Type Here to Get Search Results !

6th தமிழ் New Book || Just 24 Pages PDF

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

Last Minute Study -3

TNTET PAPAER -2

6th தமிழ் New Book || Just 24 Pages PDF

 

வினாக்கள்

பிரித்து எழுதுக

171

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

61

எதிர்ச்சொல் தருக

22

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

89

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்

17

Book Back  

188

நூல் வெளி

14


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------



PROOF

Book Back பாடம் 1.1 இன்பத்தமிழ்

1. ஏற்றத் தாழ்வற்ற _________ அமைய வேண்டும் சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______________ ஆக இருக்கும்? அசதி

3. “நிலவு + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________ நிலவென்று

4. “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ தமிழெங்கள்

5. “அமுதென்று” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அமுது + என்று

6. “செம்பயிர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________ செம்மை + பயிர்

7. பொருத்துக

1. விளைவுக்கு -     அ. பால்

2. அறிவுக்கு -        ஆ. வேல்

3. இளமைக்கு -      இ. நீர்

4. புலவர்க்கு -        ஈ. தோள் விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

 

பாடம் 1.2 தமிழ்க்கும்மி

1. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம் மேன்மை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____________ சுருங்கிவிட்டது மேதினி

3. “செந்தமிழ்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ செம்மை + தமிழ்

4. “பொய்யகற்றும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ பொய் + அகற்றும்

5. “பாட்டு+ இருக்கும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________  பாட்டிருக்கும்

6. “எட்டு + திசை” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________  எட்டுத்திசை

 

பாடம் 1.3 வளர்தமிழ்

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் __________  பழமை

2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______இடது + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________ சீர்மை + இளமை

4. ‘சிலம்பு + அதிகாரம்’ என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______  சிலப்பதிகாரம்

5. ‘கணினி + தமிழ்’ என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____ கணினித்தமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ____ பாரதியார்

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்_____ விலங்கு

 

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________? மொழி

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _______? தொல்காப்பியம்

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது _______ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்? எண்களின்

 

பாடம் 2.1 சிலப்பதிகாரம்

1. கழுத்தில் சூடுவது _______  தார்

2. கதிரவனின் மற்றொரு பெயர் ________ ஞாயிறு

3. “வெண்குடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ வெண்மை + குடை

4. “பொற்கோட்டு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________பொன் + கோட்டு

5. “கொங்கு + அலர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________ கொங்கலர்

6. “அவன் + அளிபோல்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________ அவனளிபோல்

 

பாடம் 2.2 காணிநிலம்

1. “கிணறு” என்பதைக் குறிக்கும் சொல் _____ கேணி

2. “சித்தம்” என்பதன் பொருள் ________ உள்ளம்

3. “மாடங்கள்” என்பதன் பொருள் மாளிகையின் _______ அடுக்குகள்

4. “நன்மாடங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______நன்மை + மாடங்கள்

5. “நிலத்தினிடையே” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்  நிலத்தின் + இடையே

6. “முத்து + சுடர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______ முத்துச்சுடர்

7. “நிலா + ஒளி” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ நிலாவொளி

8. பொருத்துக.

1. முத்துச்சுடர்போல -                         . தென்றல்

2. தூய நிறத்தில் -                               . நிலாஒளி

3. சித்தம் மகிழ்ந்திட -                          இ. மாடங்கள்        விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

 

பாடம் 2.3 சிறகின் ஓசை

1. “தட்பவெப்பம்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____ தட்பம் + வெப்பம்

2. “வேதியுரங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _____ வேதி + உரங்கள்

3. “தரை + இறங்கும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____ தரையிறங்கும்

4. “வழி + தடம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______. வழித்தடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______ துருவப்பகுதி

 

கோடிட்ட இடங்களை நிரப்புக

6. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை _______? ஆர்டிக் ஆலா

7. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் _______? சத்திமுத்தப் புலவர்

