Type Here to Get Search Results !

Day 14 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 5

0
பாரதிதாசன்
நூல் வெளி
கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
• இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
• பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

நாலடியார்
நூல் வெளி
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
• இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
• திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
• இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.
ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.) ஆறு - ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.
1. விளக்கு - பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.
2. படி - வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.
3. சொல் - மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது.
4. கல் - காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.
5. மாலை - மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.
6. இடி - இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

கலைச்சொல் அறிவோம்
• கோடை விடுமுறை - Summer Vacation
• குழந்தைத் தொழிலாளர் - Child Labour
• பட்டம் - Degree
• கல்வியறிவு - Literacy
• நீதி - Moral
• சீருடை - Uniform
• வழிகாட்டுதல் - Guidence
• ஒழுக்கம் - Discipline

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
தெரிந்து தெளிவோம்
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
• 1. ஆ- பசு
• 2. ஈ- கொடு
• 3. ஊ- இறைச்சி
• 4. ஏ- அம்பு
• 5. ஐ- தலைவன்
• 6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை
• 7. கா- சோலை
• 8. கூ- பூமி
• 9. கை- ஒழுக்கம்
• 10. கோ-அரசன்
• 11. சா- இறந்துபோ
• 12. சீ- இகழ்ச்சி
• 13. சே- உயர்வு
• 14. சோ- மதில்
• 15. தா - கொடு
• 16. தீ- நெருப்பு
• 17. தூ- தூய்மை
• 18. தே- கடவுள்
• 19. தை- தைத்தல்
• 20. நா- நாவு
• 21. நீ- முன்னிலை ஒருமை
• 22. நே- அன்பு
• 23. நை- இழிவு
• 24. நோ வறுமை
• 25. பா- பாடல்
• 26. பூ- மலர்
• 27. பே - மேகம்
• 28. பை- இளமை
• 29. போ- செல்
• 30. மா- மாமரம்
• 31. மீ- வான்
• 32. மூ - மூப்பு
• 33. மே- அன்பு
• 34. மை- அஞ்சனம்
• 35. மோ- மோத்தல்
• 36. யா- அகலம்
• 37. வா- அழைத்தல்
• 38. வீ- மலர்
• 39. வை- புல்
• 40. வௌ - கவர்
• 41. நொ- நோய்
• 42 . து- உண்.
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ________
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
[விடை : ஆ. 42]

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) ‘ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) ஏடே + தேன்
ஆ) ஏட்டு + எடுத்தேன்
இ) ஏடு + எடுத்தேன்
ஈ) ஏ + டெடுத்தேன்
[விடை : இ. ஏடு + எடுத்தேன்]

2) 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) துயின்று + இருந்தார்
ஆ) துயில் + இருந்தார்
இ) துயின்றி + இருந்தார்
ஈ) துயின் + இருந்தார்
[விடை : அ. துயின்று + இருந்தார்]

3) என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) என்றுஉரைக்கும்
ஆ) என்றிரைக்கும்
இ) என்றரைக்கும்
ஈ) என்றுரைக்கும்
[விடை : ஈ. என்றுரைக்கும்]

4) ‘வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
[விடை : அ. வாய்த்து + ஈயின்]

5)'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
[விடை : ஈ. கேடு + இல்லை]

6) எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
[விடை : இ. எவனொருவன்]

7) ‘உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
[விடை :ஈ. உயர்வு + அடைவோம்]

8) இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) இவைஎல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
[விடை : ஆ. இவையெல்லாம்]

1) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ________
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
[விடை : ஆ. காலம் அறிதல்]

2) ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாடியவர் ________
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
[விடை : இ. பாரதியார்]
சொல்லும் பொருளும்
• எத்தனிக்கும் - முயலும்
• வெற்பு - மலை
• கழனி - வயல்
• நிகர் - சமம்
• பரிதி - கதிரவன்
• அன்னதோர் - அப்படிஒரு
• கார்முகில் - மழைமேகம்
• துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
பின்வருவனவற்றுள் ‘மலை'யைக் குறிக்கும் சொல்
அ) வெற்பு
ஆ) காடு
இ) கழனி
ஈ) புவி
[விடை : அ. வெற்பு]

பொருத்துக.
வினா
1. கழனி - கதிரவன்
2. நிகர் - மேகம்
3. பரிதி - சமம்
4. முகில் - வயல்
விடை
1. கழனி - வயல்
2. நிகர் - சமம்
3. பரிதி - கதிரவன்
4. முகில் - மேகம்

• வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
• கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
• வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
• விச்சை - கல்வி
• வவ்வார் – கவர முடியாது
• எச்சம் – செல்வம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்