1. ஊர்தோறும்
பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று கூறியவர் - காமராசர்
2. காமராசர்
நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தார்- 50000
3. காமராசர்
எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 1
4. காமராசர்
எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 3
5. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி
அமைய வேண்டும் என்று கூறினார்- 5
6. கல்விக்கண்
திறந்தவர் என்று காமராசை போற்றியவர் - பெரியார்
7. “பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர் -
காமராசர்
8. “கருப்புக்காந்தி" என்று அழைக்கப்படுபவர்
– காமராசர்
9.“படிக்காத மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
10. "ஏழைப்பங்காளர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
11.
"கர்மவீரர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
12.
"தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
13. காமராசர்
முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன- 6000
14. இலவசக்
கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்- காமராசர்
15. மதிய
உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
16. பள்ளியில்
ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
17. பள்ளிச்
சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்
18. எம்மாவட்டத்தில்
அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - மதுரை
19. நடுவண்
அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது - 1976
20. காமராசர்
வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது- சென்னை,
விருதுநகர்
21. சென்னை
உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது- காமராசர்
22. கன்னியாகுமரியில்
காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது - 2000
23. ஆண்டு
தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது- ஜீலை 15 காமராசர் பிறந்த நாள்
24. பள்ளிக்கூடம்
செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
26.
பசியின்றி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது-
பசி + இன்றி
27. படிப்பறிவு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- படிப்பு + அறிவு
28. காடு
+ ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டாறு
29.
குழந்தைகள்
பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் சீரூடைத்
திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
30. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர்? தந்தை பெரியார்
காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்? |
---|
1. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
2. நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது. 3. காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. 4. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது. 5. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது. 6. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. |
காமராசரின் கல்விப்பணிகள்? |
---|
• காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
• மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். • பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக சீருடைத் திட்டத்தினை கொண்டு வந்தார். • பள்ளிகளின் வசதியைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார். • மாணவர்கள் உயர்கல்விப் பெறப் பொறியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாக தொடங்கினார். • இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். இவையெல்லாம் காமராஜர் ஆற்றிய கல்விப் பணிகள் ஆகும். |
காமராசரின் மதிய உணவுத்திட்டம் |
---|
• 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில் ” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.
• பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை. ஏழைப்பயன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுபாடு பெரும்பாடாக உள்ளது. • ஒரு வேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு, மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர் காலத்தைப் பழகாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம். • அதற்கு, ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கு தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூடச் செலவாகும். • நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரிகூட போடலாம் என்று காமராசர் கூறினார். • அதன்படி மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. • 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். |
minnal vega kanitham