| நீரின்றி அமையாது உலகு (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 2) |
|---|
|
தெரிந்து தெளிவோம்
• அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி - எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன. தெரிந்து தெளிவோம் தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும் 1. அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் 2. அரண் அருவி - மலைமுகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது 3. ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு 4. ஆறு - இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு 5. இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் 6. உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு 7. ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை 8. ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது 9. ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். 10. கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு 11. கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு 12. கண்மாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் 13. குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம் 14. குமிழி ஊற்று - அடி நிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று 15. கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை 16. கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு 17. புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை 18. பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு |
| ஏறு தழுவுதல் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3) |
|---|
|
தெரிந்து தெளிவோம்
• எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. |
| மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3) |
|---|
|
தெரிந்து தெளிவோம்
• ஐம்பெருங்குழு 1. அமைச்சர் 2. சடங்கு செய்விப்போர் 3. படைத்தலைவர் 4. தூதர் 5. சாரணர் (ஒற்றர்) • எண்பேராயம் 1. கரணத்தியலவர் 2. கரும விதிகள் 3. கனகச்சுற்றம் 4. கடைக்காப்பாளர் 5. நகரமாந்தர் 6. படைத்தலைவர் 7. யானை வீரர் 8. இவுளி மறவர் |
| அகழாய்வுகள் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3) |
|---|
|
தெரிந்து தெளிவோம்
பட்டிமண்டபம் • பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். • பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம். • மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்று சிலப்பதிகாரத்திலும் (காதை 5, அடி 102) • பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று மணிமேகலையிலும் (காதை 1, அடி 16) • பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று திருவாசகத்திலும் (சதகம் 41) • பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணத்திலும் (பாலகாண்டம், நகரப் படலம் 154) பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது. |

minnal vega kanitham