6th New & old தமிழ் |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். • இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. • இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. • இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார். நூல்குறிப்பு • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். • திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை • கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. • எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்) நூல் வெளி 6th Tamil Book • திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. • “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. |
7th தமிழ் திருக்குறள் |
---|
நூல் வெளி
• தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. • இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. • இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன. • திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. • நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். • வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. • இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் குறிப்பு: • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். • இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை. • இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு. • இவரின் காலம் கி.மு.31 என்பர். நூல் குறிப்பு : • குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள். • இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது. • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இதில், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துக் குறட்பாக்களென ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது. • இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது. • இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள். நூல் பயன்: திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும். |
minnal vega kanitham