பிழை திருத்துக. (எ.கா.) ஒரு - ஓர் |
---|
திடம் அறிந்து பயன்படுத்துவோம்
• ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். (எ.கா.) ஓர் ஊர், ஓர் ஏரி ஒரு நகரம், ஒரு கடல் • இவை போலவே, உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். (எ.கா.) அஃது இங்கே உள்ளது அது நன்றாக உள்ளது கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக 1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது. விடை : ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது. 2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள். விடை : ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள். 3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது. விடை : அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது. 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை. விடை : அது நகரத்திற்குச் செல்லும் சாலை. 5. அது ஒரு இனிய பாடல். விடை : அஃது ஓர் இனிய பாடல். |
ஒரு - ஓர்
மே 31, 2025
0
Tags
minnal vega kanitham