7th New Book விஜயநகர்,
பாமினி அரசுகள் (100 QUESTIONS)
1.
பாமினி அரசு பரவி இருந்த பகுதி :
1. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும்.
2. கர்நாடகா மாநிலம் சில பகுதி.
2.
18 முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது - 180
3.
பாமினி அரசு வீழ்ச்சியடைந்து எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது : 5 .
1. பீஜப்பூர், 2. அகமதுநகர், 3. கோல்கொண்டா, 4. பீடார், 5. பீரார்
4.
விஜயநகர அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் கோலோச்சியது-200 ஆண்டுகள்.
5. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு – 1565.
6. வெற்றி நகரம் என்று அறியப்படும் விஜயநகரம் எந்த
இரு சகோதரர்களால் நிறுவப்பட்டது - ஹரிஹரர்,
புக்கர்.
7. ஹரிஹரர், புக்கர் இருவரும் எந்த அரசிடம் பணிபுரிந்தனர்
- துக்ளக் அரசு.
8. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர் – வித்யாரண்யர்.
9. ஹரிஹரர், புக்கர் ஆன்மீக குரு - வித்யாரண்யர்.
10. வித்தியாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் குறிப்பிட்ட
காலம் வரை விஜயநகர் எவ்வாறு அழைக்கப்பட்டது- வித்யாநகர்.
11. வித்யாநகர் பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது - விஜயநகர்.
12. விஜயநகர அரசு எத்தனை அரசுகளால் ஆளப்பட்டது : 4.
1.
சங்கம வம்சம் - 1336 - 1485
2.
சாளுவ வம்சம் - 1485 - 1505
3. துளுவ வம்சம் - 1505 - 1570
4. ஆரவீடு வம்சம் - 1570 - 1646
13.
விஜய நகர அரசுகள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவை சேர்ந்த அரசுகளுக்கு இடையே மோதல்கள்
ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி- கிருஷ்ணா-துங்கத்ரா, கிருஷ்ணா-கோதாவரி.
14. ஹரிஹரர் , புக்கர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்கள்-
சங்கம வம்சம்.
15. விஜயநகர அரசு உருவாகிப் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகே
பாமினி அரசு நிறுவப்பட்டது – 10 ஆண்டுகள்.
16. முதலாம் புக்கர் மகன்- குமார கம்பணா.
17. மதுரை சுல்தானியத்திற்க முற்றுப்புள்ளி வைத்து
அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதில் வெற்றி பெற்றவர்- குமார கம்பணா.
18. குமார கம்பணாவின் மனைவி – கங்காதேவி.
19. மதுரா விஜயம். எனும் எழுதிய நூல் - கங்காதேவி.
20. சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் - இரண்டாம தேவராயர்.
21. இஸ்லாமிய வீரர்களை படையில் பணியாற்றும் முறையைத்
தொடங்கி வைத்தவர் - இரண்டாம் தேவராயர்.
22. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதி - சாளுவ
நரசிம்மர்.
23. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் - இரண்டாம் விருபாக்சி ராயர்.
24. இரண்டாம் விருபாக்சி ராயரை கொலை செய்துவிட்டு துளுவ
வம்ச ஆட்சியை தொடங்கிய படை தளபதி - நரசநாயக்கர்.
25. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்
– கிருஷ்ணதேவராயர்.
26. கிருஷ்ணதேவராயரின் இரண்டு முக்கியமான இலக்கு.
1. துங்கபத்ரா நதி பள்ளத்தாக்கு பகுதியில்
சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவது.
2. குல்பர்காவை கைப்பற்றுவது.
27. பாமினி சுல்தான் முகமது ஷா யை சிறையிலிருந்து விடுவித்து
மீண்டும் அரியணையில் அமர வைத்தவர் – கிருஷ்ணதேவராயர்.
28. ஓடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்ரனோடு
போர் மேற்கொண்டவர் - கிருஷ்ணதேவராயர்.
29. கிருஷ்ணதேவராயர் கோல்கொண்டா சுல்தானை யாருடைய பீரங்கி
படை வீரர்களின் உதவியோடு தோற்கடித்தார் – போர்ச்சுகீசியர்கள்.
30. மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக்
குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் உருவாக்கியவர் - கிருஷ்ணதேவராயர்.
31. கிருஷ்ணதேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் கட்டிய
கோவில்கள்: கிருஷ்ணசாமி கோயில், ஹசாரா ராமசாமி கோயில், விட்டலாசாமி கோயில்
32. போர்களின் மூலம் தான் பெற்ற செல்வங்களை மிகப்பெரும்
தென்னிந்திய கோயில்களுக்கு வழங்கியவர் - கிருஷ்ணதேவராயர்.
33. அரேபியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் பெரும்
எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தவர் – கிருஷ்ணதேவராயர்.
34. போர்த்துக்கீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த
நட்புறவை கொண்டிருந்தவர்- கிருஷ்ணதேவராயர்.
35. கிருஷ்ணதேவராயர் அவையை அலங்கரித்த 8 இலக்கிய மேதைகள்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்- அஷ்டதிக்கஜங்கள்.
