புறநானூறு (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 6) |
---|
நூல் குறிப்பு
• புறநானூறு = புறம் + நான்கு + நூறு. • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. • இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். • சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது. ஆசிரியர் குறிப்பு • ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர். • அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். • சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். • அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார். • சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர் வேறு வேறானவர். |
திருக்குற்றாலக் குறவஞ்சி (6th தமிழ் பழைய புத்தகம் இயல் – 9) |
---|
நூல்குறிப்பு:
• இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. • ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல் ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன. |
குற்றாலக் குறவஞ்சிி (11th தமிழ் புதிய புத்தகம்) |
---|
நூல்வெளி
• தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பை புகழ்ந்து, அங்குள்ள குற்றால நாதரைப் போற்றப்பட்டது. • திரிகூட ராசப்பக் கவிராயரின் “கவிதைக்கீரிடம்” எனப் போற்றப்பட்டது. • மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருபத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. • திரிகூட ராசப்பக கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். • குறறாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். • "திருக்குற்றாலநாதர் காேவில் வித்துவான்" என்று சிறப்புப் பட்டப் பெயர் பெற்றவர். • குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார். |
மரமும் பழைய குடையும்(6th தமிழ் பழைய புத்தகம் இயல் – 9) |
---|
ஆசிரியர் குறிப்பு
• அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர். • இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். • இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு. நூல்குறிப்பு • தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது. • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். • இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். • இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல். • இருபொருள்படப் பாடுவது. (எ.கா.) ஆறு ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும். |
minnal vega kanitham