1. “கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி'' என்ற பாடலின் ஆசிரியர் - முடியரசன்
2. "ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புதியதொரு விதி செய்வோம்
3. முடியரசனின் இயற்பெயர் - துரைராசு
4. முடியரசன் எழுதிய நூல்கள் : பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை.
5. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்-முடியரசன்.
6. கவியரசு என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.
7. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல் ஆசிரியர் – பாரதியார்.
8. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்- வீரம்
9. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கல் + எடுத்து
10. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நான்கு + நிலம்
11. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- நாடென்ற
12. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- கலமேறி
13. “புதியதொருவிதி செய்வோம்'' என்ற நூலை இயற்றியவர் - முடியரசன்
14. கடலும் கடல் சார்ந்த இடம் - நெய்தல்
15. நெய்தல் நிலத்தல் வாழும் மக்கள் - பரதர், பரத்தியர் , எயினர் , எயிற்றியர்
16. நெய்தல் நில மக்களின் தொழில் என்ன- மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
17. நெய்தல் நிலத்தின் பூ - தாழம் பூ
18. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழக்கப்பட்டு வருவதால் நாட்டுப்புற பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது- வாய்மொழி இலக்கியம்
19. நாட்டுப்புறப்பாடலில் அடங்குபவை - ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு,விளையாட்டுப்பாடல், தொழில் பாடல், தாலாட்டுப் பாடல்
20. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைத் தொகுத்தவர் - சு.சக்திவேல்
21. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கதிர் + சுடர்
22. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- மூச்சு + அடக்கி
23. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- பெருவானம்
24. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- அடிக்கும் அலை
25. "பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா'' என்ற பாடலின் ஆசிரியர் - சு. சக்திவேல்
26. பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது- பண்டமாற்று வணிகம்
27. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றனர்- உப்பு
28. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து எதைப் பெற்றனர்- தானியம்
29. வணிகம் எத்தனை வகைப்படும் - இரண்டு
30. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு குழுவாக வெளியூருக்குச் செல்வர் இக்குழுவிற்கு பெயர்- வணிகச்சாத்து
31. துறைமுக நகரங்கள் - பட்டினம் ,பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன
32. பண்டைய தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகம் - பூம்புகார்
33. தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் - தனிநபர் வணிகம்
34. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது - நிறுவன வணிகம்
35. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி உமணர் போகலும்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை
36. “பாலொடு வந்து கூழொடு பெயரும்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - குறுந்தொகை
37. “பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு
38. சிறு வணிகர்கள் - நுகர்வோர் உடன் நேரடித்தொடர்பு கொள்வார்கள்
39. தமிழ்நாட்டில் இருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை - தேக்கு, மயில்தோகை,அரிசி, சந்தனம்,இஞ்சி, மிளகு
40. சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் - கண்ணாடி ,கற்பூரம் , பட்டு
41. அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை
42. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” என்று வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் - திருக்குறள்
43. வணிகரை 'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என்று கூறும் நூல் - பட்டினப்பாலை
44. 'கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது' என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – பட்டினப்பாலை
45. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்
46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்- நுகர்வோர்
47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- வணிகசாத்து
48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதம் கிடைக்கும் சொல்- பண்டமாற்று
49. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- வண்ணம் + படங்கள்
50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- விரிவு + அடைந்த
51. கரன்சி நோட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பணத்தாள்
52. பேங்க் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வங்கி
53. செக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - காசோலை
54. டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வரைவோலை
55. டெபிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பற்று அட்டை
56. கிரெடிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - கடன் அட்டை
57. ஈகாமாஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - மின்னணு வணிகம்
58. சங்ககால வணிகம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருந்தது- தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்
59. துறைமுக நகரங்கள் பட்டினம் என்று அழைக்கப்பட்டது
60. பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்' என்பது யாருடைய கூற்று- ஒளவையார்
61. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள்- சுட்டு எழுத்து
62. சுட்டு எழுத்துகள் - அ, இ,உ
63. தற்போது எந்த சுட்டெழுத்தை பயன்படுத்துவது இல்லை - உ
64. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது- புறச்சுட்டு
65. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது - அகச்சுட்டு
66. அண்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - இ
67. சேய்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - அ
68. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ள சுட்டெழுத்து - உ
69. அ. இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து பொருள் தருவது- சுட்டுத்திரிபு
70. வினா எழுத்துகள் - எ, யா, ஆ,ஓ ,ஏ
71. மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் - எ, யா
72. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து - ஆ, ஓ
73. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து - ஏ
74. வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது - அகவினா
75. அகவினா எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டு - எது, யார், ஏன்
76. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அது - புற வினா
77. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பட்டினம் , பாக்கம்.
78. பொருள்களை விற்பவர் – வணிகர்.
79. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்ற வரி வணிகரின் எத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன- நேர்மை.
80. நானிலம் படைத்தவன் பாடல் எந்நூலில் இடம்பெற்றது - புதியதொரு விதி செய்வோம்.
81. நெய்தல் திணைக்குரிய நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்.
82. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் – மறம்.
83. பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று பாடியவர் – ஒளவையார்.
84. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப்பிற நாடுகளுக்கு அனுப்புவது – ஏற்றுமதி.
85. பாரம்பரியம் என்ற சொல்லின் கலைச்சொல் தருக – Heritage.
86. நானிலம் படைத்தவன் பாடலில் அதன் ஆசிரியர் கூறும் நான்கு நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்.
87. எந்த நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன – அரேபியா.
88. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் – பாரதியார்.
89. நானிலம் என்ற சொல்லை பிரித்து எழுதுக - நான்கு + நிலம்.
90. பொருள்களை வாங்குபவர் – நுகர்வோர்.
91. அவ்வானம் என்ற சொல்லின் சுட்டு எழுத்தை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தருவது- புறச்சுட்டு.
92. பொருத்துக
1. விடிவெள்ளி - விளக்கு
2. மணல் - பஞ்சு மெத்தை
3. புயல்- ஊஞ்சல்
4. பனிமூட்டம் - போர்வை
93. பொருத்துக
1. கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
2. மின்னல்வரி - மின்னல் கோடுகள்
3. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
94. பொருத்துக
1. மல்லெடுத்த- வலிமை பெற்ற
2. கழனி - வயல்
3. சமர் - போர்
4. நல்கும் - தரும்
95. பொருத்துக.
1. மறம் - வீரம்
2. எக்களிப்பு- பெருமகிழ்ச்சி
3. கலம்- கப்பல்
4. ஆழி- கடல்
96. பொருத்துக.
1. பண்டம்- Commodity
2. பயணப்படகுகள் - Ferries
3. பாரம்பரியம்- Heritage
4. நுகர்வோர்- Consumer
97. பொருத்துக.
1. கடற்பயணம் - Voyage
2. தொழில் முனைவோர் - Entrepreneur
3. கலப்படம் - Adulteration
4. வணிகர்- Merchant
98. பொருத்துக:
1. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - பட்டினப்பாலை
2. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து - நற்றிணை
3. பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறுந்தொகை
4. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
99. பொருத்துக:
1. அகச்சுட்டு - இம்மலை
2. புறச்சுட்டு - இது
3. அகவினா - எது
4. புறவினா - அவனா
100. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க.
1. டிஜிட்டல் - மின்னணுமயம்
2. டெபிட் கார்டு - பற்று அட்டை
3. இ-காமர்ஸ் - மின்னணுவணிகம்
4. டிமான்ட் ட்ராப்ட் - வரைவோலை
Super sir
பதிலளிநீக்குminnal vega kanitham