பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் |
---|
ஆசிரியர் குறிப்பு
• 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்; • திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். • உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார். • பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர். • இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை |
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 8
தனிப்பாடல் திரட்டு |
---|
நூல்குறிப்பு
• புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. • அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர். • பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர்; துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர். |
உடுமலை நாராயணகவி |
---|
ஆசிரியர் குறிப்பு
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார். • பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். • “பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர். • இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை |
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 9
திருக்குற்றாலக் குறவஞ்சி |
---|
நூல்குறிப்பு :
• இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. • ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல் ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன. |
அழகிய சொக்கநாதப் புலவர் |
---|
ஆசிரியர் குறிப்பு
• அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர். • இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். • இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு. • நூல்குறிப்பு தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது. • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். • இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல். • இருபொருள்படப் பாடுவது. (எ.கா.) ஆறு ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும். |
minnal vega kanitham