Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

2014 Group 4 Tamil Questions

 

1. கண்ணகி எனும் சொல்லின் பொருள்

(அ) கடும் சொற்களைப் பேசுபவள்

(ஆ) கண் தானம் செய்தவள்

(இ) கண்களால் நகுபவள்✔

(ஈ) கண் தானம் பெற்றவள்


2. பகுதி I உடன் பகுதி IIஐப் பொருத்துக:

(அ) குறிஞ்சி – 1. நெல்லரிதல்

(ஆ) முல்லை – 2. கிழங்கழ்தல்

(இ) மருதம் – 3. உப்பு விற்றல்

(ஈ) நெய்தல் – 4. வரகு விதைத்தல்

(அ) 2 4 1 3 ✔

(ஆ) 1 3 2 4

(இ) 3 2 4 1

(ஈ) 4 3 2 1


3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?

(அ) பண்புத்தொகை ✔

(ஆ) வினைத்தொகை

(இ) வேற்றுமைத்தொகை

(ஈ) உம்மைத்தொகை


4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

(அ) பள்ளு

(ஆ) தூது ✔

(இ) கலம்பகம்

(ஈ) அந்தாதி


5. பொருத்துக:

(அ) வினைத்தொகை – 1. நாலிரண்டு

(ஆ) உவமைத்தொகை – 2. செய்தொழில்

(இ) உம்மைத்தொகை – 3. பவளவாய் பேசினாள்

(ஈ) அன்மொழித்தொகை – 4. மதிமுகம்

(அ) 2 4 3 1

(ஆ) 4 2 3 1

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 1 3✔


6. “அவன் உழவன்” – என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க:

(அ) தெரிநிலை வினைமுற்று

(ஆ) குறிப்பு வினைமுற்று ✔

(இ) பெயர்ச்சொல்

(ஈ) தொழிற்பெயர்


7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக:

(அ) வயலில் மாடுகள் மேந்தது

(ஆ) வயலில் மாடுகள் மேஞ்சது

(இ) வயலில் மாடுகள் மேய்ந்தன✔

(ஈ) வயலில் மாடுகள் மேய்ந்தது


8. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:நடிகன்

(அ) பொருட்பெயர் ✔

(ஆ) பண்புப்பெயர்

(இ) தொழிற்பெயர்

(ஈ) காலப்பெயர்


9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினான் – எவ்வகைத் தொடர்?

(அ) நேர்க்கூற்று

(ஆ) அயற்கூற்று ✔

(இ) எதிர்மறைக்கூற்று

(ஈ) கலவைத்தொடர்


10. பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்:

(அ) பெறா அ

(ஆ) தழீஇ

(இ) அண்ணன்✔

(ஈ) கொடுப்பதூஉம்


11. யாப்பு என்றால் ——- என்பது பொருள்

(அ) அடித்தல்

(ஆ) சிதைத்தல்

(இ) கட்டுதல்✔

(ஈ) துவைத்தல்


12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக்கொண்ட பெண்ணரசி யார்?

(அ) மங்கையர்க்கரசி

(ஆ) ஜான்ஸிராணி

(இ) இராணி மங்கம்மாள்✔

(ஈ) தடாதகைப் பிராட்டியர்


13. “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர்

(அ) நைட்டிங்கேல்

(ஆ) அன்னி சல்லிவான்

(இ) கெலன் கெல்லர்✔

(ஈ) பாலி தாம்சன்


14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?

(அ) 9

(ஆ) 7✔

(இ) 10

(ஈ) 133


15. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?

(அ) குறிஞ்சிப்பாட்டு✔

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) கலிப்பாடல்

(ஈ) பரிபாடல்


16. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுவது எது?

