1. கண்ணகி எனும் சொல்லின் பொருள்
(அ) கடும் சொற்களைப் பேசுபவள்
(ஆ) கண் தானம் செய்தவள்
(இ) கண்களால் நகுபவள்✔
(ஈ) கண் தானம் பெற்றவள்
2. பகுதி I உடன் பகுதி IIஐப் பொருத்துக:
(அ) குறிஞ்சி – 1. நெல்லரிதல்
(ஆ) முல்லை – 2. கிழங்கழ்தல்
(இ) மருதம் – 3. உப்பு விற்றல்
(ஈ) நெய்தல் – 4. வரகு விதைத்தல்
(அ) 2 4 1 3 ✔
(ஆ) 1 3 2 4
(இ) 3 2 4 1
(ஈ) 4 3 2 1
3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
(அ) பண்புத்தொகை ✔
(ஆ) வினைத்தொகை
(இ) வேற்றுமைத்தொகை
(ஈ) உம்மைத்தொகை
4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
(அ) பள்ளு
(ஆ) தூது ✔
(இ) கலம்பகம்
(ஈ) அந்தாதி
5. பொருத்துக:
(அ) வினைத்தொகை – 1. நாலிரண்டு
(ஆ) உவமைத்தொகை – 2. செய்தொழில்
(இ) உம்மைத்தொகை – 3. பவளவாய் பேசினாள்
(ஈ) அன்மொழித்தொகை – 4. மதிமுகம்
(அ) 2 4 3 1
(ஆ) 4 2 3 1
(இ) 3 1 4 2
(ஈ) 2 4 1 3✔
6. “அவன் உழவன்” – என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க:
(அ) தெரிநிலை வினைமுற்று
(ஆ) குறிப்பு வினைமுற்று ✔
(இ) பெயர்ச்சொல்
(ஈ) தொழிற்பெயர்
7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக:
(அ) வயலில் மாடுகள் மேந்தது
(ஆ) வயலில் மாடுகள் மேஞ்சது
(இ) வயலில் மாடுகள் மேய்ந்தன✔
(ஈ) வயலில் மாடுகள் மேய்ந்தது
8. பெயர்ச்சொல்லின் வகையறிதல்:நடிகன்
(அ) பொருட்பெயர் ✔
(ஆ) பண்புப்பெயர்
(இ) தொழிற்பெயர்
(ஈ) காலப்பெயர்
9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினான் – எவ்வகைத் தொடர்?
(அ) நேர்க்கூற்று
(ஆ) அயற்கூற்று ✔
(இ) எதிர்மறைக்கூற்று
(ஈ) கலவைத்தொடர்
10. பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்:
(அ) பெறா அ
(ஆ) தழீஇ
(இ) அண்ணன்✔
(ஈ) கொடுப்பதூஉம்
11. யாப்பு என்றால் ——- என்பது பொருள்
(அ) அடித்தல்
(ஆ) சிதைத்தல்
(இ) கட்டுதல்✔
(ஈ) துவைத்தல்
12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக்கொண்ட பெண்ணரசி யார்?
(அ) மங்கையர்க்கரசி
(ஆ) ஜான்ஸிராணி
(இ) இராணி மங்கம்மாள்✔
(ஈ) தடாதகைப் பிராட்டியர்
13. “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர்
(அ) நைட்டிங்கேல்
(ஆ) அன்னி சல்லிவான்
(இ) கெலன் கெல்லர்✔
(ஈ) பாலி தாம்சன்
14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
(அ) 9
(ஆ) 7✔
(இ) 10
(ஈ) 133
15. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
(அ) குறிஞ்சிப்பாட்டு✔
(ஆ) முல்லைப்பாட்டு
(இ) கலிப்பாடல்
(ஈ) பரிபாடல்
16. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என அழைக்கப்படுவது எது?
