த இடத்தில் விசாரணை செய்தார்? கயத்தாறு.
74) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் மற்றும் இடம்? 1799 அக்டோபர் 16 மற்றும் கயத்தாறு.
75) கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும், கிளர்ச்சியாளர்களின் அடையாளமாகவும் திகழ்ந்த பகுதி எது? காளையார்கோவில்.
76) கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை கமுதியிலிருந்து மருது சகோதரர்கள் எங்கு அழைத்துச் சென்றனர்? சிவகங்கை தலைநகர் சிறுவயல்.
77) நவாப் முகமது அலி முத்துராமலிங்கத் தேவரை இராமநாதபுரத்தின் ஆட்சியாளராக முடிசூட்டியபோது. ஆட்சியாளர்கள் யாரை தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர்? முத்துக்கருப்பத் தேவர்.
78) மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றவர் யார்? தஞ்சாவூர் ஸ்தானிகர் கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன்.
79) கிளர்ச்சியாளர்களுக்கெதிராக 1801 மே மாதத்தில் யாருடைய தலைமையிலான ஒரு படைப்பிரிவு நடவடிக்கைகளை துவக்கியது? அக்னியூ.
80) கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்ட இடம்:
I) மருது பாண்டியர் சிங்கம்புணரி.
II) செவத்தையா வத்தலகுண்டு.
III) வெள்ளை மருதின் மகன் துரைசாமி - மதுரைக்கு அருகில் கைது செய்தனர்.
81) 1801 அக்டோபர் 24 ஆம் நாள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்? திருப்பத்தூர்.
82) 1801 நவம்பர் 16 ஆம் நாள் ஊமைத்துரையும். செவத்தையாவும் அவர்களின் ஆதரவாளர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டனர்? பாஞ்சாலங்குறிச்சி.
83) 1802 ஏப்ரல் மாதத்தில் 73 கிளர்ச்சியாளர்கள் எங்கு நாடு கடத்தப்பட்டனர்? மலேயா பினாங்கு.
84) ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட கொங்கு நாட்டு பாளையக்காரர் யார்? தீரன் சின்னமலை.
85) ஆங்கிலேயரின் கோயம்புத்தூர் கோட்டையை தீரன் சின்னமலை தாக்கியதால் ஆங்கிலேயர்கள் எத்தனை பேரை தூக்கிலிட்டனர்? 49 பேர்.
86) தீரன் சின்னமலையின் மூன்று முக்கிய போர்கள்:
I) காவிரிக்கரை போர்- 1801
II) ஓடாநிலைப் போர் - 1802
III) அரச்சலூர் போர் - 1804
IV) இறுதிப்போர் - 1805
87) தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்? சங்ககிரி கோட்டை.
88) வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு? 1806.
89) திப்பு சுல்தானின் எத்தனை விசுவாசிகள் வேலூரை சுற்றியிருந்த பகுதிகளில் குடியேறிருந்தனர்? 3000.
90) வேலூர் புரட்சிக்கான உடனடிக் காரணங்கள்:
I) மதத்தின் அடையாளமாக நெற்றியில் குறியீடுகள் இட தடை.
II) தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்கு பொருந்தும்படி வெட்டுதல்.
III) அக்னியூ சிப்பாய்களுக்கான புதிய தலைப்பாகை அறிமுகம்.
IV) தலைப்பாகையில் அமைந்திருந்த ரிப்பன் குஞ்சம்.
V) பன்றித்தோல் முஸ்லிம்களுக்கு வெறுப்பூட்டும் பொருள் இந்துக்கள் பசுத்தோலில் செய்யப்பட்ட எந்த பொருளையும் விலக்க வேண்டியதாகக் கருதினர்.
91) முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரிலிருந்த எத்தனை படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்? 4 ஆம் ரெஜிமெண்ட்டின் 2 ஆம் படைப்பிரிவு.
92) 4 ஆம் ரெஜிமெண்டின் 2 ஆம் படைப்பிரிவுக்கு பதிலாக எங்கிருந்து வந்த 23 ஆம் ரெஜிமெண்ட் 2 ஆம் படைப்பிரிவு பொறுப்பை ஏற்றது? வாலாஜாபாத்.
93) தலைமையின் உத்தரவை எதிர்த்தமைக்காக படையின் கீழ்நிலை பொறுப்பிலிருந்த 21 வீரர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீரர்களுக்கும் எத்தனை கசையடிகள் கொடுக்கப்பட்டன? 900 கசையடிகள்.
94) புதிய தலைப்பாகையை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக கருதியவர்? வில்லியம் பெண்டிங் பிரபு.
95) வேலூர் புரட்சிக்குப் பின்னர் முதன்மை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் யார்? ஜமேதார் ஷேக் காசிம்.
96) வேலூர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் யார்? ஜலாலுதின் (திப்பு குடும்பத்தின் 12 இளவரசர்களில் ஒருவர்).