(அ) ஆப்பிரிக்கா

(ஆ) இலெமூரியா✔

(இ) சிந்து சமவெளி

(ஈ) ஹரப்பா


17. குமரகுருபரர் எழுதாத நூல்

(அ) கந்தர் கலிவெண்பா

(ஆ) மதுரைக்கலம்பகம்

(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்✔

(ஈ) நீதிநெறிவிளக்கம்


18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

(அ) தஞ்சாவூர்

(ஆ) நாகப்பட்டினம்

(இ) இராமநாதபுரம்✔

(ஈ) புதுக்கோட்டை


19. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று புகழப்படுபவர்

(அ) வாணிதாசன்✔

(ஆ) வண்ணதாசன்

(இ) பாரதிதாசன்

(ஈ) சுப்புரத்தின் தாசன்


20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ——- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

(அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்✔

(ஆ) ஈத்தேன்

(இ) கதிரியக்கம்

(ஈ) மீத்தேன்


21. “திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

(அ) பெரியார்

(ஆ) குமரிலபட்டர்✔

(இ) கால்டுவெல்

(ஈ) ஜி.யூ.போப்


22. “சீர்திருத்தக் காப்பியம்” என்று பாராட்டப்படுவது

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை✔

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி


23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

(அ) நற்றிணை, கலித்தொகை

(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி✔

(இ) குறுந்தொகை, ஐங்குநுறூறு

(ஈ) பரிபாடல், மலைபடுகடாம்


24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்

(அ) பெருங்கதை

(ஆ) குண்டலகேசி

(இ) நாககுமார காவியம்

(ஈ) மணிமேகலை✔


25.பொருத்துக:

(அ) நான்மணிமாலை – 1. கவிதை

(ஆ) மலரும் மாலையும் – 2. சிற்றிலக்கியம்

(இ) நான்மணிக்கடிகை – 3. காப்பியம்

(ஈ) தேம்பாவணி – 4. நீதிநூல்

(அ) 2 1 4 3✔

(ஆ) 3 2 1 4

(இ) 2 3 1 4

(ஈ) 3 4 2 1


26. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – யார் கூற்று?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்✔

(இ) கண்ணதாசன்

(ஈ) எதுவுமில்லை


27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?

(அ) நல்ல பாம்பு

(ஆ) இராஜ நாகம்✔

(இ) பச்சைப்பாம்பு

(ஈ) எதுவுமில்லை


28. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

(அ) சுதமதி

(ஆ) மணிமேகலை

(இ) ஆதிரை

(ஈ) காயசண்டிகை✔


29. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம்?

(அ) மதுரை✔

(ஆ) ஊட்டி

(இ) கொடைக்கானல்

(ஈ) ஏற்காடு


30. “சதகம்” என்பது ——— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

(அ) ஐம்பது

(ஆ) நூறு✔

(இ) ஆயிரம்

(ஈ) பத்தாயிரம்


31. “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்—” – இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்

(அ) சொல்லின் நாயகன்

(ஆ) சொல்லின் தலைவன்

(இ) சொல்லின் புலவன்

(ஈ) சொல்லின் செல்வன்✔


32. “சிங்கங்களே! எழுந்து வாருங்கள், நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்” எனக் கூறியவர் – இவ்வடியைப் பாடியவர்.

(அ) பாரதிதாசன்

(ஆ) விவேகானந்தர்✔

(இ) சுபாஷ் சந்திரபோஸ்

(ஈ) திலகர்


33. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” – இவ்வடியைப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்✔

(இ) கவிமணி

(ஈ) சுரதா


34. பொருத்தமான விடையை எழுதுக: “துன்பதையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”

(அ) அந்தகக் கவி

(ஆ) இராமச்சந்திர கவிராயர்✔

(இ) திருவள்ளுவர்

(ஈ) உடுமலை நாராயணக்கவி


35. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – என்று கூறியவர்

(அ) ஒக்கூர் மாசாத்தியார்

(ஆ) பொன்முடியார்✔

(இ) காவற்பெண்டு

(ஈ) ஒளவையார்


36. அழுது அடியடைந்த அன்பர் ——

(அ) மாணிக்கவாசகர்✔

(ஆ) வாகீசர்

(இ) சரபேசர்

(ஈ) மதுரேசர்


37. மறைமறை அடிகள் தாம் நடத்தி வந்த “ஞானசாகரம்” இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?

