Type Here to Get Search Results !

Day 28 New syllabus அடிப்படையில் 9th தமிழ் இயல் - 2

0
இலக்கணக்குறிப்பு
● வெந்து, வெம்பி, எய்தி - வினையெச்சங்கள்
● மூடுபனி - வினைத்தொகை,
● ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்
● கருங்குவளை, செந்நெல் - பண்புத் தொகைகள்.
● விரிமலர் - வினைத்தொகை
● தடவரை - உரிச்சொல் தொடர்
● மூதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகைகள்;
● நிறுத்தல் - தொழிற்பெயர் ;
● அமையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
● நீரும் நிலமும், உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்;
● அடு போர் - வினைத்தொகை.
● கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்.

தமிழ்ஒளி
நூல் வெளி
● கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர்.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்:
● மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.
● இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
அறிவை விரிவு செய்
1. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
2. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்
3. தண்ணீர் தேசம் - வைரமுத்து
4. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு
5. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்

கலைச்சொல் அறிவோம்
● குமிழிக் கல் - Conical Stone
● நீர் மேலாண்மை - Water Management
● பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
● வெப்ப மண்டலம் - Tropical Zone

சொல்லும் பொருளும்
● குந்த - உட்கார, கந்தம் - மணம்
● மிசை - மேல் , விசனம் – கவலை
● மா - வண்டு;
● மது - தேன் ;
● வாவி - பொய்கை.
● வளர் முதல் - நெற்பயிர் ;
● தரளம் - முத்து;
● பணிலம் - சங்கு;
● வரம்பு - வரப்பு.
● கழை - கரும்பு ;
● கா - சோலை ;
● குழை - சிறு கிளை;
● அரும்பு - மலர் மொட்டு;
● மாடு - பக்கம்;
● நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள் ;
● கோடு - குளக்கரை.
● ஆடும் - நீராடும் ;
● மேதி - எருமை ;
● துதைந்து எழும் - கலக்கி எழும்;
● கன்னி வாளை - இளமையான வாளைமீன்.
● சூடு - நெல் அரிக்கட்டு ;
● சுரிவளை - சங்கு ;
● வேரி - தேன்.
● பகடு - எருமைக்கடா ;
● பாண்டில் - வட்டம் ;
● சிமயம் - மலையுச்சி.
● நாளிகேரம் - தென்னை ;
● நரந்தம் - நாரத்தை ;
● கோளி - அரசமரம் ;
● சாலம் - ஆச்சா மரம் ;
● தமாலம் - பச்சிலை மரம்;
● இரும்போந்து - பருத்த பனைமரம் ;
● சந்து - சந்தன மரம் ;
● நாகம் - நாகமரம் ;
● காஞ்சி - ஆற்றுப்பூவரசு
● யாக்கை - உடம்பு,
● புணரியோர் - தந்தவர்,
● புன்புலம் - புல்லிய நிலம்,
● தாட்கு - முயற்சி, ஆளுமை;
● தள்ளாதோர் இவண் தள்ளாதோரே - குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
தெரிந்து தெளிவோம்
● அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி - எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன.

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.
1. Every flower is a Soul blossoming in nature - Gerard De Nerval
விடை :
● மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.
● பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek
விடை :
● மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.
● பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.
3. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau
விடை :
● மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.
● பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.
4. Just living is not enough .... one must have sunshine, freedom and a little flower - Hans Christian Anderson
விடை :
● மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
● பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
விடை :
● நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
விடை :
● நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
விடை :
● அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
விடை :
● தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன்.

பிழை நீக்கி எழுதுக

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை :
● சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை :
● மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன:
விடை :
● மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4 .நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை :
● நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை :
● சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

Book Back
1) பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
● அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) வேறுபடுத்துவது மொழியாகும்.
● ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) பெற்றிருக்கின்றன.
● இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்.
● ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) தேடிக் கொண்டிருக்கிறேன்.
2) ‘மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ) கீழே
ஆ) மேலே
இ) இசை
ஈ) வசை
விடை : அ) கீழே
3) பொருத்தமான விடையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ......... அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் .....
அ) வந்தான், வருகிறான்
ஆ) வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான், வருவான்
ஈ) வருவான், வரமாட்டான்
விடை : ஆ) வந்துவிட்டான், வரவில்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்