8. பறவைகள் இடம்பெயர்வதற்கு ___________ என்று பெயர்? வலசைபோதல்

9. இந்தியாவின் பறவை மனிதர் _______? டாக்டர் சலீம் அலி

10. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _______? தட்ப வெப்பநிலை மாற்றம்

 

 

பாடம் 2.6 திருக்குறள்

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது — அறிவுடைய மக்கட்பேறு

2. ஒருவர்க்குச் சிறந்த அணி ——— இன்சொல்

 

பாடம் 3.1 அறிவியல் ஆத்திசூடி

1. உடல் நோய்க்கு ____________ தேவை. உணவு

2. நண்பர்களுடன் _____________ விளையாடு ஒருமித்து

3. “கண்டறி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____  கண்டு + அறி

4. “ஓய்வற” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ ஓய்வு + அற

5. “ஏன் + என்று” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________ ஏனென்று

6. “ஔடதம் + ஆம்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________ ஔடதமாம்

7. எதிர்ச்சொற்களைப் பொருத்துக

1. அணுகு-   தெளிவு

2. ஐயம் -     சோர்வு

3. ஊக்கம் - பொய்மை

4. உண்மை  - விலக விடை: 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

 

பாடம் 3.2 அறிவியலால் ஆள்வோம்

1. அவன் எப்போதும் உண்மையையே ________  உழைக்கின்றான்

2. “ஆழக்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ ஆழம் + கடல்

3. “விண்வெளி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________ விண் + வெளி

4. “நீலம் + வான்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________ நீலவான்

5. “இல்லாது + இயங்கும்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________ இல்லாதியங்கும்

 

பாடம் 3.3 கணியனின் நண்பன்

1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ______ நுண்ணறிவு

2. தானே இயங்கும் இயந்திரம் ____________ தானியங்கி

3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____ நின்று + இருந்த

4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ அ + உருவம்

5. “மருத்துவம் + துறை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______ மருத்துவத்துறை

6. “செயல் + இழக்க” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________ செயலிழக்க

7. “நீக்குதல்” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _________ சேர்த்தல்

8. “எளிது” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ________  அரிது

 

கோடிட்ட இடங்களை நிரப்புக

9. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை _______? எந்திரங்கள்

10. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _______? செயற்கை நுண்ணறிவு.

11. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் _______? டீப் புளூ.

12. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ______? சவுதி அரேபியா

 

பாடம் 4.1  மூதுரை (ஒளவையார்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும். மாசுற

2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது இடம் + மெல்லாம்

3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மாசு + அற

4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் குற்றமில்லாதவர்

5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் சிறப்புடையார்

 

பாடம் 4. 2 துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது. தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும். மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____ கை + பொருள்

4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ மானமில்லா

 

பாடம் 4.3 கல்விக்கண் திறந்தவர் (காமராசர்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ____ ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ___ பசி + இன்றி

3. காடு+ஆறு என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______ காட்டாறு

4. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ படிப்பு + அறிவு

 

பாடம் 4.5 இன எழுத்துக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது? கல்வி

2. தவறான சொல்லை கண்டறிக? வென்ரான்

3. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

பிழையான சொல் 

திருத்தம்

தெண்றல்

தென்றல்

கன்டம்

கண்டம்

நன்ரி

நன்றி

மன்டபம்

மண்டபம்

 

பாடம் 5.1 ஆசாரக்கோவை

1. பிறரிடம் நான் _______ பேசுவேன் இன்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும். பொறை

3. அறிவு + உடைமை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? அறிவுடைமை

4. இவை + எட்டும் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___ இவையெட்டும்

5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ நன்று + அறிதல்

6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ___ பொறை + உடைமை

 

 

 

பாடம் 5.2 கண்மணியே கண்ணுறங்கு

1. ‘பாட்டிசைத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ பாட்டு + இசைத்து

2. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ கண் + உறங்கு

3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ வாழையிலை

4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_____ கையமர்த்தி

5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________மறைந்த

 