(அ) ஞானக்கடல்

(ஆ) அறிவுக்கடல்✔

(இ) அறிவு சாகரம்

(ஈ) நாணக்கடல்


38. “ஜல்லிக்கட்டு” என்னும் எருதாட்டத்தை வைத்து “வாடிவாசல்” எனும் நாவலை எழுதியவர் ———

(அ) சி.சு.செல்லப்பா✔

(ஆ) பி.எஸ்.ராமையா

(இ) திரு.வி.க

(ஈ) வ.வே.சு.ஐயர்


39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

(அ) செய்யுள்

(ஆ) உரைநடை✔

(இ) இலக்கணம்

(ஈ) நாடகம்


40. “தமிழ் உரைநடையின் தந்தை” என மெச்சத் தகுந்தவர்

(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்✔

(ஆ) சி.வை.தாமோதரம் பிள்ளை

(இ) விபுலானந்த அடிகள்

(ஈ) கனகசபைப் புலவர்


41. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

(அ) சேர, சோழ, பாண்டியர்✔

(ஆ) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்

(இ) முகமதியார், ஆங்கிலேயர், மராட்டியர்

(ஈ) குப்தர், மௌரியர், டச்சுக்காரர்


42. பொருத்துக:

(அ) சிக்கனம் – 1. கவிஞர் தாரா பாரதி

(ஆ) மனிதநேயம் – 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்

(இ) காடு – 3. சுரதா

(ஈ) வேலைகளல்ல வேள்விகளே – 4. வாணிதாசன்

(அ) 4 3 2 1

(ஆ) 2 4 3 1

(இ) 3 2 4 1✔

(ஈ) 1 2 3 4


43. “மணிமேகலை வெண்பா”வின் ஆசிரியர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்✔

(இ) திரு.வி.க

(ஈ) கவிமணி


44. 1942-இல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான “பர்மா வழி நடைப்பயணம்” நூலின் ஆசிரியர்

(அ) வைத்தியநாத சர்மா

(ஆ) வெ.சாமிநாத சர்மா✔

(இ) தேவன்

(ஈ) அநுத்தமா


45. “ஆனந்தத்தேன்” நூலின் ஆசிரியர்

(அ) வைரமுத்து

(ஆ) தமிழன்பன்

(இ) புதுமைப்பித்தன்

(ஈ) க.சச்சிதானந்தன்✔


46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:

(அ) விடுதலைக்கவி – 1.அப்துல் ரகுமான்

(ஆ) திவ்வியகவி – 2. வாணிதாசன்

(இ) கவிஞரேறு – 3. பாரதியார்

(ஈ) கவிக்கோ – 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

(அ) 2 4 1 3

(ஆ) 1 3 4 2

(இ) 3 4 2 1✔

(ஈ) 4 3 2 1


47. பொருத்துக:

(அ) பூங்கொடி – 1. கண்ணதாசன்

(ஆ) கொடிமுல்லை – 2. சுரதா

(இ) ஆட்டனத்தி ஆதிமந்தி – 3. முடியரசன்

(ஈ) பட்டத்தரசி – 4. வாணிதாசன்

(அ) 2 1 4 3

(ஆ) 1 2 3 4

(இ) 3 4 1 2✔

(ஈ) 4 3 2 1


48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ———-

(அ) திருமங்கையாழ்வார்

(ஆ) திருமழிசையாழ்வார்

(இ) குலசேகராழ்வார்✔

(ஈ) நம்மாழ்வார்


49. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்✔

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) பெரியபுரணம்


50. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்✔

(இ) சிவப்பிரகாசம்

(ஈ) மணிவாசகர்


51. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்?