36. 8 - இலக்கிய மேதைகளுள் மகத்தானவர் - அல்லசானி பெத்தண்ணா.
37. கிருஷ்ணதேவராய தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள்:
அச்சுதராயர், முதலாம் வேங்கடர், சதாசிவராவ்.
38. சதாசிவராவ்-ற்கு பகர ஆளுநராக பொறுப்பேற்றிருந்த
தளபதி – ராமராயர்.
39. சதாசிவராயரை பெயரளவிற்கு அரசராக வைத்துக்கொண்டு
உண்மையான அரசராக ஆட்சி புரிந்தவர் – ராமராயர்.
40. ராக்சச தங்கடி போர் - தலைக்கோட்டை போர் நடைபெற்ற
ஆண்டு- 1565.
41. கிழக்கு கர்நாடகத்தில் துங்கபத்ரா நதியின் கரையில்
உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது- ஹம்பி.
42. ஹம்பியை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது- யுனெஸ்கோ.
43. சந்திரகிரியில் ஆர வீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர்
- திருமலை தேவராயர்.
44. விஜயநகரப் பேரரசின் நிர்வாக முறை :
1. பேரரசு . 2. மண்டலங்கள் (மாநிலங்கள்) – மண்டலேஸ்வரா.
3.
நாடுகள். (மாவட்டங்கள்). 4. ஸ்தலங்கள்.
(வட்டங்கள்).
5. கிராமங்கள்.
45. ஆரவீடு வம்சத்தார் புதிய தலைநகர் – பெனுகொண்டா.
46. விஜயநகர அரசு வீழ்ச்சியுற்ற ஆண்டு - 1646.
47. கிராமம் தொடர்பான விடயங்களை நிர்வகித்தவர் – கௌளடா (கிராமத்தலைவர்).
48. விஜயநகரப் பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள்
– வராகன்.
49. போர்த்துகீசிய கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன்
மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள பாரசீக பயணி- அப்துர் ரஸாக்.
50. கில்டுகள் என்று அழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள்
- கைவினை குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
51. கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே
கில்டுகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் -
அப்துர் ரஸாக்.
52. விஜயநகர வணிகம்:
1.
சீனா - பட்டு.
2. மலபார் - வாசனைப்பொருட்கள்.
3. பர்மா - விலையயர்ந்த ஆபரண கற்கள்.
53. அமுக்த மால்யதா எனும் நூலை எழுதியவர்– கிருஷ்ணதேவராயர்-தெலுங்கு.
54. ஜாம்பவதி கல்யாணம் எனும் நூலை எழுதியவர்-கிருஷ்ணதேவராயர்- சமஸ்கிருதம்.
55. பாண்டுரங்கமாகத்தியம் நூலை எழுதியவர் - தெனாலி ராமகிருஷ்ணா.
56. சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை
தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்த புலவர்கள்:
1. ஸ்ரீநாதர் 2. பெத்தண்ணா
3.
ஜக்கம்மா 4. துக்கண்ணா
57. தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது-
அமுக்த மால்யதா.
58. பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியை பற்றியது- அமுக்த மால்யதா.
59. கடவுள் ரங்கநாதனுக்கு அணிவிப்பதற்காக தொடுக்கப்பட்ட
மாலைகளை கடவுள் சூடுவதற்கு முன்பாக சூடிக்கொள்பவர்- கோதை தேவி.
60. அமுக்த மால்யதா என்பதன் பொருள் - தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்.
61. விஜயநகர அரசர்களின் கோவில் கட்டுமான பாணி - விஜயநகர பாணி.
62. விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும்
விலங்கு - குதிரை.
63. 1347 - பாமினி அரசு யாரால் நிறுவப்பட்டது - அலாவுதீன் ஹசன், ஹசன் கங்கு.
64. தெளலதாபாத் நகரை கைப்பற்றி பாமன் ஷா என்ற பெயரில்
சுல்தானாக அறிவித்துக் கொண்டவர்- அலாவுதீன்
ஹசன்.
65. 2 ஆண்டுகளில் அலாவுதீன் ஹாசன் பாமன் ஷா தலைநகரை
மாற்றிய இடம்- குல்பர்கா. 1429 தலைநகரை மீண்டும்
- பீடாருக்கு மாற்றப்பட்டது.
66. பாமினி வம்சத்தில் இடம்பெற்றுள்ள அரசர்கள் எத்தனை
பேர் - 18.
67. அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்
- 11 ஆண்டுகள்.
68. அலாவுதீன் ஹசன் தமது அரசை நான்கு மாகாணங்களாகப்
பிரித்தார். அவை எவ்வாறு அழைக்கப்பட்டன – தராப்.
69. பாமன் ஷாவை தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் - முதலாம் முகமது ஷா.
70. 1368 வாரங்கல் அரசோடு போராட்டத்தின் மூலம் கோல்கொண்டா
கோட்டை, பச்சை கலந்த நீல வண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை
இழப்பீடாகப் பெற்றவர்- முதலாம் முகமது ஷா.