97) வேலூர் கோட்டையில் ஜூலை 10 ஆம் நாள் காலை 2 மணிக்கு நடைபெற்ற நிகழ்வுகள்.
I) 13 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
II) 82 கீழ்நிலை வீரர்கள் இறந்தனர்.
III) 91 பேர் காயமடைந்தனர்.
98) 16 ஆம் காலாட்படையைச் சேர்ந்த எந்த மேஜர் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது கோட்டைக்கு வெளியே சென்று கொண்டிருந்தவர் கோட்டையில் நுழையும்போது சராமாரியாக குண்டுமழை பொழிந்து உயிர் துறந்தவர் யார்? மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்.
99) மேஜர் கோர்ட் கிளர்ச்சியை பற்றி கேள்விப்பட்டு கில்லெஸ்பிக்கு கடிதம் எழுதி யாரிடம் கொடுத்தனுப்பினார்? கேப்டன் ஸ்டிவன்சன்.
100) கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கிடைத்தவுடன் அவர் அழைத்து சென்ற படைகள் எது?
I) கேப்டன் யங் கலைமையில் 19 ஆம் குதிரைப்படை,
II) லெப்டிணென்ட் வுட் ஹவுஸ் தலைமையில் 7 ஆம் குதிரைப்டை.
101) திப்புவின் மகன்களைப் பழிவாங்க கில்லஸ்பி எண்ணியதை எதிர்த்தவர் யார்? கர்னல் மர்ரியாட்
102) கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை எத்தனை நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது? 15 நிமிடங்கள்.
103) ஜூலை 11 ஆம் நாள் வேலூர் கோட்டையின் தற்காலிக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? கர்னல் ஹர்கோர்ட். 
104) மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால் அவர்களை எங்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது? கொல்கத்தா.
105) பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களுக்கு பதிலாக வேலூர் புரட்சியில் இடம்பெற்றது எது? பாட்ஜ்.
106) கில்லெஸ்பியின் வன்கொடுமைகள்:
I) வன்கொடுமைகளை நேரில் பார்த்தவர் ஜே.பிளாக்கிஸ்டன்.
II) 800 க்கும் மேற்பட்ட உடல்கள் கோட்டையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.
III) டபிள்யூ. ஜே. வில்சனின் மதிப்பீட்டின்படி கிளர்ச்சியில் பங்கேற்றதாக 378 பேர் சிறை வைக்கப்பட்டனர்.
IV) 516 மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை.
V) இத்தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப்பட்டது.
107) வரி வசூலிக்கும் அலுவலகத்தின் பெயர் என்ன? கச்சேரி.
108) மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? மாப்பிள்ளைகள்.
109) ஆங்கிலேயர்கள் மலபாரைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆண்டு? 1792.
110) நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயை சரிசமமாக பிரித்துக்கொண்டவர்கள் யார்?
I) ஜன்மி - ஜன்மம் என்ற உரிமை பெற்றவர்.
II) கனம்தார் - கனம் என்ற உரிமை பெற்றவர்.
111) மலபாரில் நடைபெற்ற முக்கிய கிளர்ச்சிகள்:
I) 1849 ஆகஸ்டு மஞ்சேரி.
II) 1851 ஆகஸ்டு - குளத்தூர்.
III) 1852 ஜனவரி -வடக்கில் மட்டனூரில் நிகழ்ந்த கிளர்ச்சிகள்.
112) மாப்பிள்ளைகள் எழுச்சி பெற்று மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆண்டு? 1870.
113) கோல்களின் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு? 1831 - 32.
114) கோல் என்ற பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகள்? பீகார், ஒரிசாவில் சோட்டா நாக்பூர்.
115) கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடி காரணம் என்ன? சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களை பழங்குடிஅல்லாதோருக்கு குத்தகை விட்டது.
116) வரி வசூலிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? திக்காடர்கள்.
117) 1831 டிசம்பர் 20 ஆம் நாள் சோட்டா நாக்பூரில் எந்த பகுததியில் எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது? சோனிப்பூர் பர்கானா. கொள்ளையடிக்கப்பட்டு
118) கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆண்டு? 1832 ஜனவரி 26.
119) கோல் கிளர்ச்சியின் தலைவர் யார்? புத்த பகத்
120) புத்த பகத்தின் துண்டிக்கப்பட்ட தலையை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அதிகாரிகள் இராணுவ வீரர்களுக்கு எவ்வளவு ரூபாய் வழங்கப்பட்டது? ஓராயிரம் ரூபாய்.
121) சந்தால்களின் கிளர்ச்சி:
I) கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு 185556.
II) சந்தால்கள் வங்காளம், பீகார். ஒரிசா காட்டுப்பகுதியில் பரவியிருந்தார்கள்.
122) சந்தால்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? மஞ்சி.
123) தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகால் குன்றுகளை சுற்றியுள்ள பகுதியைத் திருத்து சாந்தால்களின் நிலம் என்று எதை அழைத்தார்கள்?
டாமின் - இ - கோ.
124) யாருடைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது? டிக்குகள் (வெளியிலிருந்து வந்தோர்).
125) மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானோர் எந்த நிற உடையை அணிந்திருந்தார்கள்? சிவப்பு நிற உடை.
126) கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய குழு எந்த கிராமத்தை தாக்கி தீக்கரையாக்கியது? மோங்கபர்ரா.
127) தொடக்கத்தில் சந்தால்களின் தலைவராக இருந்தவர் யார்? சித்தோ.
128) சித்தோவின் கைதிற்கு பின்னர் கிளர்ச்சியை வழிநடத்தியவர் யார்? கனு.
129) கிளர்ச்சியின் கணக்கிடு: 30 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
130) யார் தலைமையில் முண்டாக்களின் கிளர்ச்சி நடைபெற்றது? பிர்சா முண்டா (1889 -1900)
131) முண்டாக்கள் என்பவர்கள் எந்த பகுதியின் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள்? பீகார்.
132) முண்டாக்களின் எந்த முறை ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்டது? பொதுநில உரிமை முறை.
133) முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என்று தன்னை அழைத்துக் கொண்டவர் யார்? பிர்சா முண்டா.
134) பிர்சா முண்டா எந்தப் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்? சோட்டா நாக்பூர்.
135) எந்த சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900 ஆம் ஆண்டு ஜுன் 09 நாளில் தியாகி ஆனார்? ராஞ்சி சிறை.
136) 1857 ஆம் ஆண்டு புரட்சியை வங்காளப் படையின் உருவாக்கம் என்னும் நூலில் ஒரு இராணுவ வீரர்களின் கலகம்' என்று குறிப்பிட்டவர் யார்? கர்னல் மல்லீசன்.
137) 1857 புரட்சியை பற்றிய வரலாற்றரிஞர்களின் கூற்றுகள்.
I) "பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்" தாம்சன். எட்வர்டு ஜான்
II) 1909 இல் வெளியான சவார்கரின் இந்திய விடுதலைப் போர் என்னும் நூலில் "அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போர்" என வாதிட்டார்.
138) டல்ஹௌசி வாரிசு இழப்புக் கொள்கை மூலமாக இணைத்த பகுதிகள்? அவத், ஜான்சி.
139) இனாம் கமிஷன்:
I) முறையான உரிமம் இல்லாமல், குத்தனை இல்லாத நிலங்களை வைத்திருப்போர் பற்றி விசாரிக்க பம்பாய் அரசு அமைத்தது.
II) இவ்வறிக்கையின் படி 21000 தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
140) நீதிமன்றங்களிலும் பொதுப்பணித் தேர்வுகளிலும் எந்த மொழியின் பயன்பாட்டை ஒழித்து அரசுப் பணியில் முஸ்லிம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளை குறைத்தது? பாரசீக மொழி. 
141) கிறித்துவர்களாக மாறியவர்களுக்கு மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது எந்த சட்டம்? லெக்ஸ் லோசி சட்டம் (1850).
142) இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை துப்பாக்கி எது? என்பீல்டு ரக துப்பாக்கி.
143) பெருங்கிளர்ச்சி எங்கு இராணுவக் கலகமாக தொடங்கியது? கொல்கத்தா பரக்பூர்.
144) இராணுவக் கலகத்தை தொடங்கியவர் யார்? மங்கள் பாண்டே.
145) மீரட் நகரில் தோட்டாக்களை பெற வேண்டிய 90 வீரர்களில் எத்தனை பேர் மட்டுமே ஆங்கிலேயரின் உத்தரவுக்கு அடிபணிந்தனர்? ஐந்து பேர்.
146) மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்களின் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தது எப்போது? மே மாதம் 10 ஆம் நாள்.
147) தில்லியை அடைந்த வீரர்கள் யாரை பேரரசாக பிரகடணம் செய்தனர்? பகதூர் ஷா.
148) புரட்சிகள்:
I) ஜான்சி இலட்சுமிபாய் அரியணை.
II) கான்பூர் -நானா சாகிப் தலைமை.
149) பெண்கள் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்ட நிகழ்வு எவ்வாறு அழைக்கப்பட்டது? கான்பூர் படுகொலை.
150) கான்பூர் படுகொலைக்கு அடுத்த நாள் நானா சாகிப்பை தோற்கடித்தவர் யார்? ஹென்றி ஹெவ்லக்.
151) கான்பூர் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டவர் யார்? கர்னல் நீல்.
152) நவம்பர் மாத இறுதியில் தாந்தியோ தோபே கைப்பற்றிய கான்பூரை மீட்டவர் யார்? காம்ப்பெல்.