(அ) நிலம்

(ஆ) மலை✔

(இ) காடு

(ஈ) நாடு


52. “நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே”-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க:

(அ) இரட்டுற மொழிதல்

(ஆ) வட்டப்பலகை

(இ) கட்டுச்சோறு

(ஈ) காட்டுக்கோழி✔


53. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–

(அ) மகள்

(ஆ) மகன்

(இ) பெண்✔

(ஈ) ஆண்


54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

(அ) 40

(ஆ) 35✔

(இ) 25

(ஈ) 45


55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

(அ) தொகா, தொகை நிலைத் தொடர் 7

(ஆ) தொகை, தொகா நிலைத்தொடர் 9

(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9 ✔

(ஈ) தொகை நிலைத்தொடர் 9; தொகா நிலைத்தொடர் 6


56. ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்

(அ) அளபெடை

(ஆ) எழுத்துப்பேறு

(இ) இதழ்குவி எழுத்து

(ஈ) சந்தியக்கரம்✔


57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக:

(அ) மாடு

(ஆ) மூக்கு

(இ) கதவு✔

(ஈ) மார்பு


58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் “ஒரு பொருட் பன்மொழிச்” சொல்லைத் தேர்க:

(அ) மீமிசை ஞாயிறு✔

(ஆ) உயர்ந்த கட்டடம்

(இ) மேல்பகுதி

(ஈ) மையப்பகுதி


59. “பெறு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

(அ) பெற்றான்

(ஆ) பெறுவான்

(இ) பெறுகிறான்

(ஈ) பெறுபவன்✔


60. பொருத்துக:

(அ) இலக்கணமுடையது – 1. புறநகர்

(ஆ) மங்கலம் – 2. கால்கழுவி வந்தான்

(இ) இலக்கணப்போலி – 3. இறைவனடி சேர்ந்தார்

(ஈ) இடக்கரக்கல் – 4. நிலம்

(அ) 2 3 1 4

(ஆ) 4 3 1 2✔

(இ) 1 2 3 4

(ஈ) 3 4 1 2


61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது-எவ்வகைப் பொருள்கோள்?

(அ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

(ஆ) அளைமறியாப்புப் பொருள்கோள்

(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்✔


62. பொருள் தேர்க: அங்காப்பு-என்பது

(அ) வாயைப் பிளத்தல்

(ஆ) அங்கம் காப்பு

(இ) அகம் காத்தல்

(ஈ) வாயைத் திறத்தல்✔


63. வினைமுற்றைத் தேர்க:

(அ) படி

(ஆ) படித்த

(இ) படித்து

(ஈ) படித்தான்✔


64. தவறான ஒன்றைத் தேர்க:

(அ) கிறு

(ஆ) கின்று

(இ) ஆ நின்று

(ஈ) இன்✔


65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்✔

(ஈ) வாணிதாசன்


66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது

(அ) உத்திரமேரூர்க் கல்வெட்டு

(ஆ) ஆதிச்சநல்லூர் கல்வெட்டு

(இ) அரியாங்குப்பம் கல்வெட்டு

(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு✔


67. காந்தியடிகளை “அரை நிர்வாணப் பக்கிரி” என ஏளனம் செய்தவர்

(அ) சர்ச்சில்✔

(ஆ) முசோலினி

(இ) ஹிட்லர்

(ஈ) ஸ்மட்ஸ்


68. “ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” – இதனைப் பாடிய கவிஞர் யார்?

(அ) ந.பிச்சமூர்த்தி

(ஆ) வல்லிக்கண்ணன்✔

(இ) புதுமைப்பித்தன்

(ஈ) சி.சு.செல்லப்பா


69. “கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்” யாவர்?

