Type Here to Get Search Results !

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி || அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

0
திரிகடுகம் (7th தமிழ் Old புத்தகம் இயல் - 4)
ஆசிரியர் குறிப்பு:
• திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார். (2014, 2017 Group 2)
• இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
• இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடு வதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் குறிப்பு :
• திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது.
• சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்.
• இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.
நூல் பயன் :
• திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும்.

சிறுபஞ்சமூலம் (9th தமிழ் புதிய & பழைய புத்தகம்)
ஆசிரியர் குறிப்பு:
• காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
• இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
• இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
• பெரும்பான்மை பொது அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூற்குறிப்பு:
• சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இதன் ஆசிரியர் காரியாசான். (2014, 2017 Group 2)
• இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் உள்ளன.
• கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன.
• அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்தும் மக்கள் மனநோயைப் போக்குவன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
நூல் வெளி
• தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
• அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
• அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
• ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
• அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
• இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
• அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
• இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
• சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்,
• மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
• காரி என்பது இயற்பெயர்.
• ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
• மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

ஏலாதி (10th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார். (2014 Group 2)
• இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
• இவர், சமண சமயத்தவர் என்பர். (2018 Group 2)
• இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
• இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
• இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூற்குறிப்பு :
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
• இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
• நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
• இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
• ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
• இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
• அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்