Type Here to Get Search Results !

ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்

0
நீலகேசி (8th New Tamil Book நோயும் மருந்தும்)
நூல் வெளி:
• நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
•இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
•கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
•சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
•நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நீலகேசி (11th New Tamil Book)
நூல் வெளி:
• நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
• விருத்தப்பாவால் ஆனது.
• இதற்கு நீலகேசித் தெருட்டு என்றும் பெயர்.
• இது குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.
• நீலகேசி என்னும் சமண சமயப் பெண், சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து, சமண நெறியை நிலைநாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.
• தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இது என்பர்.
• இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட, பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.
• இதை எழுதியவர் யார் என அறியப்படவில்லை.
• இதன் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்.
• இந்நூலில் உள்ள மொக்கலவாதச் சருக்கத்திலிருந்து மூன்று பாடல்களும் புத்தவாதச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்களும் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.

யசோதர காவியம் 9th New Tamil Book
நூல் வெளி
• ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
• இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
• இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
• இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
• யசோதர காவியம்,'யசோதரன்' என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
• இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
• பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள்
ஐம்பெருங்காப்பியங்கள்
• சிலப்பதிகாரம்
• மணிமேகலை
• சீவகசிந்தாமணி
• வளையாபதி
• குண்டலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
• சூளாமணி
• நீலகேசி
• உதயண குமார காவியம்
• யசோதர காவியம்
• நாககுமார காவியம்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்