(அ) ஆப்பிரிக்கா
(ஆ) இலெமூரியா✔
(இ) சிந்து சமவெளி
(ஈ) ஹரப்பா
17. குமரகுருபரர் எழுதாத நூல்
(அ) கந்தர் கலிவெண்பா
(ஆ) மதுரைக்கலம்பகம்
(இ) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்✔
(ஈ) நீதிநெறிவிளக்கம்
18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
(அ) தஞ்சாவூர்
(ஆ) நாகப்பட்டினம்
(இ) இராமநாதபுரம்✔
(ஈ) புதுக்கோட்டை
19. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்” என்று புகழப்படுபவர்
(அ) வாணிதாசன்✔
(ஆ) வண்ணதாசன்
(இ) பாரதிதாசன்
(ஈ) சுப்புரத்தின் தாசன்
20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ——- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(அ) குளோரோ ஃபுளுரோ கார்பன்✔
(ஆ) ஈத்தேன்
(இ) கதிரியக்கம்
(ஈ) மீத்தேன்
21. “திராவிடம்” என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
(அ) பெரியார்
(ஆ) குமரிலபட்டர்✔
(இ) கால்டுவெல்
(ஈ) ஜி.யூ.போப்
22. “சீர்திருத்தக் காப்பியம்” என்று பாராட்டப்படுவது
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) மணிமேகலை✔
(இ) வளையாபதி
(ஈ) குண்டலகேசி
23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
(அ) நற்றிணை, கலித்தொகை
(ஆ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி✔
(இ) குறுந்தொகை, ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல், மலைபடுகடாம்
24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
(அ) பெருங்கதை
(ஆ) குண்டலகேசி
(இ) நாககுமார காவியம்
(ஈ) மணிமேகலை✔
25.பொருத்துக:
(அ) நான்மணிமாலை – 1. கவிதை
(ஆ) மலரும் மாலையும் – 2. சிற்றிலக்கியம்
(இ) நான்மணிக்கடிகை – 3. காப்பியம்
(ஈ) தேம்பாவணி – 4. நீதிநூல்
(அ) 2 1 4 3✔
(ஆ) 3 2 1 4
(இ) 2 3 1 4
(ஈ) 3 4 2 1
26. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” – யார் கூற்று?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்✔
(இ) கண்ணதாசன்
(ஈ) எதுவுமில்லை
27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
(அ) நல்ல பாம்பு
(ஆ) இராஜ நாகம்✔
(இ) பச்சைப்பாம்பு
(ஈ) எதுவுமில்லை
28. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
(அ) சுதமதி
(ஆ) மணிமேகலை
(இ) ஆதிரை
(ஈ) காயசண்டிகை✔
29. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம்?
(அ) மதுரை✔
(ஆ) ஊட்டி
(இ) கொடைக்கானல்
(ஈ) ஏற்காடு
30. “சதகம்” என்பது ——— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
(அ) ஐம்பது
(ஆ) நூறு✔
(இ) ஆயிரம்
(ஈ) பத்தாயிரம்
31. “கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்—” – இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
(அ) சொல்லின் நாயகன்
(ஆ) சொல்லின் தலைவன்
(இ) சொல்லின் புலவன்
(ஈ) சொல்லின் செல்வன்✔
32. “சிங்கங்களே! எழுந்து வாருங்கள், நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்” எனக் கூறியவர் – இவ்வடியைப் பாடியவர்.