153) லக்னோ யாரால் பாதுகாக்கப்பட்டது? ஹென்றி லாரன்ஸ்.
154) ஜூலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்டவர் யார்? ஜான் நிக்கல்சன்.
155) லக்னோவில் ஆங்கிலேயரை எதிர்த்தவர் யார்? பேகம் ஹஸ்ரத் மகால்.
156) கிளர்ச்சியாளர்கள் யாருடைய தலைமையின் கீழ் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர்? ராஜா ஜெய்லால் சிங்.
157) ஹஸ்ரத் மகால் யாரை அவத்தின் அரசராக அறிவித்தார்? தன் மகன் (பிர்ஜிஸ் கத்ரா).
158) கான்பூரில் பழி தீர்த்துக் கொண்ட நீல் எங்கு நடைபெற்ற தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்? லக்னோ. 
159) எந்த ஆண்டு வரை ஆங்கிலேயரால் லக்னோவை கைப்பற்ற முடியவில்லை? 1858 மார்ச்.
160) நீல் சிலை:
I) சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது.
II) இச்சிலையை அகற்ற காங்கிரஸ் சத்தியாகிரகம் செய்தது.
III) இராஜாஜியின் அமைச்சரவை இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது. 
161) ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் யார்? சிந்தியா.
162) 1857 கிளர்ச்சியாளர்களில் லட்சுமி பாய் மிகச்சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயை குறிப்பிட்டவர் யார்? வில்லியம் ஹக்ரோஸ்.
163) 1858 இல் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு அமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தவர் யார்? கானிங் பிரபு.
164) புரட்சியின் முடிவு:
I) தாந்தியோ தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
II) இரண்டாம் பகதூர் ஷா செப்டம்பர் 1857 இல் கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
III) நவம்பர் 1862 நவம்பர் இல் தன்னுடைய 87 வது வயதில் மரணமடைந்தார்.
165) 1858 நவம்பர் 01 இல் விக்டோரியா இராணி வெளியிட்ட அறிக்கையை வாசித்தவர் யார்? கானிங் பிரபு (அலகாபாத்).
166) இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு.
167) விக்டோரியா அறிக்கைக்குப் பின் எத்தனை நபர்களைக் கொண்ட இந்திய கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி புரிந்தது? 15 பேர் கொண்ட குழு.
168) புரட்சியின் விளைவுகள்:
I) ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை.
II) 1861 ஆம் ஆண்டு அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்திய பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
III) வாரிசு உரிமை இழப்புக் கொள்கை நாடிணைப்புக் கொள்கை கைவிடப்பட்டது.


10th வரலாறு தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1) சென்னைவாசிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் ஏற்படுத்தியவர்கள் யார்? 1852 மற்றும் கஜிலு லட்சுமி நரசு, சீனிவாசனார்.
2) சென்னைவாசிகள் சங்கத்தில் அதிகம் இருந்தவர்கள் யாவர்? வணிகர்கள்.
3) எந்த அமைப்பின் முயற்சியால் சித்ரவதை ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, சித்ரவதைச் சட்டம் ஒழிக்கப்பட்டது? சென்னை வாசிகள் சங்கம்.
4) சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு, நியமிக்கப்பட்டவர் யார்? 1877 டி. முத்துசாமி.
5) "தி இந்து" பத்திரிக்கை தொடங்கிய ஆண்டு மற்றும் தொடங்கியவர்கள் யாவர்? 1878 மற்றும் ஜி. சுப்ரமணியம், எம். வீரராகவாச்சாரி.
6) சுதேசமித்ரன் என்ற இதழை தொடங்கியவர் யார். தொடங்கிய வருடம் என்ன? ஜி. சுப்ரமணியம், 1891.
7) சுதேசமித்ரன் எப்போது நாளிதழாக மாறியது? 1899.
8) சென்னை மகாஜன சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் நிறுவியவர்கள் யாவர்? 1884 மே 16 மற்றும் எம். வீரராகவாச்சாரி,  அனந்தசாரலு.
9) சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? பி. ரங்கையா.
10) சென்னை மகாஜன சபையின் செயலாளராகப் பொறுப்பேற்றவர் யார்? பி. அனந்தசாரலு.
11) சென்னை மகாஜன சபையின் கோரிக்கைகள் யாவை?
I) குடிமைப்பணி தேர்வு இந்தியா-இங்கிலாந்தில் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
II) லண்டனில் இந்திய கவுன்சிலை மூடுவது.
III) இராணுவ செலவுகளைக் குறைப்பது.
12) அடையாறில் பிரம்மஞான சபை கூட்டம் எப்போது கூடியது? 1884 டிசம்பரில்.
13) தமிழ்நாட்டின் மிதவாத தவைர்களைக் கூறுக?
I) வி. எஸ். சீனிவாச சாஸ்திரி.
II) பி. எஸ். சிவசாமி.
