தந்தை பெரியார் [6th Old Tamil Book இளமையில் பெரியார் கேட்ட வினா] |
---|
1. ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் பெற்றோர் பெயர்? வெங்கட்டப்பர் - சின்னத்தாயம்மாள்
2. ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் ஊர்? ஈரோடு 3. தந்தை பெரியார் - அவர்களின் காலம்? 17.09.1879 முதல் 24.12.1973 வரை 4. "பகுத்தறிவாளர் சங்கத்தை" அமைத்தவர் யார்? பெரியார் 5. இளமையிலே பெரியார் ________ என்பவரின் தொண்டரானார்? காந்தி 6. "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்? பெரியார் 7. பகுத்தறிவு என்ற நாளேட்டை _____தொடங்கினார்? பெரியார் 8. ______ தம் கொள்கைகளுக்காக குடியரசு, விடுதலை என்ற இரு இதழ்களை நடத்தினார்? பெரியார் 9. தட்சிண காந்தி என்று அழைக்கப்பட்ட ராஜாஜியுடன் சிறந்த நட்புக் கொண்டிருந்தார் யார்? பெரியார் 10. ______ இல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயரைத் “திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றம் செய்தார்? 27.08.1944 11. நடுவண் அரசு _______- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது? 1978 12. ________ ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் "யுனெஸ்கோ விருது" பெரியாருக்கு வழங்கப்பட்டது? 1970 13. பெரியார், தம் வாழ்நாளில் ________ நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்? 8600 14. "அறிவு" என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்று கூறியவர்? பெரியார் 15. பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்பதனை ______- என்பவர் வலியுறுத்தினார்? பெரியார் 16. பெண்கள் மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்க்க வேண்டும் - என்று கூறியவர்? பெரியார் 17. குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியவர்? பெரியார் 18. “உங்களுடைய பணி பல சமுதாய அதிசயங்களைச் செய்துள்ளது. மக்களுக்குப் புதிய பாதை கிடைத்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த சீர்திருத்தவாதியும் உங்களைப் போன்று வெற்றியைப் பெற்றதில்லை” என்றார் _____? சி.என். அண்ணாதுரை 19. பெரியார் “தமிழ்நாட்டின் ரூசோ” என்று பாராட்டியவர் _______ ஆவார்? சா.ஏ.ராமசாமி முதலியார் 20. “தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தங்களைச் செய்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்தவர் பெரியார்” என்றார் _____? கு.காமராசர். 21. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார். கதர் அணியவேண்டும் என்று பரப்புரை செய்தார். பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி - மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார் - இந்த கூற்று யாருடையது? பெரியார் 22. "கீழ்ச்சாதி - மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும் " - என்று கூறியவர் யார்? பெரியார் 23. 'மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும். அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்." - என்று கூறியவர் யார்? - என்று கூறியவர் யார்? பெரியார் 24. பொறுமை, அமைதி, பேணுந்திறன் முதலியன பெண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் சினம், வீரம், ஆளுந்திறன் முதலியன ஆண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் கூறுவதனை ஏற்க இயலாது. இப்படிக் கூறுவது பெண்களை ஆட்டுக்கும் ஆண்களைப் புலிக்கும் ஒப்பாகக் கூறுவதுபோல் அல்லவா உள்ளது. பெண்களுக்கும் துணிவு, வீரம், ஆளுந்திறன் முதலியன உண்டு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே பெண் விடுதலை - என வீரமுழக்கமிட்டவர் யார்? பெரியார் |
பெரியார் [6th Old Tamil Book இளமையில் பெரியார் கேட்ட வினா]
செப்டம்பர் 16, 2023
1
Tags
Sir eodi download pantrathu
பதிலளிநீக்குminnal vega kanitham