(அ) பாரதிதாசன்
(ஆ) விவேகானந்தர்✔
(இ) சுபாஷ் சந்திரபோஸ்
(ஈ) திலகர்
33. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” – இவ்வடியைப் பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்✔
(இ) கவிமணி
(ஈ) சுரதா
34. பொருத்தமான விடையை எழுதுக: “துன்பதையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்”
(அ) அந்தகக் கவி
(ஆ) இராமச்சந்திர கவிராயர்✔
(இ) திருவள்ளுவர்
(ஈ) உடுமலை நாராயணக்கவி
35. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – என்று கூறியவர்
(அ) ஒக்கூர் மாசாத்தியார்
(ஆ) பொன்முடியார்✔
(இ) காவற்பெண்டு
(ஈ) ஒளவையார்
36. அழுது அடியடைந்த அன்பர் ——
(அ) மாணிக்கவாசகர்✔
(ஆ) வாகீசர்
(இ) சரபேசர்
(ஈ) மதுரேசர்
37. மறைமறை அடிகள் தாம் நடத்தி வந்த “ஞானசாகரம்” இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
(அ) ஞானக்கடல்
(ஆ) அறிவுக்கடல்✔
(இ) அறிவு சாகரம்
(ஈ) நாணக்கடல்
38. “ஜல்லிக்கட்டு” என்னும் எருதாட்டத்தை வைத்து “வாடிவாசல்” எனும் நாவலை எழுதியவர் ———
(அ) சி.சு.செல்லப்பா✔
(ஆ) பி.எஸ்.ராமையா
(இ) திரு.வி.க
(ஈ) வ.வே.சு.ஐயர்
39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
(அ) செய்யுள்
(ஆ) உரைநடை✔
(இ) இலக்கணம்
(ஈ) நாடகம்
40. “தமிழ் உரைநடையின் தந்தை” என மெச்சத் தகுந்தவர்
(அ) யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்✔
(ஆ) சி.வை.தாமோதரம் பிள்ளை
(இ) விபுலானந்த அடிகள்
(ஈ) கனகசபைப் புலவர்
41. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
(அ) சேர, சோழ, பாண்டியர்✔
(ஆ) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
(இ) முகமதியார், ஆங்கிலேயர், மராட்டியர்
(ஈ) குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
42. பொருத்துக:
(அ) சிக்கனம் – 1. கவிஞர் தாரா பாரதி
(ஆ) மனிதநேயம் – 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(இ) காடு – 3. சுரதா
(ஈ) வேலைகளல்ல வேள்விகளே – 4. வாணிதாசன்
(அ) 4 3 2 1
(ஆ) 2 4 3 1
(இ) 3 2 4 1✔
(ஈ) 1 2 3 4
43. “மணிமேகலை வெண்பா”வின் ஆசிரியர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்✔
(இ) திரு.வி.க
(ஈ) கவிமணி
44. 1942-இல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான “பர்மா வழி நடைப்பயணம்” நூலின் ஆசிரியர்
(அ) வைத்தியநாத சர்மா
(ஆ) வெ.சாமிநாத சர்மா✔
(இ) தேவன்
(ஈ) அநுத்தமா
45. “ஆனந்தத்தேன்” நூலின் ஆசிரியர்
(அ) வைரமுத்து
(ஆ) தமிழன்பன்
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) க.சச்சிதானந்தன்✔
46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(அ) விடுதலைக்கவி – 1.அப்துல் ரகுமான்
(ஆ) திவ்வியகவி – 2. வாணிதாசன்
(இ) கவிஞரேறு – 3. பாரதியார்
(ஈ) கவிக்கோ – 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 4 2
(இ) 3 4 2 1✔
(ஈ) 4 3 2 1
47. பொருத்துக:
(அ) பூங்கொடி – 1. கண்ணதாசன்
(ஆ) கொடிமுல்லை – 2. சுரதா
(இ) ஆட்டனத்தி ஆதிமந்தி – 3. முடியரசன்
(ஈ) பட்டத்தரசி – 4. வாணிதாசன்
(அ) 2 1 4 3
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 1 2✔
(ஈ) 4 3 2 1
48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ———-
(அ) திருமங்கையாழ்வார்
(ஆ) திருமழிசையாழ்வார்
(இ) குலசேகராழ்வார்✔
(ஈ) நம்மாழ்வார்
49. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்✔
(இ) சீவகசிந்தாமணி
(ஈ) பெரியபுரணம்
50. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்✔
(இ) சிவப்பிரகாசம்
(ஈ) மணிவாசகர்
51. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்?
