1. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகள் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்" என்ற பாடலை இயற்றியவர் – காவற்பெண்டு.
2. தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு.
3. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்- காவற்பெண்டு.
4. சங்ககால பெண்புலவரான காவற்பெண்டு எத்தனை பாடல்களை பாடியுள்ளார் – ஒன்று.
5. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குவது – புறநானூறு.
6. யாண்டு என்னும் சொல்லின் பொருள் – எங்கு.
7. 'யாண்டுளனோ'? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாண்டு + உளனோ?
8. 'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – கல்லளை.
9. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலினைத் தொகுத்து வெளியிட்டவர் - நா. வானமாமலை
10. பாஞ்சலை வளம் என்ற பாடலில் ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வந்தது – வாரணம்.
11. பாஞ்சலை வளம் என்ற பாடலில் பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டிடும் – முயல்.
12. மெத்தை விடு என்று குறிப்பிடப்படுவது - மாடி வீடு.
13. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பூட்டு + கதவுகள்.
14. "தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - தோரணம் + மேடை.
15. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்.
16. கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங் குறிச்சிக்கு திருவாக்கு அருள்பவள் – சக்கமாதேவி.
17. தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
18. தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் –முத்துராமலிங்கத்தேவர்.
19. வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் – முத்துராமலிங்கத்தேவர்.
20. உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்-முத்துராமலிங்கத்தேவர்.
21. "சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.
22. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்பிறந்த ஆண்டு – 1908.
23. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுரம்.
24. முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் , தாயார் பெயர் - உக்கிர பாண்டியத் தேவர், இந்திராணி.
25. முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம் – கமுதி.
26. முத்துராமலிங்கத் தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் – பசுமலை.
27. 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் – காமராஜர்.
28. ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர் - முத்துராமலிங்க தேவர்.
29. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர் – திலகர்.
30. தென் இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர்- முத்துராமலிங்கத்தேவர்.
31. முத்துராமலிங்கத் தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் - திரு.வி.க.
32. வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் – நேதாஜி.
33. முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு – நேதாஜி.
34. முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு- 1939.
35. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் – நேதாஜி.
36. முத்துராமலிங்கத் தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம் – சாயல்குடி.
37. "முத்துராமலிங்கத் தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்”என்று கூறியவர் – காமராசர்.
38. "தென்னாட்டுச் சிங்கம்" என்று போற்றப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
39. “முத்துராமலிங்கத் தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று புகழ்ந்தவர் - அண்ணா .
40. முத்துராமலிங்கத் தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல" என்று கூறியவர் – இராஜாஜி.
41. முத்துராமலிங்கத் தேவர், இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஷ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு – 1937.
42. தேர்தலில் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்டவர் - வி.வி.கிரி.
43. முத்துராமலிங்கத் தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள் - 1937, 1946, 1952, 1957, 1962.
44. பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பலவேறு போராட்டங்களை நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
45. முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச்சட்ட எதிர்ப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு- 1934.
46. குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு – 1948.
47. மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போரட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் நடத்திய ஆண்டு- 1939.
48. ஐமின் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப்பாடுபட்டவர்- முத்துராமலிங்கத் தேவர்.
49. 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் திகழ்ந்தவர் -முத்துராமலிங்கத் தேவர்.
50. பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
51. 1938 ஆம் ஆண்டு மதுரை நூற்பு ஆலை தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
52. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று போராடியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
53. முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் - அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்.
54. பசும்பொன் முத்கராமலிங்கத் தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் - 20.075.
55. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாட்கள்- 4000.
56. தேசியம் காத்த செயல் என்று அழைக்கப்படுபவர்- முத்துராமலிங்கத் தேவர்.
57. வித்யா பாஸ்கர் என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
58. பிரவண கேசரி என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
59. சன்மார்க்க சண்டமாருதம் என்று அழைக்கப்படுபவர் – முத்துராமலிங்கத்தேவர்.
60. இந்து புத்த சமய மேதை என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.
61. முத்துராமலிங்கத்தேவர் இயற்கை எய்திய ஆண்டு – 1963.
62. விவேகானந்தரின் தூதராகவும், நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
63. தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக விளங்கியவர் - முத்துராமலிங்கத் தேவர்.
64. சத்திய சிலராகவும், முருகப்பக்தராகவும் இருந்தவர் -முத்துராமலிங்க தேவர்.
65. ஆன்மிகப் புத்திரராகவும், தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
66. புலமையில் கபிலராகவும், வலிமையில் கரிகாலனாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
67. கொடையில் கர்ணனாகவும், பக்தியில் பரமஹம்சராகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.
68. இந்திய அரசு, முத்துராமலிங்கத் தேவருக்கு தபால்தலை வெளியிட்ட ஆண்டு- 1995.
69. தமக்கு சொந்தமான 32, சிற்றூர்களில் இருந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.
70. சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.
71. பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் – கொற்கை.
72. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்'' என்று கூறியவர் – திருவள்ளுவர்.
73. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் – பாண்டித்துரை.
74. கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் - வ.உ.சி.
75. “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர் – திலகர்.
76. "வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம் என்ற பாடலை பாடியவர்- பாரதியார்.
77. "சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று கூறியவர் – பின்ஹே.
78. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி – பின்ஹே.
79. "சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ! கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ!" என்று கூறியவர் -வ.உ.சி.
80. "தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன், இன்னிலையக் கற்று என் இன்னல்களை வென்றேன்' என்று கூறியவர் – வ.உ.சி.
81. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் – வ. உ.சி.
82. மெய்யறிவு". "மெய்யறம்" என்ற நூல்களை இயற்றியவர் - வ .உ.சி.
83. "பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்' என்ற பாடலை இயற்றியவர் – சிதம்பரனார்.
84. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் - இரா.பி. சேதுப்பிள்ளை.
85. இரா.பி. சேதுப்பிள்ளையின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – தமிழின்பம்.
86. ஆற்றங்கரையினிலே" என்ற நூலை எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை .
87. 'தமிழ்விருந்து" என்ற நூலை எழுதியவர் - இராபி.சேதுபிள்ளை.
88. கடற்கரையினிலே' என்ற நூலை எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை.
89. "தமிழகம் ஊரும் பேரும்' என்ற நூலை எழுதியவர் - இரா.பி. சேதுபிள்ளை.
90. மேடைப்பேச்சு" என்ற நூலை எழுதியவர் - இரா.பி. சேதுபிள்ளை.
91. பொருத்துக:
1. சிற்றில் - சிறு வீடு
2. பெற்றெடுத்த வயிறு- ஈன்ற வயிறு
3. கல்அளை- கற்குகை
4. எங்கே - யாண்டு
92. பொருத்துக:
1. சூரன்- வீரன்
2. சாஸ்தி- மிகுதி
3. பொக்கிஷம்- செல்வம்
4. விஸ்தாரம்- பெரும்பரப்பு
93. பொருத்துக
1. வாரணம்- யானை
2. கமுகு - பாக்கு
3. பரி- குதிரை
4. சிங்காரம் – அழகு
எல்லா டெஸ்டுக்கும் கீழேயே நீங்க நோட்ஸ் கொடுத்தீங்கன்னா.......
பதிலளிநீக்குபடிச்சிட்டு டெஸ்ட் எழுத ஈசியா இருக்குங்க சார்
Tks நண்பா
பதிலளிநீக்குminnal vega kanitham