குறுந்தொகை (11th, 12th Old 9th, 11th New Tamil Book) |
---|
• குறுமை + தொகை = குறுந்தொகை.
• குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. • இந்நூல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • இதில், கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன. • அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள். • இப்பாடல்கள் குறைந்த அளவாக நான்கடிகளையும் அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன. • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். • இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை. • இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம். • கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது. • "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. • 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். |
குறுந்தொகை (11th, 12th Old 9th, 11th New Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு:
1. பாலை பாடிய பெருங்கடுங்கோ • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்; • கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார். 2. வெள்ளிவீதியார் • வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர். • சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. 3. கபிலர் • கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரிலே அந்தணர் மரபில் பிறந்தவர். • கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர். • கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பாரியை உயிர்த் தோழனாகக் கொண்டவர். • பாரியின் அவைக்களப் புலவராகவும் விளங்கியவர். • குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். • 'கபிலரது பாட்டு' என்னும் தொடரே இவர் பாட்டுத் திறனுக்குச் சான்றாகும். • கபிலரை "வாய்மொழிக் கபிலன்" என்று நக்கீரரும், "நல்லிசைக் கபிலன்" என்று பெருங்குன்றூர்க் கிழாரும் 'வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று பொருந்தில் இளங்கீரனாரும், "புலனழுக்கற்ற அந்தணாளன்" "பொய்யா நாவிற் கபிலன்" என மாறோக்கத்து நப்பசலையாரும் புகழ்ந்துள்ளனர். |
கலித்தொகை (8th New & 10th old Tamil Book) |
---|
நூல் வெளி
• கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்; • நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. • கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே. ஆசிரியர் குறிப்பு : • நல்லந்துவனார் சங்க காலத்தவர். • இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. • இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார். • கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர். நூற்குறிப்பு : • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள். • எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது; • இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது. • கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன. • கலித்தொகை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது. • கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது. • நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி, நெய்தற்கலியாகும். • இதனை இயற்றியவர் நல்லந்துவனார். • இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும். • எனவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி ' எனச் சிறப்பித்துக் கூறுவர். |
நற்றிணை (11th New & 10th, 12th Old Book) |
---|
• நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
• நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்; • 'நல்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே. இஃது அகத்திணை நூலாகும். • அவை அகப்பொருள்பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. • 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. • இது, நானூறு பாடல்களைக் கொண்டது. • 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. • பாடினோர் இருநூற்றெழுபத்தைவர். • நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. • இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். • போதனார்: சங்ககாலப் புலவர் நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். • நற்றிணையின் பேரெல்லை 12 அடி.விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது. • நற்றிணை பல்வேறு காலங்களில், புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல். • ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது இதில், ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன. ஆசிரியர் குறிப்பு : • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார். • இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். • இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன. • இவர் சங்ககாலத்தவர். நக்கண்ணையார். • இவர் பெண்பாற்புலவர் ஆவார். • 'பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை' யெனவும் கூறப்படுவார். • உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான். • அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். • அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். • அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83, 84, 85 ஆம் பாடல்கள் மூலம் அறிகிறோம். |
minnal vega kanitham