(அ) நிலம்
(ஆ) மலை✔
(இ) காடு
(ஈ) நாடு
52. “நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே”-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க:
(அ) இரட்டுற மொழிதல்
(ஆ) வட்டப்பலகை
(இ) கட்டுச்சோறு
(ஈ) காட்டுக்கோழி✔
53. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–
(அ) மகள்
(ஆ) மகன்
(இ) பெண்✔
(ஈ) ஆண்
54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
(அ) 40
(ஆ) 35✔
(இ) 25
(ஈ) 45
55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(அ) தொகா, தொகை நிலைத் தொடர் 7
(ஆ) தொகை, தொகா நிலைத்தொடர் 9
(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9 ✔
(ஈ) தொகை நிலைத்தொடர் 9; தொகா நிலைத்தொடர் 6
56. ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
(அ) அளபெடை
(ஆ) எழுத்துப்பேறு
(இ) இதழ்குவி எழுத்து
(ஈ) சந்தியக்கரம்✔
57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக:
(அ) மாடு
(ஆ) மூக்கு
(இ) கதவு✔
(ஈ) மார்பு
58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் “ஒரு பொருட் பன்மொழிச்” சொல்லைத் தேர்க:
(அ) மீமிசை ஞாயிறு✔
(ஆ) உயர்ந்த கட்டடம்
(இ) மேல்பகுதி
(ஈ) மையப்பகுதி
59. “பெறு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
(அ) பெற்றான்
(ஆ) பெறுவான்
(இ) பெறுகிறான்
(ஈ) பெறுபவன்✔
60. பொருத்துக:
(அ) இலக்கணமுடையது – 1. புறநகர்
(ஆ) மங்கலம் – 2. கால்கழுவி வந்தான்
(இ) இலக்கணப்போலி – 3. இறைவனடி சேர்ந்தார்
(ஈ) இடக்கரக்கல் – 4. நிலம்
(அ) 2 3 1 4
(ஆ) 4 3 1 2✔
(இ) 1 2 3 4
(ஈ) 3 4 1 2
61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது-எவ்வகைப் பொருள்கோள்?
(அ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
(ஆ) அளைமறியாப்புப் பொருள்கோள்
(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்✔
62. பொருள் தேர்க: அங்காப்பு-என்பது
(அ) வாயைப் பிளத்தல்
(ஆ) அங்கம் காப்பு
(இ) அகம் காத்தல்
(ஈ) வாயைத் திறத்தல்✔
63. வினைமுற்றைத் தேர்க:
(அ) படி
(ஆ) படித்த
(இ) படித்து
(ஈ) படித்தான்✔
64. தவறான ஒன்றைத் தேர்க:
(அ) கிறு
(ஆ) கின்று
(இ) ஆ நின்று
(ஈ) இன்✔
65. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) சுரதா
(இ) பாரதிதாசன்✔
(ஈ) வாணிதாசன்
66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
(அ) உத்திரமேரூர்க் கல்வெட்டு
(ஆ) ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
(இ) அரியாங்குப்பம் கல்வெட்டு
(ஈ) திருநாதர் குன்றம் கல்வெட்டு✔
67. காந்தியடிகளை “அரை நிர்வாணப் பக்கிரி” என ஏளனம் செய்தவர்
(அ) சர்ச்சில்✔
(ஆ) முசோலினி
(இ) ஹிட்லர்
(ஈ) ஸ்மட்ஸ்
68. “ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன” – இதனைப் பாடிய கவிஞர் யார்?
(அ) ந.பிச்சமூர்த்தி
(ஆ) வல்லிக்கண்ணன்✔
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) சி.சு.செல்லப்பா
69. “கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்” யாவர்?