பாடம் 5.3 தமிழர் பெருவிழா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் ________ செய்வர். அறுவடை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர். தோரணம்

3. பொங்கல்+ அன்று என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____ பொங்கலன்று

4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ___ போகி + பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும். புதியன

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும். துன்பம்

 

பாடம் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கலைகளும் இலக்கியங்களும் ஒருநாட்டின் __________________ உலகிற்கு உணர்த்துவன. பண்பட்ட நாகரிகத்தை

2. பல்லவ அரசன் ___________________ மற்போரில் சிறந்நதவன். நரசிம்மன்

3. ஐந்து இரதங்கள் உள்ள இடம் _________ எனப்படும். பஞ்சபாண்டவர் இரதம்

4. பல்லவ அரசன் நரசிம்மன் ____________ சேர்ந்தவர். 7-ம் நூற்றாண்டைச்

5.  ________ உள்ள இடம் மாமல்லபுரம். நான்கு வகை சிற்பக்கலைகளும்

 

 

பாடம் 5.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்

2. நிலையான செல்வம் ______ ஊக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார். பயன்தராத

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____ பொருள்+உடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ உள்ளுவதெல்லாம்

6. பயன் + இலா என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ பயனிலா

 

பாடம் 6.1 நானிலம் படைத்தவன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ______ வீரம்

2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ கல் + எடுத்து

3. நானிலம் என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ நான்கு+நிலம்

4. நாடு+ என்ற என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ நாடென்ற

5. கலம்+ ஏறி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______ கலமேறி

 

பாடம் 6.2 கடலோடு விளையாடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ______ கதிர் + சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________ மூச்சு + அடக்கி

3. பெருமை + வானம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______ பெருமானம்

4. அடிக்கும் + அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______ அடிக்குமலை

 பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக

1. விடிவெள்ளி

பஞ்சுமெத்தை

2. மணல்

ஊஞ்சல்

3. புயல்

போர்வை

4. பனிமூட்டம்

விளக்கு

விடை:- 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பாடம் 6.3 வளரும் வணிகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்______ நுகர்வோர்

2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ வணிகச்சாத்து

3. பண்டம் + மாற்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______ பண்டமாற்று

4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ வண்ணம்+படங்கள்

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ விரிவு + அடைந்த

 

பாடம் 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் _____ திருக்குறள்

2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் _____ காவிரிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______ நூல்+ஆடை

5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது எதிரொலிக்க

 

பாடம் 7.2 தமிழ்நாட்டில் காந்தி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் மதுரை

2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார? உ.வே.சா

3. சென்னையில் ________ எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ரெளலட்

4. காந்தியடிகளிடம் சென்னை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியவர்  பாரதியார்

5. காந்தியடிகளைக் கவர்ந்த நூல் _____ திருக்குறள்

6. தமிழ்க்கையேட்டை இயற்றியவர் _______  ஜி.யு.போப்

7. பொருத்துக

1. இலக்கிய மாநாடு

பாரதியார்

2. தமிழ்நாட்டுக் கவிஞர்

சென்னை

3. குற்றாலம்

ஜி.யு.போப்

4. தமிழ்க்கையேடு

அருவி

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

 

பாடம் 7.3 வேலுநாச்சியார்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேலுநாச்சியார் சிவகங்கை மீட்ட ஆண்டு? 1780

2. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர் ……… வேலு நாச்சியார்

3. வேலு நாச்சியாரின் கணவர் ……………….. முத்துவடுகநாதர்

4. வேலு நாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமையேற்றவர் குயிலி

 

பாடம் 8.1 பராபரக்கண்ணி

1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ தம்முயிர்

2. இன்புற்று + இருக்கை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ இன்புற்றிருக்கை

3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் _________ தான் + என்று

4. “சோம்பல்” என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ________ சுறுசுறுப்பு

