8th - மக்களின் புரட்சி | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன? 1757. 2) ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரால் ஏற்பட்டது? பூலித்தேவர். 3) எந்த அரசு தனது மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தது? விஜய நகர அரசு. 4) தமிழ்நாட்டில் பாளையக்காரரை நியமித்தவர்கள் யார்? மதுரை நாயக்கர்கள். 5) விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு நாயக்கர் ஆனார்? 1529. 6) விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்? அரியநாதர். 7) தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1529. 8) நாடு மொத்தம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டது? 72. பாளையக்காரர்கள் வசூலிக்கப்பட்ட வரி: I) வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்கும். II) அடுத்த மூன்றில் ஒரு பங்கு இராணுவ செலவிற்கும். III) மீதியை தங்களின் சொந்த செலவிற்கு பயன்படுத்தினர். 9) தமிழ்நாட்டில் பாளையக்காரர் எந்த நூற்றாண்டில் முக்கிய பங்கு வகித்தனர்? 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு. 10) பாளையக்கார்ர்களிடையே எத்தனை பாளையங்கள் இருந்தன? இரண்டு (கிழக்கு, மேற்கு) 11) கிழக்கு பாளையங்களை ஆட்சி செய்தவர்கள் யார்? நயக்கர்கள். 12) கிழக்கு பாளையக்காரர்கள் யாருடைய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்தனர்? கட்டபொம்மன். 13) மேற்கு பாளையங்களில் இருந்தவர்கள் யார்? மறவர்கள். 14) மேற்கு பாளையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? பூலித்தேவர். 15) பாளையகார்ர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் புரட்சி எதனால் ஏற்பட்டது? கப்பம் கட்ட மறுத்ததால். 16) கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1792. 17) இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்? பூலித்தேவர். 18) பூலித்தேவர் எந்தப் பகுதியின் பாளையக்கார்ர் ஆவார்? திருநெல்வேலி அருகே இருந்த நெற்கட்டும்செவல். 19) பூலித்தேவர் யாருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்க்க தொடங்கினார்? ஆற்காடு நவாப் முகமது அலி. 20) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் யாரைத் தாக்கின? பூலித்தேவர். 21) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரால் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்? திருநெல்வேலியில். 22) இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்? பூலித்தேவர். 23) யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலை தாக்கிய ஆண்டு? 1759. 24) யூசுப்கான் படையினால் பூலித்தேவர் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டார்? அந்தநல்லூர். 25) ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு? 1761. 26) பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கைக்கு பின் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு என்ன? 1764. 27) கேப்டன் கேம்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1767. 28) கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? ஆந்திரா. 29) கட்டபொம்மனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நூற்றாண்டில் குடிபெயர்ந்தனர்? 11ஆம் நூற்றாண்டு. 30) பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் யார்? ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன். 31) ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது? வீரபாண்டியபுரம். 32) ஜெகவீரபாண்டியனின் மகன் யார்? வீரபாண்டிய கட்டபொம்மன். 33) வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி யார்? ஜக்கம்மாள். 34) வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்? ஊமைத்துரை, செவத்தையா 35) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குபின் தெற்கில் தங்கள் மேலாண்மையை நிறுவியவர்கள் யார்? முகலாயர்கள். 36) கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநியாக செயல்பட்டார். 37) பாஞ்சாலங்குறிச்சி பாளையம் யாருடைய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருந்தது? ஆற்காடு நவாப். 38) எந்த உடன்படிக்கையின்படி கம்பெனி பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றது? கர்நாடகா உடன்படிக்கை 1792. 39) இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் எந்த ஆண்டு கட்டபொம்மனை நிலுவைத் தொகை செலுத்த சொல்லி கடிதம் எழுதனார்? 1798. 40) கலெக்டர் ஜாக்சனுக்கு கட்டபொம்மன் எழுதிய பதில் கடிதம் என்ன? "பஞ்சத்தின் காரணமாக நிலுவையைச் செலுத்தும் சூழ்நிலையில் இல்லை". 41) 1798 இல் கட்டபொம்மன் யாருடன் சென்று இராமநாதபுரத்தில் கலெக்டர் ஜாக்சனை சந்தித்தார்? அமைச்சர் சிவசுப்பிரமணியம். 42) கட்டபொம்மன் எவ்வளவு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினார்? 1080 பகோடா நீங்கலாக. 43) கட்டபொம்மனும், சிவசுப்பிரமணியமும் ஜாக்சன் முன்பு எவ்வளவு நேரம் நிற்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்? 3 மணிநேரம். 44) ஜாக்சனால் சிறை பிடிக்கப்பட்ட கட்டபொம்மனை தப்பிக்க உதவி செய்தவர் யார்? ஊமைத்துரை. 45) இறுதியில் சிறை பிடிக்கப்பட்டவர் யார்? சிவசுப்பிரமணியம். 46) பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்துகொண்டதை யாருக்கு கடிதம் மூலம் தெரிவுபடுத்தினார்? சென்னைக் கவுன்சில். 47) கட்டபொம்மனின் கடிதத்தைக் கண்ட சென்னை கவுன்சில் ஜாக்சனை பதவி நீக்கி யாரை இராமநாதபுர கலெக்டராக நியமிக்கப்பட்டது? எஸ்.ஆர். லூஷிங்டன். 48) சென்னை கவுன்சிலின் கவர்னர் யார்? எட்வர்டு கிளைவ். 49) "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள்" கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யார்? மருது சகோதரர்கள். 50) "திருச்சிராப்பள்ளி பிரகடத்தை" வெளியிட்டவர்கள் யார்? மருது சகோதரர்கள். 51) தென்னிந்திய கூட்டமைப்பில் இணைய மறுத்த பாளையம் எது? சிவகிரி பாளையம். 52) 1799 செப்டம்பர் 05 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையை அனுப்பி வைத்த ஆங்கிலேயர் யார்? மேஜர் பானர்மேன். 53) சிவசுப்பிரமணியம் எங்கு நடைபெற்ற சண்டையில் கைது செய்யப்பட்டார்? கள்ளர்பட்டி. 54) கட்டபொம்மன் எங்கு தப்பித்துச் சென்றார்? புதுக்கோட்டை 55) களப்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மனை காட்டிக்கொடுத்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்? ராஜா விஜயரகுநாத தொண்டைமான். 56) பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கம்பெனியின் கைவசம் வந்த பிறகு மேஜர பான்ர்மேன் கைதிகளை என்ன செய்தார்? மாதண்டனை வழங்கினார். 57) சிவசுப்பிரமணியம் எந்த இடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்? நாகலாபுரம். 58) 1799 அக்டோபர் 16 ஆம் நாள் கட்டபொம்மன் பாளையக்காரர் அவையின் முன் விசாரிக்கப்பட்டார். 59) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு (1799 அக்டோபர் 17) 60) சிவகங்கையின் ராணி வேலுநாச்சியார் எந்த வயதில் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார்? 16 ஆம் வயதில். 61) ஆற்காடு நவாப் படைகள் எந்த ஆண்டு சிவகங்கையை தாக்கியது? 1772. 62) முத்துவடுகநாதர் எங்கு நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்? காளையார்கோவில் (1772). 63) வேலுநாச்சியார்-முத்துவடுகநாதர் தம்பதியருக்கு பிறந்த பெண் மகள் யார்? வெள்ளச்சி நாச்சியார். 64) வேலுநாச்சியார் தனது பெண்மகளுடன் யாருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்? திண்டுக்கல்-விருபாட்சியில் கோபாலநாயக்கர். 65) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி யார்? குயிலி. 66) வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்க்க உதவி புரிந்தவர்கள் யார்? மருது சகோதரர்கள். 67) இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி யார்? வேலுநாச்சியார். 68) வேலுநாச்சியார் தமிழர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? "வீரமங்கை", "தென்னிந்தியாவின் ஜான்சிராணி". 69) பொன்னாத்தாள்-மூக்கைய்யா பழனியப்பன் ஆகியோரின் புதல்வர்கள் யார்? மருது சகோதரர்கள். 70) மருது சகோதரர்களில் மூத்தவர் யார்? பெரிய மருது (வெள்ளை மருது) 71) மருது சகோதரர்களில் இளையவர் யார்? சின்ன மருது (மருது பாண்டியன்) 72) சின்ன மருது யாரிடம் பணிபுரிந்தார்? முத்துவடுக நாத பெரிய உடையத்தேவர். 73) சிவகங்கை மீண்டும் கைப்பற்றப்பட்டு அரசராக பொறுப்பேற்றவர் யார்? பெரிய மருது. 74) பெரிய மருதுவிற்கு ஆலோசகராக இருந்தவர் யார்? சின்ன மருது. 75) "சிவகங்கை சிங்கம்" யார்? சின்ன மருது. 76) மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்ற மோதலுக்கான காரணங்கள்: I) கட்டபொம்மனின் இறப்பிற்கு பின் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் சிவகங்கைக்குத் தப்பித்தனர். II) சிவகங்கையில் மருது சகோதரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்தனர். III) சிவகங்கை வியாபாரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை. 77) எந்த ஆண்டு கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் சிறையிலிருந்து தப்பித்து கமுதியை வந்தடைந்தனர்? 1801 பிப்ரவரி. 78) சிறையிலிருந்து தப்பித்த ஊமைத்துரையும், செவத்தையாவையும் சின்ன மருது எங்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்? சிறுவயல். 79) கட்டபொம்மனின் சகோதரர்கள் மீண்டும் புனரமைத்த கோட்டை எது? பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 80) மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கிய ஆங்கில படை எது? காலின் மெக்காலே. 81) மருது சகோதரர்களுக்கு எதிராக படைநடத்தி சென்றவர்கள் யார்? கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ். 82) தென்னிந்திய கூட்டமைப்பில் இருந்தவர்கள் யாவர்: I) சிவகங்கையின் மருது சகோதரர்கள். II) திண்டுக்கல்லின் கோபால நாயக்கர். III) மலபாரின் கேரளவர்மன். IV) மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர். V) துண்டாஜி. 83) "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" அல்லது "சுதந்திர பிரகடனம்" அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1801 ஜீன். 84) ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது எது? திருச்சிராப்பள்ளி பிரகடனம். 85) திருச்சிராப்பள்ளி பிரகடனம் எங்கெங்கு ஒட்டப்பட்டது? I) ஆற்காடு நவாப்பின் அரண்மனையான திருச்சி கோட்டை சுவரிலும். II) ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. 86) ஆங்கிலேயரை எதிர்த்து போரிட மருது சகோதரர்களிடம் இருந்த வீரர்கள் எத்தனை பேர்? 20000 பேர். 87) ஆங்கிலேய படைகளுக்கு வலுவூட்ட எந்தப் பகுதியிலிருந்து படைகளை வரவழைத்தனர்? இலங்கை, மலேயா. 88) புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசர்கள் யாருக்கு ஆதரவு அளித்தனர்? ஆங்கிலேயர்களுக்கு. 89) பாளையக்கார்ர்களின் படைகளில் பிளவை ஏற்படுத்தியது எது? ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை. 90) 1801 இல் ஆங்கிலேயர்கள் எந்தப் பகுதியை தாக்கினர்? தஞ்சாவூர், திருச்சி. 91) கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பயந்து எப்பகுதிக்குச் சென்றனர்? பிரான்மலை, காளையார் கோயில். 92) தென்னிந்திய கிளர்ச்சியில் வென்றவர்கள் யார்? ஆங்கிலேயர்கள். 93) சிவகங்கையை மருது சகோதர்ர்கள் இணைத்துக் கொண்டது எந்த ஆண்டு? 1801. 94) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? இராமநாதபுரம் திருப்பத்தூர் கோட்டை 95) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் எது? அக்டோபர் 24, 1801. 96) ஊமைத்துரை, செவத்தையா தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நாள் எது? பாஞ்சாலங்குறிச்சி? 1801 நவம்பர் 16. 97) கிளர்ச்சியாளர்களில் எத்தனை பேர் மலேயாவில் உள்ள பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர்? 73 பேர். 98) பினாங் தீவு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வேல்ஸ் இளவரசர் தீவு. 99) ஆங்கிலேய ஆவணங்களில் "இரண்டாவது பாளையக்காரர் போர்" எனக் குறிப்பிடப்படும் போர் எது? தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801) 100) கர்நாடக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட நாள் எது? 1801 ஜீலை 31. 101) தீரன் சின்னமலை பிறந்த ஊர்? ஈரோடு சென்னிமலை (மேலப்பாளையம்). 102) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் யார்? தீரன் சின்னமலை. 103) கொங்கு நாடு: சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர். 104) கொங்கு பகுதி யாரால் இணைக்கப்பட்டது? மைசூர் உடையார்களால். 105) மைசூர் உடையார்கள் வீழ்ந்த பிறகு அப்பகுதி யாரால் ஆளப்பட்டது? மைசூர் சுல்தான்கள். 106) தீரன் சின்னமலை எந்த இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார்? பிரெஞ்சு. 107) திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிரேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றவர் யார்? தீரன் சின்னமலை. 108) தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்க்க கோட்டை கட்டிய இடம் எது? ஓடாநிலை. 109) தீரன் சின்னமலை எப்பகுதிகளில் கொரில்லா போர் முறையைப் பின்பற்றி ஆங்கிலேயர்களை தோற்கடித்தார்? காவேரி, ஓடாநிலை, அரச்சலூர். 110) இறுதி போரின் போது தீரன் சின்னமலையை காட்டிக் கொடுத்தவர் யார்? அவரின் சமையற்காரர் நல்லப்பன். 111) தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்? 1805 சங்ககிரி கோட்டை 112) நான்காம் மைசூர் போருக்கு பின் திப்புவின் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டனர்? வேலூர் கோட்டை 113) ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் எங்கு இடம்பெயர்ந்தனர்? வேலூர். 114) 1803 இல் சென்னை மாகாண கவர்னர் யார்? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங். 115) யாருடைய காலத்தில் இராணுவத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங். 116) 1803 ல் சென்னை மாகாண படைத்தளபதி யார்? சர் ஜான் கிடராக். 117) வேலூர் புரட்சிக்கான காரணங்கள்: I) புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் சிப்பாய்களுக்கு அறிமுகம். II) தாடி, மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். III) சமய அடையாளத்தை நெற்றியில் இடுதல், காதுகளில் வளையம் அணிதல் ஆகியவை தடை செய்யப்பட்டன. IV) ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை தாழ்வாகவும், இன பாரட்சமும் காட்டி நடத்தினர். 118) வேலூர் புரட்சிக்கான உடனடிக் காரணங்கள்: I) ஜீன் 1806 இல் இராணுவத் தளபதி அக்னியூ தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார். II) "அக்னியூ தலைப்பாகை" எனப்பட்டது. III) இந்து முஸ்லீம் வீரர்கள் இதனை ஒன்றாக எதிர்த்தனர். IV) இதனால் ஆங்கிலேயர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். 119) திப்புவின் மூத்த மகன் யார்? பதே ஹைதர். 120) வேலூர் புரட்சியை தொடங்கியவர்கள் யாவர்? 1 வது மற்றும 23 வது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள். 121) ஆங்கிலேய படையை வழிநடத்தியவர் யார்? கர்னல் பான்கோர்ட். 122) திப்புவின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் என்ன? புலி. 123) கிளர்ச்சியாளர்கள் யாரை புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்? பதே ஹைதர். 124) கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் கூட்ஸ். 125) வேலூர் கிளர்ச்சியை அடக்கிய ஆங்கில தளபதி யார்? கர்னல் கில்லெஸ்பி. 126) வேலூர் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை? மொத்தம் 113 பேர். (ஐரோப்பியர்கள்&300 சிப்பாய்கள்). 127) வேலூர் கலகத்தின் விளைவுகள்: I) புதிய முறைகள். II) சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. III) வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார். 128) புரட்சிக்கு பிறகு திப்புவின் குடும்பம் எங்கு அனுப்பப்பட்டனர்? கல்கத்தா. 129) வேலூர் கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்: I) இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை. II) கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை. III) ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது. 130) 1806 இல் நடந்த வேலூர் கலக்ம் 1857 இல் நடைபெற்ற "முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி" என்று கூறியவர் யார்? வி.டி. சவார்க்கர். 131) 1857 புரட்சிக்கான காரணங்கள்: I) ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் கெள்கை. II) வாரிசு இழப்புக் கொள்கை. III) துணைப்படைத் திட்டம். IV) நாடு இணைக்கும் கொள்கை. V) கிறிஸ்துவ சமய பரப்பாளர்களின் மத மாற்ற கொள்கை. VI) சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் ஒழிப்பு நடவடிக்க்கைள் இந்திய கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதினார். VII) ஆங்கிலேய சிப்பாய்களைக் காட்டிலும் இந்திய சிப்பாய்கள் குறைவான ஊதியமே பெற்றனர். 132) பெரும்புரட்சிக்கான உடனடிக் காரணம்: I) இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி. II) குண்டுகளின் மேலுறை பசுவின் கொப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. III) இந்துக்கள் பசுவை புனிதமாக கருதினர். IV) முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்கள். 