III) வி. கிருஷ்ணசாமி.
IV) எஸ். சுப்பிரமணியனார்.
14) இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு மற்றும் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது? 1885, பம்பாய்.
15) இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்? டபள்யூ. சி. பானர்ஜி.
16) இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் எத்தனை பிரதிநிதிகள் கலந்துக் கொண்டினர்? 72 பிரதிநிதிகள் (22 பேர் சென்னை).
17) இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம், தலைமை யார்? 1886, தாதாபாய் நௌரோஜி (கொல்கத்தா).
18) மூன்றாம் சென்னை காங்கிரஸ் மாநாட்டில் எத்தனை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்? மொத்தம் 607, சென்னை மாகாணத்தில் மட்டும் 362 பேர்.
19) சென்னை மாகாணத்தின் பகுதிகள் எவை?
I) ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதி.
II) கர்நாடகாவில் சில பகுதி.
III) கேரளா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள்.
20) வங்கப்பிரிவினை ஏற்பட்ட ஆண்டு? 1905.
21) தமிழ்நாட்டைச் சார்ந்த சிறந்த தலைவர்கள் யாவர்?
I) வ. உ. சிரம்பரனார்.
II) எ. சக்கரையார்.
III) பாரதியார்.
IV) சுரேந்திரநாத் ஆரியா.
22) தீவிர தேசியவாத தலைவரான பிபின் சந்திரபால் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடம் எது? சென்னை.
23) வ. உ. சிதம்பரனார் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் எங்கு தொடங்கினார்? தூத்துக்குடி.
24) வ. உ. சி. வாங்கிய இரு கப்பல்களின் பெயர் என்ன? காலியா, லவோ.
25) வ. உ. சி. சுதேசி கப்பல்களை எவற்றிற்கு இடையே ஓட்டினார்? தூத்துக்குடி -கொழும்பு.
26) நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் முக்கி பங்காற்றியவர்கள் யார்? வ. உ. சி, சுப்பிரமணிய சிவா.
27) கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் ஏற்பட்ட ஆண்டு? 1908.
28) யார் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காக வ. உ. சி யும். சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்? பிபின் சந்திபால்.
29) வ. உ. சி க்கு வழங்கப்பட்ட தண்டணை என்ன? இரட்டை ஆயுள் தண்டணை.
30) சிறைத் தண்டனையைத் தவிர்க்க பாரதியார் சென்ற இடம் எது? பாண்டிச்சேரி.
31) புரட்சிரகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் எங்கு வழங்கப்பட்டது? லண்டன் (இந்திய ஹவுஸ்), பாரிஸ்.
32) தமிழ்நாட்டின் புரட்சிகர தேசியவாதிகள் யாவர்? 
I) எம். பி. டி. ஆச்சாரியா. 
II) வி. வி. சுப்பிரமணியனார்.
III) டி.எஸ்.எஸ். ராஜன்.
33) பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த புரட்சிகர செய்தித்தாள்களை குறிப்பிடுக. இந்தியா, விஜயா, சூர்யோதயம்.
34) பாண்டிச்சேரியில் 1910 இல் யாருடைய வருகைக்குப் பின் புரட்சிகர நடவடிக்கைகள் தீவிரமடைந்தன? அரவிந்த கோஷ், வி. வி. சுப்பிரமணியனார்.
35) 1904 இல் யாரால் "பாரத மாதா சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது? நீலகண்ட பிரம்மச்சாரி.
36) பாரத மாதா சங்கத்தால் தூண்டப்பட்டவர் யார்? வாஞ்சிநாதன்.
37) வாஞ்சிநாதன் ஆஷ் என்பவரை எப்போது எங்கு சுட்டுக் கொன்றார்? 1911 ஜீன் 17. திருநெல்வேலி மணியாச்சி ரயில் நிலையம்.
38) அன்னிபெசண்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய வருடம்? 1916.
39) தன்னாட்சி இயக்க செயல் திட்டத்தில் அன்னிபெசண்ட் அம்மையாருக்கு துணை நின்றவர்கள் யாவர்?
I) ஜி. எஸ். அருண்டேல். 
II) பி.பி. வாடியா.  
III)  சி.பி.ராமசாமி.
40) அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய இதழ்கள் யாவை? நியூ இந்தியா (1915), காமன் வீல் (1914).
41) "அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" என்று கூறியவர் யார்? அன்னிபெசண்ட்.
42) அன்னிபெசண்ட் அம்மையாரின் இரு புத்தகங்கள் யாவை? "விடுதலைப் பெற இந்தியா எப்படி துயருற்றது", "இந்தியா ஒரு தேசம்".
43) எந்த இயக்கத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு சாரணர்(Scout) இயக்க குழுக்களாகவும், தொண்டர் குழுக்களாகவும் மாற்றப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது? தன்னாட்சி இயக்கம்.