(அ) இரட்டையர்✔
(ஆ) சமணர்
(இ) பரணர்
(ஈ) பௌத்தர்
70. “இந்திய அரசியலில் சாணக்கியர்” ———
(அ) ஜவஹர்லால் நேரு
(ஆ) வல்லபாய் படேல்
(இ) இராஜகோபாலச்சாரியார்✔
(ஈ) இராதா கிருட்டிணன்
71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
(அ) இரட்சணிய யாத்திரிகம்✔
(ஆ) இரட்சணிய மனோகரம்
(இ) இரட்சணிய குறள்
(ஈ) இரட்சணிய சரிதம்
72. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
(அ) கல்யாண சுந்தரம்
(ஆ) பாரதிதாசன்✔
(இ) முடியரசன்
(ஈ) தமிழ்ஒளி
73. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்.
(அ) பரிதிமாற் கலைஞர்✔
(ஆ) நாமக்கல் கவிஞர்
(இ) பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
(அ) சைவரால் இயற்றப்பட்டன
(ஆ) வைணவரால் இயற்றப்பட்டன
(இ) சமணரால் இயற்றப்பட்டன✔
(ஈ) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்
(அ) வேதநாயகம் பிள்ளை
(ஆ) வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(இ) பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
(ஈ) ஆறுமுக நாவலர்✔
76. இதழ், நா, பல், அண்ணம் – இவை
(அ) ஒலி பிறப்புகள்
(ஆ) ஒலிப்பு முறைகள்
(இ) ஒலிப்பான்கள்
(ஈ)ஒலிப்பு முனைகள்✔
77. “ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்” எனப் போற்றப்படுபவர்
(அ) ஆண்டாள்
(ஆ) பேயாழ்வார்
(இ) பெரியாழ்வார்
(ஈ) இராமானுஜர்✔
78. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ——- நூலின் புகழ்மிக்க தொடர்
(அ) திருமந்திரம்✔
(ஆ) திருவாசகம்
(இ) திருக்குறள்
(ஈ) தேம்பாவணி
79. மருத நிலத்திற்குரிய தெய்வம்
(அ) இந்திரன்✔
(ஆ) முருகன்
(இ) திருமால்
(ஈ) வருணன்
80. “தாண்டக வேந்தர்” என அழைக்கப்படுபவர் யார்?
(அ) சுந்தரர்
(ஆ) திருநாவுக்கரசர்✔
(இ) மாணிக்க வாசகர்
(ஈ) திருஞான சம்பந்தர்
81. “தேசியம் காத்த செம்மல்” – எனத் திரு.வி.க.வால் புகழப்பட்டவர்
(அ) பசும்பொன் முத்துராமலிங்கர்✔
(ஆ) காந்தியடிகள்
(இ) திருப்பூர் குமரன்
(ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
82. “சின்னச் சீறா” என்ற நூலை எழுதியவர்
(அ) உமறுப் புலவர்
(ஆ) குணங்குடி மஸ்தான்
(இ) பனு அகமது மரைக்காயர்✔
(ஈ) அப்துல் ரகுமான்
83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
(அ) இராமலிங்கம் பிள்ளை
(ஆ) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
(இ) பாரதியார்
(ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்✔
84. “ஆ” முதன் முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
(அ) குறிஞ்சி✔
(ஆ) முல்லை
(இ) நெய்தல்
(ஈ) மருதம்
85. “கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்”– இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன.
(அ) தாவீது✔
(ஆ) கோலியாத்து
(இ) சவுல் மன்னன்
(ஈ) சூசை
86. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும்.
