1. சுரதாவின் இயற்பெயர் - இராசகாபாலன்.
2. பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டு தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டவர்-சுரதா.
3. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் – சுரதா.
4. சுரதா இயற்றிய நூல்கள்- அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம்.
5. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை - கிளிக்கண்ணி.
6. காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் - கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை , பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.
7. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி - என்ற பாடல் ஆசிரியர் – பாரதியார்.
8. வாழை, கன்றை - ஈன்றது .
9. காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம் .
10. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - கிழங்கெடுக்கும் .
11. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதை ஆசிரியர் - ராஜமார்த்தாண்டன்.
12. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்- ராஜமார்த்தாண்டன்.
13. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்- ராஜமார்த்தாண்டன்.
14. கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூலை தொகுத்தவர் - ராஜமார்த்தாண்டன்.
15. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது – கோலிக்குண்டு.
16. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை - மண் ஒட்டிய பழங்கள்.
17. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெயர் + அறியா.
18. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - மனம் + இல்லை.
19. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – நேற்றிரவு.
20. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் – முண்டந்துறை.
21. முண்டந்துறை காப்பகம் பரப்பளவு - 895 சதுர கிலோ மீட்டர்.
22. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு - தந்தம் உண்டு.
23. ஆசிய யானைகளில் பெண் யானைக்கு - தந்தம் இல்லை.
24. ஆண் , பெண் இரண்டும் தந்தம் உள்ள யானை - ஆப்பிரிக்க யானை.
25. யானை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது - பெண் யானை.
26. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்.
27. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு- யானை.
28. ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் விலங்கு – புலி.
29. கிர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்.
30. இந்தியாவில் காணப்படும் மான் வகை - சருகுமான், மிளாமான், வெளிமான்.
31. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந் துறை .
32. ‘காட்டா று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - காடு + ஆறு .
33. அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - அனைத்து + உண்ணி.
34. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - நேரமாகி .
35. வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - வேட்டையாடிய .
36. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு- புலி.
37. யானைக் கூட்டத்திற்கு ஒரு - பெண் யானைதான் தலைமை தாங்கும்.
38. கரடிகளைத் தேனீக்க ளிடமிருந்து காப்பது அதன் – முடி.
39. இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர்- ஜாதவ்பயேங்.
40. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு 'இந்திய வனமகன் (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு- 2012.
41. ஜாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஆண்டு- 2015.
42. ஜாதவுக்கு 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் - கெளகாத்தி பல்கலைக்கழகம்.
43. நால்வகைக் குறுக்கங்கள் - ஐகாரக்குறுக்கம் , ஔகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்:
44. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்- திருவள்ளுவர்.
45. திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார்.
46. தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் – திருக்குறள்.
47. அறத்துப்பால், பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புக் கொண்டது- திருக்குறள்.
48. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - அறம்-38 , பொருள்-70, இன்பம்-25 - மொத்தம் 133 .
49. அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
50. திருக்குறள் வேறு பெயர்கள் - முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி.
51. வாய்மை எனப்படுவது-தீங்குகராக சொற்களைப் பேசுதல்.
52. பொறாமை உள்ளவன் செல்வம் - சான்றோர்களால் ஆராயப்படும்.
53. பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பொருள் + செல்வம்.
54. யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாது+எனின்.
55. தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தன்னெஞ்சு.
56. தீது+உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தீதுண்டோ.
minnal vega kanitham