44) எந்தக் காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசண்ட் தலைமை தாங்கினார்? 1917.
45) தொழிற்சங்கங்களை உருவாக்கி தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் யார்? பி. பி. வாடியா.
46) பிராமணரல்லாதோர் நலன்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்ன? சென்னை திராவிட கழகம்(1912), சி. நடேசனார்.
47) பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு 1916 இல் திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவியவர் யார்? சி. நடேசனார்.
48) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு, ஏற்படுத்தியவர்கள் யார், ஏற்படத்திய இடம் எது?
I) 1916 நவம்பர் 20.
II) பி. தியாகராயர், டி. எம். நாயர், சி. நடேசனார்.
III) சென்னை விக்டோரியா அரங்கம்.
49) தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் செய்தித்தாள்களைக் குறிப்பிடுக?
I) ஜஸ்டிஸ் (ஆங்கிலம்).
II) திராவிடன் (தமிழ்).
III) ஆந்திர பிரகாசிகா (தெலுங்கு).
50) பிராமணரல்லாதோர் அறிக்கையை வெளியிட்டவர் யார்? தியாகராயர்.
51) தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்த அமைப்பு எது? நீதிக்கட்சி.
52) வகுப்புவாத பிரதிநிதித்துவத்தைக் கோரிய அமைப்பு எது? நீதிக்கட்சி.
53) எந்த ஆண்டு சட்டம் பிராமணரல்லாதோருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது? 1919.
54) 1920 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 98 இடங்களில் 63 இடம் பெற்று வெற்றி அடைந்த கட்சி எது? நீதிக்கட்சி.
55) நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சர் யார்? ஏ. சுப்பராயலு.
56) 1923 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்? பனகல் அரசர்.
57) நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் யாவை?
I) இடஒதுக்கீடு.
II) பணியாளர் தேர்வுக்குழு.
III) இந்து சமய அறநிலையத்துறை.
IV) தேவதாசி முறை ஒழிப்பு.
V) புறம்போக்கு நிலத்தை பட்டா செய்தல்.
VI) மதிய உணவுத் திட்டம்.
58) ரௌலட் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது? 1919.
59) காந்தி 1919 மார்ச் 18 இல் உரையாற்றிய இடம் எது? சென்னை, மெரினா.
60) "கருப்புச் சட்டம்" என்றழைக்கப்பட்ட சட்டம் எது? ரௌலட் சட்டம்.
61) மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை நடத்தியவர் யார்? ஜார்ஜ் ஜோசப்.
62) கேரளாவில் வைக்கம் சத்தியாகிரத்தை வழி நடத்தியவர் யார்? ஜார்ஜ் ஜோசப்.
63) தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர் யார்? ஜார்ஜ் ஜோசப்.
64) மதுரை மக்கள் ஜார்ஜ் ஜோசப் அவர்களை எவ்வாறு அழைத்தனர்? ரோசாப்பூ துரை.
65) ஜார்ஜ் ஜோசப் மதுரையில் எப்போது தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினார்? 1918.
66) சத்தியாகிரக சபை என்ற அமைப்பு நிறுவப்பட்ட இடம் என்ன? சென்னை.
67) தமிழ்நாட்டில் கிலாபத் இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? மௌலானா சௌகத் அலி.
68) கிலாபத் நாள் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது? 1920 ஏப்ரல் 17.
69) கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திகழ்ந்த இடம் எது? வாணியம்பாடி.
70) தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர்கள் யார்? ராஜாஜி, பெரியார்.
71) முஸ்லீம் லீக் கட்சியின் சென்னை கிளையை நிறுவியவர் யார்? யாகுப் ஹசன்.
72) ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக வரிகொடா இயக்கம் நடைபெற்ற இடம் எது? தஞ்சாவூர்.
73) வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்ட நாள் எது? 1922 ஜனவரி 13.
74) "சௌரி சௌரா" நிகழ்வு நடைபெற்ற இடம் எது? உத்திரப்பிரதேசம், 1922 பிப்ரவரி 05, (22 காவலர்கள் கொல்லப்பட்டனர்)
75) வைக்கம் சத்தியாகிரகத்தில் முக்கிய பங்காற்றியவர் யார்? பெரியார் (வைக்கம் வீரர்).
76) பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறக் காரணம் என்ன?
I) சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை.
II) வகுப்புவாரி தொடர்பான பிரச்சனை.
77) சேரன்மாதேவி குருகுலம் யாரால் நிறுவப்பட்டது? வி. வி. சுப்பிரமணியனார்.
78) காஞ்சிபுரத்தில் 1925 இல் வகுப்புவாரி பிரதிநித்துவம் வேண்டி கோரிக்கை வைத்தவர் யார்? பெரியார்.
79) சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? பெரியார்.
80) சுயராஜ்ய கட்சி யாரால் தொடங்கப்பட்டது? சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு.
