திருக்குறள் (6th New Tamil Book) |
---|
நூல் வெளி
• திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். • எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். • வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு • திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால். இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. • "திருக்குறளில் இல்லாததும் இல்லை. சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. • திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. • நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
திருக்குறள் (6th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. • இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. • இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார். நூல்குறிப்பு • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். • திருக்குறள் ‘உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது. • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.) |
minnal vega kanitham