(அ) இரட்டையர்✔

(ஆ) சமணர்

(இ) பரணர்

(ஈ) பௌத்தர்


70. “இந்திய அரசியலில் சாணக்கியர்” ———

(அ) ஜவஹர்லால் நேரு

(ஆ) வல்லபாய் படேல்

(இ) இராஜகோபாலச்சாரியார்✔

(ஈ) இராதா கிருட்டிணன்


71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

(அ) இரட்சணிய யாத்திரிகம்✔

(ஆ) இரட்சணிய மனோகரம்

(இ) இரட்சணிய குறள்

(ஈ) இரட்சணிய சரிதம்


72. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்

(அ) கல்யாண சுந்தரம்

(ஆ) பாரதிதாசன்✔

(இ) முடியரசன்

(ஈ) தமிழ்ஒளி


73. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.

(அ) பரிதிமாற் கலைஞர்✔

(ஆ) நாமக்கல் கவிஞர்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்


74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

(அ) சைவரால் இயற்றப்பட்டன

(ஆ) வைணவரால் இயற்றப்பட்டன

(இ) சமணரால் இயற்றப்பட்டன✔

(ஈ) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன


75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

(அ) வேதநாயகம் பிள்ளை

(ஆ) வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

(இ) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

(ஈ) ஆறுமுக நாவலர்✔


76. இதழ், நா, பல், அண்ணம் – இவை

(அ) ஒலி பிறப்புகள்

(ஆ) ஒலிப்பு முறைகள்

(இ) ஒலிப்பான்கள்

(ஈ)ஒலிப்பு முனைகள்✔


77. “ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்” எனப் போற்றப்படுபவர்

(அ) ஆண்டாள்

(ஆ) பேயாழ்வார்

(இ) பெரியாழ்வார்

(ஈ) இராமானுஜர்✔


78. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ——- நூலின் புகழ்மிக்க தொடர்

(அ) திருமந்திரம்✔

(ஆ) திருவாசகம்

(இ) திருக்குறள்

(ஈ) தேம்பாவணி


79. மருத நிலத்திற்குரிய தெய்வம்

(அ) இந்திரன்✔

(ஆ) முருகன்

(இ) திருமால்

(ஈ) வருணன்


80. “தாண்டக வேந்தர்” என அழைக்கப்படுபவர் யார்?

(அ) சுந்தரர்

(ஆ) திருநாவுக்கரசர்✔

(இ) மாணிக்க வாசகர்

(ஈ) திருஞான சம்பந்தர்


81. “தேசியம் காத்த செம்மல்” – எனத் திரு.வி.க.வால் புகழப்பட்டவர்

(அ) பசும்பொன் முத்துராமலிங்கர்✔

(ஆ) காந்தியடிகள்

(இ) திருப்பூர் குமரன்

(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்


82. “சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர்

(அ) உமறுப் புலவர்

(ஆ) குணங்குடி மஸ்தான்

(இ) பனு அகமது மரைக்காயர்✔

(ஈ) அப்துல் ரகுமான்


83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

(அ) இராமலிங்கம் பிள்ளை

(ஆ) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

(இ) பாரதியார்

(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்✔


84. “ஆ” முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?

(அ) குறிஞ்சி✔

(ஆ) முல்லை

(இ) நெய்தல்

(ஈ) மருதம்


85. “கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்

புட்கிரை யாக ஒல்செய்வேன்”– இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன.

(அ) தாவீது✔

(ஆ) கோலியாத்து

(இ) சவுல் மன்னன்

(ஈ) சூசை


86. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும்.

