Type Here to Get Search Results !

6th தமிழ் பழைய புத்தகம் இயல் 2

0
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 2
நூல்குறிப்பு
• நாலடியார் – சமணமுனிவர்
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
• இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
• அறக்கருத்துகளைக் கூறுவது.
• 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
• இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.

பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்
• சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
• பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள்.
• இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
• சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது.
• இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
• பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள்.
• இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர்.
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

ஆசிரியர் குறிப்பு:
• பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்.
• 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கொண்டாடப்பட்டவர்.
• இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
• கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே.
• இந்தப் பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்' எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
• இவர் வாழ்ந்த காலம் 11.12.1882 முதல் 11.9.1921வரை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்