81) தமிழ்நாட்டில் சுயராஜ்ய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் யார்? எஸ். சீனிவாசனார், எஸ். சத்தியமூர்த்தி.
82) 1926 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி எது? சுயராஜ்ய கட்சி.
83) 1926 இல் சுயேட்சை வேட்பாளராக அமைச்சரவையை அமைத்தவர் யார்? பி. சுப்பராயன்.
84) சென்னையில் யாருடைய தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது? எஸ். சத்தியமூர்த்தி.
85) "சைமன் குழு" சென்னைக்கு எப்போது வந்தது? 1929 பிப்ரவரி 18.
86) "நீல் சிலை அகற்றும் போராட்டம்" நடைபெற்ற ஆண்டு, தலைமை யார்? 1927, எஸ். என். சோமையாஜிலு.
87) கான்பூர் படுகொலையின் போது, வஞ்சம் தீர்க்கும் வகையில் கொடூரமாக நடந்து கொண்டவர் யார்? ஜேம்ஸ் நீல்.
88) நீல் சிலை யாருடைய ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது? இராஜாஜி.
89) எந்த மாநாட்டில் "பூரண சுயராஜ்யம் என்பதே இலக்கு" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? 1929, லாகூர்.
90) 1930 ஜனவரி 26 இல் ஜவஹர்லால் நேரு எந்த நதிக்கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக கொடியை ஏற்றினார்? ராவி நதிக்கரை.
91) காந்தியின் தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு? 1930 மார்ச் 12 முதல் ஏப்ரல் 6 வரை.
92) தமிழ்நாட்டில் யாருடைய தலைமையில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. நடைபெற்ற நாள் என்ன? ராஜாஜி, 1930 ஏப்ரல் 13 (தருச்சி-வேதாரண்யம்).
93) வேதாரண்ய உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் மொன்று வருகுது" என்ற பாடலைப் பாடியவர் யார்? நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்.
94) வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புச் சட்டத்தை மீறி எத்தனை தொண்டர்கள் உப்பை அள்ளினர்? 12 பேர்.
95) டி. பிரகாசம், கே. நாகேசுவர ராவ் தலைமையில் சென்னை அருகே எந்த இடத்தில் முகாம் அமைத்தனர்? உதயவனம்.
96) உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்? ருக்குமணி லட்சுமிபதி.
97) 1932 ஜனவரி 26 இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடி ஏற்றியவர் யார்? ஆரியா பாஷ்யம்.
98) O. K. S. R. குமாராசாமி என்றழைக்கப்பட்டவர் யார்? திருப்பூர் குமரன் (கொடிகாத்த குமரன்).
99) திருப்பூரில் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலம் நடைபெற்ற ஆண்டு என்ன? 1932 ஜனவரி 11.
100) மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த இந்திய அரசாங்க சட்டம் என்ன? 1935 இந்திய அரசுச் சட்டம்.
101) 1937 இல் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி, மது விலக்கை பரிசோதனை முறையில் அறிமுகம் செய்த இடம் எது? சேலம்.
102) யாருடைய முயற்சியினால் குத்தகைகாரர்களின் நிலை குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது? டி. பிரகாசம்.
103) மதுரை மீனாட்சியம்மன் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன? யாரால் நடத்தப்பட்டது? 1939, (வைத்தியநாதர், எல். என். கோபால்சாமி)
104) மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் யார்? வைத்தியநாதர்.
105) பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தியவர் யார்? ராஜாஜி.
106) இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்தவர்கள் யார் (மொழிப்போர் தியாகிகள்)? தாளமுத்து. நடராஜன்.
107) "வெள்ளையனே வெளியேறு" தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன? 1942 ஆகஸ்ட் 08 (பம்பாய் மாநாடு).
108) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? மதுரை.


வேலுநாச்சியார் & ருக்மணி லட்சுமிபதி

● இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730 ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலுநாச்சியார்.
● சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்துகொண்டார்.
● இவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற மகள் இருந்தார்.
● ஆங்கிலேயர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர்.
● ஆற்காட்டு நவாபும் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையைத் தாக்கினர்.
● இதனால் மூண்ட போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
● தனது மகளோடு தப்பிச்சென்ற வேலுநாச்சியார் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சியில் 8 ஆண்டுகள் வாழ்ந்தார்.
● மறைந்து வாழ்ந்த காலத்தில் வேலுநாச்சியார் ஒரு படைப்பிரிவை உருவாக்கியதோடு கோபால நாயக்கர் மட்டுமல்லாமல் ஹைதர் அலியோடும் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். 
● தளவாய் (இராணுவத் தலைவர்) தாண்டவராயனார். வேலுநாச்சியார் சார்பில் ஹைதர் அலிக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலேயரைத் தோற்கடிக்கும் பொருட்டு 5000 காலாட்படைகளும், 5000 குதிரைப் படைகளும் அனுப்பும்படி அவரிடம் கோரினார்.
