6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 1
இராமலிங்க அடிகளார்
ஆசிரியர் குறிப்பு
•
இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்
பெயர் பெற்றவர்.
•
இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
•
பெற்றோர் இராமையா-சின்னம்மையார்.
•
ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை.
•
இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
•
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.
•
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.
•
அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
•
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
•
வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.
• இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823 முதல் 30.01.1874வரை.
திருக்குறள்
ஆசிரியர்
குறிப்பு:
•
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
•
இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
•
இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
•
இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
•
இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
•
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
•
இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன.
•
ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
•
இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
•
இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர்.
•
திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
•
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)
• அரவிந்த குப்தா எழுதிய
'டென் லிட்டில் பிங்கர்ஸ்'.
• பெயர்- உ.வே.சாமிநாதன்
• ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
• இயற்பெயர் - வேங்கடரத்தினம்
• ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
• உ.வே.சா.வின் ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.
• உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
• தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம்.
• இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
• காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
• உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
• உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
• உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
• நடுவணரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
• உ.வே.சா அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
• "குறிஞ்சிப்பாட்டு" என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார். அப்போது 96 பூக்களின் பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தது.
• 'குறிஞ்சிப்பாட்டு' சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் காணப்படும்.
• குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
• ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
• உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
• உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
• உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார்.
• நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர்
• யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர்? உ.வே.சா
• மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்? உ.வே.சா
• பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
• ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
• ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு
• ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்:
1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை.
2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை.
3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
• உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
1. எட்டுத்தொகை – 8
2. பத்துப்பாட்டு – 10
3. சீவகசிந்தாமணி – 1
4. சிலப்பதிகாரம் – 1
5. மணிமேகலை - 1
6. புராணங்கள் – 12
7. உலா – 9
8. கோவை – 6
9. தூது – 6
10. வெண்பா நூல்கள் – 13
11. அந்தாதி - 3
12. பரணி – 2
13. மும்மணிக்கோவை – 2
14. இரட்டைமணிமாலை - 2
15. பிற பிரபந்தங்கள் – 4
minnal vega kanitham