5. பராபரமே என்பதற்கு __________ என்று பொருள்? மேலான பொருள்

6. எல்லாரும் _______ வாழ வேண்டும். இன்பமாக

7. பராபரக்கண்ணி ___________ என்னும் நூலில் உள்ளது தாயுமானவர் பாடல்கள்

8. _________ எனப் போற்றப்படுவது பராபரக்கண்ணி தமிழ் மொழி உபநிடதம்

9. கூர் என்பதனைக் குறிக்கும் மற்றொரு சொல் __________ மிகுதி

 

பாடம் 8.2 நீங்கள் நல்லவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும் மகிழ்ச்சி

2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும். உழைக்க

3. உழைக்கும் மனிதர்கள் …………………… மாறிவிடுகிறார்கள் புல்லாங்குழலாக

4. எடுத்த செயலில் தாேற்றாலும் ……………. கைவிடக் கூடாது. முயற்சி

5. தோல்வி வந்தாலும் ………………… இழக்கக் கூடாது தன்னம்பிக்கை

4. கொடுப்பது பழத்தின் இயல்பு ………….. வேரின் இயல்பு பெறுவது

5. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு

A.  உழைப்பு – கவிதை

B.   கொடுப்பது – பழம்

C.   இதயம் – இசை

D.   பெறுவது – வேர்

6. பாராட்டும் போது பாராட்டப்படுபவரின் மனநிலை …… மகிழ்ச்சி

7. பன்முக ஆற்றல் என்பது ……… பல திறன்களைக் கொண்டவர்

8. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்? புவியரசு

9. சுயம் என்பதன் பொருள் ……………….தனித்தன்மை

10. கலீல் கிப்ரான் அவர்கள் ………………. நாட்டைச் சார்ந்தவர்? லெபனான்


 

பாடம் 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. மணிமேகலை ………………. நகரைச் சேர்ந்தவள். பூம்புகார்

2. கோவலன் மாதவியின் மகள் பெயர் மணிமேகலை

3. மணிமேகலையின் வேறு பெயர்? பசிப்பிணி போக்கிய பாவை

4. வைகாசி முழுநிலவு நாள் தோன்றுவது அமுதசுரபி பாத்திரம்

5. பொருந்தாதை தேர்ந்தெடு கம்பராமயணம்

6. கோமுகி என்பதன் பொருள்? பசுவின் முகம்

7. மணிமேகலை காப்பியத்தின் படி ……………….. சிறந்த அறமாகும் உணவு கொடுப்பது

8. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்

9. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……… மணிபல்லவத்தீவு

10. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ஆதிரை

பாடம் 8.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். ஈகை

2. பிற உயிர்களின்……….க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும். துன்பத்தை

3. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். குற்றம்


4. உள்ளத்தில் _____________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். குற்றம்

5. __________ தருவதே ஈகை ஆகும். இல்லாதவர்க்கு

6. ஆற்றுவார் ஆற்றல் _____________ போற்றுவார்/போற்றலுள் எல்லாம் தலை இகழாமை


 

பாடம் 8.5 பெயர்ச்சொல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக மண்

2. காரணப்பெயரை வட்டமிடுக? வளையல்

3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக வாழை

 

பாடம் 9.1  ஆசியஜோதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசிய விநாயகனார் ________________ என்னும் பட்டம் பெற்றவர் கவிமணி

2. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே ________ வாழ்பவர் நேர்மையான வாழ்வு

 

பாடம் 9.2 மனிதநேயம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்? மனிதநேயம்

2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் __________ காட்டியவர் வள்ளலார். அன்பு

3. அன்னை தெராசாவிற்கு ___________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் குழந்தைகளை பாதுகாப்போம்

5. பொருத்துக

1. வள்ளலார்

நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

2. கைலாஷ் சத்யார்த்தி

பசிப்பிணி போக்கியவர்

3. அன்னை தெராசா

குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்