● வேலுநாச்சியார் உருது மொழியில் தனக்கு கிழக்கிந்திய கம்பெனியோடு இருந்த பிணக்குகளை கடிதத்தில் விவரித்திருந்தார்.
● மேலும் தான் ஆங்கிலேயரோடு மோதுவதில் தீவிரமாக இருப்பதைத் தெளிவுபடுத்தினார்.
● அவரது மன உறுதியைப் பார்த்து வியந்த ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய இராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
● முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம் பிறகு சிவகங்கையை மீட்போம் என்று உறுதி பூண்டார்.
● வேலுநாச்சியார் போர்ப்படையில் வாள் படை, வளரிமப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை.
● வாள் படைக்கு தலைமை ஏற்றவர் - சின்ன மருது,
வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் - பெரிய மருது
பெண்கள் படைக்குத் தலைமையேற்றார் - குயிலி.
● சிவகங்கை கோட்டைக் கதவுகள் விசயதசமித் திருநாள் அன்று திறக்கப்படும்.
● விசயதசமி நாளில் கோட்டைக்குள் செல்வதற்கு மட்டும் அனுமதி உண்டு.
மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்.
● அப்போரில் கணவரைக் கொன்றவர்களை வென்று 1780 ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.
● குயிலி
I) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
II) உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயராகும்.
III) குயிலி தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிக்ஷாரின் ஆயதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.


ருக்மணி லட்சுமிபதி
● ராஜாஜி வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரகப் பேரணியை ஏற்பாடு செய்து வழிநடத்தினார்.
● 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் வேதாரண்யத்தை அடைந்தது.
● கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக சத்தியாக்கிரகிகள் ஊர்வலம் சென்றனர்.
● காவல்துறையினரின் கொடூரமான அடக்குமுறைக்கு மத்தியிலும், ஊர்வலம் சென்ற சத்தியாக்கிரகிகளுக்கு
வழிநெடுகிலும் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
● வேதாரண்யத்தை அடைந்ததும் ராஜாஜி தலைமையில் 12 தொண்டர்கள் உப்பு சட்டத்தை மீறி உப்பு அள்ளினர்.
● உப்பு சட்டத்தை மீறியதற்காக ராஜாஜி கைது செய்யப்பட்டார்.
● வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள்
I) T.S.S.ராஜன்
II) ருக்மணி லட்சுமிபதி
III) சர்தார் வேதரத்தினம்
IV) C. சுவாமிநாதர் மற்றும்
V) K. சந்தானம்
● உப்பு சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண் ருக்மணி லட்சுமிபதி ஆவார்.


மூவலூர் இராமாமிர்தம் & முத்துலட்சுமி ரெட்டி

மூவலூர் இராமாமிர்தம்
● 1883 ஆம் ஆண்டு பிறந்தார்.
● தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
● தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்.
● தமிழக அரசு 8 ஆம் வகுப்புவரை படித்த இளம்
பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
● 1962 ல் இயற்கை எய்தினார்.
● மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கான இத்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் நினைவாக, தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் 1989ல் ரூ. 5,000 திருமண நிதியுதவியாக துவக்கப்பட்ட இந்த திட்டத்தில், 2009இல் ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
● பின்னர் 2011இல் இத்திட்டத்தவகையை 50.00 ஆக உயர்த்தியும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் சேர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. 2016இல் 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
● தமிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 2022 தொடங்கி வைத்தார்.


முத்துலட்சுமி ரெட்டி
● 1886 ஆம் ஆண்டு பிறந்தார்.
● தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
● இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
● சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
● சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
● தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமண தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
● அடையாற்றில் 1930 ல் அவ்வை இல்லம், 1952 ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
● 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் "சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது " எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
● பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதா. இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோ "பொட்டு கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறிவித்தது.
● தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது.
● மேலும் தேவதாசி முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய்வோருக்கு குறைந்த பட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது.
● இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.


பெண்கள் இயக்கங்கள்

● இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.
● அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்திய பெண்கள் சங்கம் (Women's India Association - WIA), (All India Women's conference - ALWC) ஆகியவை முக்கியமானவையாகும்.
● இந்திய பெண்கள் சங்கம் (WIA) என்பது 1917 இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.
● இவ்வாறு தனிநபர் சுகாதாரம் திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டன.
● இதே சமயத்தில் இந்தியப் பெண்கள் சங்கம், பெண் கல்வி குறித்த பிரச்சனைகளைக் கையாள்வதற்காக 1927 இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவியது.
● மேலும் அரசு பெண்களின் மேம்பாட்டிற்காகப் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.
● பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
● பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர். பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர்.
● தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது
● இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
● முத்துலட்சுமி அம்மையார் நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்