71. பாரசீக அரசர்களின் அணிகலன்களில் அலங்கரிக்கப்பட்ட
சிம்மாசனங்களில் இத்தகைய பச்சை கலந்த நீல வண்ண கல்லாலான அரியணையும் ஒன்றாகுமெனப் தன்னுடைய
நூலில் குறிப்பிட்டுள்ளவர் – பிர்தெளசி.
72. ஷா நாமா எனும் நூலை எழுதியவர் - பிர்தெளசி.
73. ஹைதராபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில்
ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் உள்ளது- கோல்கொண்டா கோட்டை.
74. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெற்றது-கோல்கொண்டா கோட்டை.
75. கோல்கொண்டா கோட்டையின் உயரமான இடம் - பால ஹிசார்.
76. பாமினி அரசிற்கு வலுவான ஒர் அடித்தளத்தை அமைத்துக்
கொடுத்தவர் - முதலாம் முகமது ஷா.
77. குல்பர்காவில் முதலாம் முகமது ஷா இரண்டு மகசூதிகளை
கட்டினார். அதில் 1367 கட்டிமுடிக்கப்பட்ட முதல் மசூதி – மகாமசூதி. 216 அடி x16 அடி
78. முகமது ஷா மகன்- முஜாகித்.
79. முகமது ஷாவைத் தொடர்ந்து பதவியேற்றவர் - முஜாகித்.
80. தாவூத் என்பவரின் சகோதரனின் மகன் என்ன பெயரில்
அரியணை ஏற்றப்பட்டார் - இரண்டாம் முகமது.
81. யாருடைய அரசில் அமைதி நிலவியது - இரண்டாம் முகமது.
82. தமது அரசவையை பண்பாட்டு, கல்வி மையமாக மாற்றுவதில்
தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிட்டவர் - இரண்டாம்
முகமது.
83. முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த
அமைச்சராக விளங்கினார் - மூன்றாம் முகமது.
84. இஸ்லாமிய கோட்பாடுகளிலும், பாரசீக மொழியிலும்,
கணிதத்திலும் பெரும் புலமை பெற்றவராய் இருந்தவர்- முகமது கவான் பிறப்பால் பாரசீகர்.
85. ராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாக சீர்திருத்தங்களும்
பெயர் பெற்றவர்- முகமது கவான்.
86. பாரசீக வேதியல் வல்லுநர்களை அழைத்து வெடிமருந்து
தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தவர் - முகமது கவான்.
87. பெல்காம் நடைபெற்ற விஜய நகருக்கு எதிரான போரில்
வெடிமருந்தை பயன்படுத்தியவர்- முகமது கவான்.
88. முகமது கவானத்துக்கு மரண தண்டனை வழங்கிய சுல்தான்
- மூன்றாம் முகமது.
89. மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடி
சூடிய சுல்தான்- முகமது (அ) சிகாபுதீன் முகமுது.
90. பாமினி அரசில் உள்ள 8 அமைச்சர்கள் :
1. வக்கீல் - உஸ்-சல் தானா (அ) அரசின்
பிரதம (அ) முதலமைச்சர் - அரசருக்கு அடுத்த
நிலையில் துணை அதிகாரியாக செயல்படுவர்.
2. பேஷ்வா - நாட்டின் பிரதம மந்திரியோடு
இணைந்து செயல்பட்டவர்.
3.
வஸிரி- குல் - ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.
4.
அமிர் - இ- ஜூம்லா – நிதியமைச்சர்.
5. நஷீர் - உதவி நிதி அமைச்சர்.
6. வஷிர் - இ - அசாரப் - வெளியுறவுத்துறை
அமைச்சர்.
7. கொத்தவால் - காவல்துறை தலைவர் மற்றும்
நகர குற்றவியல் நடுவர்.
8. சதார் - இ - ஜகான் - தலைமை நீதிபதி,
சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.
91. பாமினி சுல்தான்கள் கட்டிட கலை காணப்படும் இடம்-
குல்பர்கா.
92. அலாவுதீன் ஹசன் ஷா யாருடைய முயற்சியால் மூல்தானில்
கல்வி கற்றார் –ஜாபர்கான்.
93. கல்வி கற்பதை ஆதரித்த சுல்தான் - முதலாம் முகமது.
94. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதரஸாவை
(கல்வி நிலையம்) அமைத்தவர்- முகமது கவான்.
3000 - கையெழுத்துப் பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது.
95. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர்
- குமார கம்பணா.
96. பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராகவும்
விளங்கியவர் - சுல்தான் பெரோஸ்.
97. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்- பெனு கொண்டா.
98. ஓடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் – பிரதாபருத்ரன்.
99. விஜய நகர நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை கவனித்தவர்-
கெளடா.
100. பொருத்துக:
1. விஜய நகரம் - வெற்றியின் நகரம்.
2.
பிரதாப ருத்ரா - ஒடிசாவின் ஆட்சியாளர்.
3.
கிருஷ்ண தேவராயர் - அஷ்டதிக்கஜம்.
4.
அப்துர் ரசாக் - பாரசீக சிற்பக் கலைஞர்.
5. தெனாலி ராமகிருஷ்ணா- பாண்டுரங்கமகாமத்தியம்.
6.
மதுரா விஜயம் - கங்காதேவி.
minnal vega kanitham