(அ) முருங்கைப்பட்டை✔
(ஆ) வேப்பம் பட்டை
(இ) புளியம்பட்டை
(ஈ) நாவற்பட்டை
87. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என எடுத்துரைத்தவர்
(அ) சுபாஷ் சந்திரபோஸ்
(ஆ) பசும்பொன் முத்துராமலிங்கர்✔
(இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
(ஈ) வேலுத்தம்பி
88. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) First Deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(ஆ) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்
(இ) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(ஈ) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி
(அ) 2 4 3 1
(ஆ) 3 4 2 1✔
(இ) 1 3 4 2
(ஈ) 4 3 2 1
89. பொருத்துக: சொல் பொருள்
(அ) விசும்பு – 1.தந்தம்
(ஆ) மருப்பு – 2.வானம்
(இ) கனல் – 3.யானை
(ஈ) களிறு – 4.நெருப்பு
(அ) 2 1 4 3✔
(ஆ) 3 2 1 4
(இ) 1 3 4 2
(ஈ) 4 3 2 1
90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
(அ) வீரமாமுனிவர்
(ஆ) தைரியநாத சாமி
(இ) கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
(ஈ) ஜி.யூ.போப்✔
91. “கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்” – இப்படிக் கூறியவர்
(அ) சி.வை.தாமோதரம் பிள்ளை
(ஆ) எஸ்.வையாபுரி பிள்ளை✔
(இ) ஆளுடைய பிள்ளை
(ஈ) “கம்பன் அடிப்பொடி” சா.கணேசனார்
92. பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்
(அ) மனோகரா
(ஆ) சபாபதி
(இ) பவளக்கொடி✔
(ஈ) பொன்விலங்கு
93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
(அ) கால்டுவெல்
(ஆ) ஜி.யூ.போப்✔
(இ) ஜோசப் பெஸ்கி
(ஈ) தெ.நொபிலி
94. பொருத்துக: நூல் ஆசிரியர்
(அ) ஆசாரக்கோவை – 1. கூடலூர்க்கிழார்
(ஆ) கார் நாற்பது – 2. விளம்பிநாகனார்
(இ) முதுமொழிகாஞ்சி – 3. கண்ணங்கூத்தனார்
(ஈ) நான்மணிக்கடிகை – 4. பெருவாயின் முள்ளியார்
(அ) 3 1 2 4
(ஆ) 4 3 1 2✔
(இ) 3 2 4 1
(ஈ) 1 3 2 4
95. பொருத்துக:
(அ) திருநாவுக்கரசர் – 1.எட்டாம் திருமுறை
(ஆ) சம்பந்தர் – 2. ஏழாம் திருமுறை
(இ) சுந்தரர் – 3. முதல் மூன்று திருமுறை
(ஈ) மாணிக்கவாசகர் – 4. 4,5,6-ஆம் திருமுறைகள்
(அ) 4 3 2 1✔
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 2 1
(ஈ) 2 1 4 3
96. பொருந்தாத இணையைக் கண்டறி:
(அ) சிறுபஞ்சமூலம்-காரியாசன்
(ஆ) ஞானரதம்-கல்கி✔
(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா
(ஈ) குயில்பாட்டு-பாரதியார்
97. “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்ற நூலைத் தொகுத்தவர்
(அ) வீரமாமுனிவர்
(ஆ) எல்லீஸ்
(இ) ஜி.யூ.போப்✔
(ஈ) கால்டுவெல்
98. தமிழ்ப் பேரகராதி – “லெக்சிகன்”(Lexicon) உருவாக்கியவர்
(அ) எஸ்.வையாபுரிப்பிள்ளை✔
(ஆ) வ.உ.சி
(இ) அ.சிதம்பரநாத செட்டியார்
(ஈ) வேங்கட ராஜீலு ரெட்டியார்
99. தமிழிசைக்கருவி “யாழ்” பற்றி பலகாலம் ஆராய்ந்து “யாழ் நூல்” இயற்றியவர்
(அ) சண்முகானந்தர்
(ஆ) விபுலானந்தர்✔
(இ) தேஜானந்தர்
(ஈ) கஜானந்தர்
100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
(அ) சேமசுந்தர பாரதியார்
(ஆ) சுத்தானந்த பாரதியார்✔
(இ) மகாகவி பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
minnal vega kanitham