133) புரட்சியின் முதல் பொறி எங்கு தொடங்கப்பட்டது? 1857 மார்ச் 29 பாரக்பூர். 134) புரட்சியை தொடங்கி வைத்தவர் யார்? மங்கள் பாண்டே. (இவர் கொழுப்பு தடவிய துப்பாக்கியை தொட மறுத்து தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்றார்) 135) 1857 ஆம் ஆண்ட மே 10 ஆம் நாள் புரட்சி எங்கு வெடித்தது? மீரட். 136) மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சக படைவீரர்களை விடுவித்தன் மூலம், வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர். 137) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாருடன் இணைந்தனர்? 11 வது மற்றும் 20 வது உள்ளூர் காலாட்படை. 138) டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் மே 11 ஆம் நாள் யாரை இந்தியாவின் பேர்ரசராக அறிவித்தனர்? இரண்டாம் பகதூர்ஷா. 139) புரட்சி பரவிய இடங்கள்? லக்னோ, கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத். 140) ஆங்கிலப் படை குவாலியரை எப்போது கைப்பற்றியது? 1858 ஜீன். 141) மத்திய இந்தியாவில் புரட்சி வழிநடத்திய பெண்மணி யார்? ராணி லட்சுமிபாய். 142) புரட்சியை உடனடியாக அடக்க முயற்சி எடுத்தவர் யார்? கானிங் பிரபு. 143) கானிங் பிரபு புரட்சியை அடக்க படைகளை எங்கிருந்து வரவழைத்தார்? இலங்கை, சென்னை, பம்பாய். 144) டெல்லி மீண்டும் யாரால் கைப்பற்றப்பட்டது? 1857 செப்டம்பர் 20 இல் நிக்கல்சன். 145) இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்? ரங்கூன். 146) இரண்டான் பகதூர்ஷா இறந்த ஆண்டு? 1862. 147) கான்பூரை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி யார்? சர் காலின் கேம்பெல். 148) கான்பூரில் புரட்சியை வழி நடத்தி சென்றவர் யார்? நானாசாகிப். 149) நானாசாகிப் எங்கு தப்பியோடினார்? நேபாளம். 150) கலகம் பற்றியவை:
151) பெருங்கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்: I) சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லை. II) கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. III) வங்காளம், பம்பாய், சென்னை. மேற்கு பஞ்சாப், இராஜபுதனம் புரட்சியில் கலந்துகொள்ளவில்லை. IV) நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை. V) சீக்கியர்கள், ஆப்கானியர்கள், கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் ஆதரவை ஆங்கிலேயர்கள் பெற்றனர். 152) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? 1858. 153) கவர்னர்-ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டது? வைசிராய். 154) இயக்குநர் குழு மற்றும கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் எத்தனை பேர் கொண்ட சபை அமைக்கப்பட்டது? 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சில். 155) ஆங்கில இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்திய கொள்கை எது? "பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல்". 156) நவீன இந்திய இயக்கம் தோன்ற வழிவகுத்த போர் எது? 1857 பெரும்புரட்சி. 157) "முதல் இந்திய சுதந்திரபோர்" என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு புரட்சியை எவ்வாறு குறிப்பிட்டிருந்தார்? "ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்" எனக் குறிப்பிட்டார். |
10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் |
---|
1) நெற்கட்டும்செவலில் ஆட்சிப்புரிந்த மன்னர் யார்? பூலித்தேவர். |
11th - வரலாறு - ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் |
---|
1) விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக எந்த பகுதி இருந்தது? மைசூர். |
10th வரலாறு தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் |
---|
1) சென்னைவாசிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் ஏற்படுத்தியவர்கள் யார்? 1852 மற்றும் கஜிலு லட்சுமி நரசு, சீனிவாசனார். |
வேலுநாச்சியார் & ருக்மணி லட்சுமிபதி |
---|
● இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி. 1730 ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலுநாச்சியார். ருக்மணி லட்சுமிபதி |
மூவலூர் இராமாமிர்தம் & முத்துலட்சுமி ரெட்டி |
---|
மூவலூர் இராமாமிர்தம் முத்துலட்சுமி ரெட்டி |
பெண்கள் இயக்கங்கள் |
---|
● இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன. |
minnal vega kanitham