Type Here to Get Search Results !

ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு (10th தமிழ் பழைய புத்தகம் இயல் 4)

0
நற்றிணை (10th Old Tamil Book இயல் 4)
ஆசிரியர் குறிப்பு :
• மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
• இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
• இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன.
• இவர் சங்ககாலத்தவர்.
நூற்குறிப்பு :
• பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன.
• எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும், 'நல்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே.
• இஃது அகத்திணை நூலாகும்.
• நற்றிணை பல்வேறு காலங்களில், புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
• ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
• இதில், ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.
• இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
• இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி நற்றிணைப் பாடல்கள் நானூறு;
• பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.

புறநானூறு (10th Old Tamil Book இயல் 4)
ஆசிரியர்குறிப்பு:
• இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
• கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது, அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.
• அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.
நூற்குறிப்பு :
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
• இது, புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
• இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
• தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்