(அ) முருங்கைப்பட்டை✔

(ஆ) வேப்பம் பட்டை

(இ) புளியம்பட்டை

(ஈ) நாவற்பட்டை


87. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என எடுத்துரைத்தவர்

(அ) சுபாஷ் சந்திரபோஸ்

(ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்✔

(இ) வீரபாண்டிய கட்டபொம்மன்

(ஈ) வேலுத்தம்பி


88. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) First Deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

(ஆ) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்

(இ) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

(ஈ) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி

(அ) 2 4 3 1

(ஆ) 3 4 2 1✔

(இ) 1 3 4 2

(ஈ) 4 3 2 1


89. பொருத்துக: சொல் பொருள்

(அ) விசும்பு – 1.தந்தம்

(ஆ) மருப்பு – 2.வானம்

(இ) கனல் – 3.யானை

(ஈ) களிறு – 4.நெருப்பு

(அ) 2 1 4 3✔

(ஆ) 3 2 1 4

(இ) 1 3 4 2

(ஈ) 4 3 2 1


90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை

(அ) வீரமாமுனிவர்

(ஆ) தைரியநாத சாமி

(இ) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி

(ஈ) ஜி.யூ.போப்✔


91. “கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்

சீரிய இயல்புகளை அறியலாம்” – இப்படிக் கூறியவர்

(அ) சி.வை.தாமோதரம் பிள்ளை

(ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை✔

(இ) ஆளுடைய பிள்ளை

(ஈ) “கம்பன் அடிப்பொடி” சா.கணேசனார்


92. பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்

(அ) மனோகரா

(ஆ) சபாபதி

(இ) பவளக்கொடி✔

(ஈ) பொன்விலங்கு


93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

(அ) கால்டுவெல்

(ஆ) ஜி.யூ.போப்✔

(இ) ஜோசப் பெஸ்கி

(ஈ) தெ.நொபிலி


94. பொருத்துக: நூல் ஆசிரியர்

(அ) ஆசாரக்கோவை – 1. கூடலூர்க்கிழார்

(ஆ) கார் நாற்பது – 2. விளம்பிநாகனார்

(இ) முதுமொழிகாஞ்சி – 3. கண்ணங்கூத்தனார்

(ஈ) நான்மணிக்கடிகை – 4. பெருவாயின் முள்ளியார்

(அ) 3 1 2 4

(ஆ) 4 3 1 2✔

(இ) 3 2 4 1

(ஈ) 1 3 2 4


95. பொருத்துக:

(அ) திருநாவுக்கரசர் – 1.எட்டாம் திருமுறை

(ஆ) சம்பந்தர் – 2. ஏழாம் திருமுறை

(இ) சுந்தரர் – 3. முதல் மூன்று திருமுறை

(ஈ) மாணிக்கவாசகர் – 4. 4,5,6-ஆம் திருமுறைகள்

(அ) 4 3 2 1✔

(ஆ) 1 2 3 4

(இ) 3 4 2 1

(ஈ) 2 1 4 3


96. பொருந்தாத இணையைக் கண்டறி:

(அ) சிறுபஞ்சமூலம்-காரியாசன்

(ஆ) ஞானரதம்-கல்கி✔

(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா

(ஈ) குயில்பாட்டு-பாரதியார்


97. “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்ற நூலைத் தொகுத்தவர்

(அ) வீரமாமுனிவர்

(ஆ) எல்லீஸ்

(இ) ஜி.யூ.போப்✔

(ஈ) கால்டுவெல்


98. தமிழ்ப் பேரகராதி – “லெக்சிகன்”(Lexicon) உருவாக்கியவர்

(அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை✔

(ஆ) வ.உ.சி

(இ) அ.சிதம்பரநாத செட்டியார்

(ஈ) வேங்கட ராஜீலு ரெட்டியார்


99. தமிழிசைக்கருவி “யாழ்” பற்றி பலகாலம் ஆராய்ந்து “யாழ் நூல்” இயற்றியவர்

(அ) சண்முகானந்தர்

(ஆ) விபுலானந்தர்✔

(இ) தேஜானந்தர்

(ஈ) கஜானந்தர்


100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்

(அ) சேமசுந்தர பாரதியார்

(ஆ) சுத்தானந்த பாரதியார்✔

(இ) மகாகவி பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்