Type Here to Get Search Results !

[Last Minute Study -9] 11th தமிழ் (இயல் 7, 8) 132 வினா விடைPDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


100 Questions Test  = https://www.minnalvegakanitham.in/p/tamil-2022.html

11ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்

11th Std Tamil Term 3

UNIT 7: வையத் தலைமை கொள் [57 வினா விடை]

காற்றில் கலந்த பேரோசை (ப. ஜீவானந்தம்)

புரட்சிக்கவி (பாரதிதாசன்)

பதிற்றுப்பத்து (எட்டுத்தொகை நூல்களும், புறப்பொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து)

சிந்தனைப் பட்டிமன்றம் (தாராபாரதி, பாரதியார்)

ஆக்கப்பெயர்கள் (நாமக்கல் கவிஞர்)

UNIT 8: யாரையும் மதித்து வாழ்  [75 வினா விடை]

தாகூரின் கடிதங்கள் (கடித இலக்கியம்)

ஒவ்வொரு புல்லையும்

தொலைந்து போனவர்கள் (அப்துல் ரகுமான்)

மனோன்மணீயம்

செவ்வி

மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் (திரு. வி. கலியான கந்தரனார்)




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

நூல் வெளி

பாடம் 1.1 யுகத்தின் பாடல்

நூல் வெளி

·         இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்

·         இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன

·         இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்.

·         வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம் பெறுகின்றன.

 

பாடம் 1.3 நன்னூல் – பாயிரம்

நூல் வெளி

·         நன்னூல், தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும்.

·         இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

·         இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது.

·         எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும் புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

·         சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

·         சீயங்கன் எனற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிராம் குறிப்பிடும்.

·         ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப் பிரபாவின் கோயில் உள்ளது. இங்கோ பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.

 

பாடம் 1.4 ஆறாம் திணை

நூல் வெளி

·         எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.

·         பணி தொடர்பாக பல நாடுகளுக்குப்  பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

·         அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி,  திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.

·         வம்சவிருந்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1996 தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெறறவர்.

·         வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

Lesson 2.2 – ஏதிலிக்குருவிகள்

நூல் வெளி

·         வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நத அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன்.

·         அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

·         நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர்.

·         “தகப்பன் கொடி” புதினத்திற்காக 2003-ம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர்.

·         குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும்  மீள்கோணம், பெருகும் வேட்கை  உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரின் படைப்புகள்

பாடம் 2.3 காவியம்

நூல் வெளி

·         பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர்.

·         இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.

·         புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.

·         ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

·         இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

·         லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

பாடம் 2.4 திருமலை முருகன் பள்ளு

நூல் வெளி

·         திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம்.

·         இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை.

·         குன்றின் மேலுள்ள முருகக்கடவுளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.

·         இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன.

·         இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” எனவும் வழங்கப்படுகிறது.

·         திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயன்.

·         இவர் காலம் 18-ம் நூற்றாண்டு.

பாடம் 2.5 ஐங்குறுநூறு

நூல் வெளி

·         ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு

·         இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.

·         திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.

·         ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி  – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்

·         ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

·         இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

·         இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

·         பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

பாடம் 2.6 யானை டாக்டர்

நூல் வெளி

·         ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்

·         விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

·         இயற்கை ஆர்வலர்.

·         யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளயும் எழுதியுள்ளார்.

·         இந்தக் குறும்புதினம் “அறம்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.

பாடம் 3.2 காவடிசிந்து

நூல் வெளி

·         19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார், பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

·         காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும்.

·         தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.

·         18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப் புலவராக இருந்தார்

·         இவர் இந்நநூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்

பாடம் 3.3 குறுந்தொகை

நூல் வெளி

·         எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு

·         கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.

·         “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது

·         உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.

·         இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

·         இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

·         வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர்.

·         சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

பாடம் 3.4 புறநானூறு

நூல் வெளி

·         புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

·         புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.

·         புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.

·          அ்கவற்பாக்களால் ஆ்னது.

·         புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.

·         இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

·         பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்

·         கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.

·         இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.

பாடம் 3.5 வாடிவாசல்

நூல் வெளி

·         சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

·         சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார்.

·         “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

·         வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

·         இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது.

பாடம் 4.2 பிள்ளைக்கூடம்

நூல் வெளி

·         இரா.மீனாட்சி 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

·         இவர் பாண்டிச்சேரி “ஆரோவில்” என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார்.

·         ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.

·         “கொடிவிளக்கு” என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது.

 

பாடம் 4.3 நற்றிணை

நூல் வெளி

·         எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து போற்றப்படுவதாகும்.

·         “நல்ல திணை” என்ற அடைமொழியில் போற்றப்படும் சிறப்புடையது.

·         இது நானூறு பாடல்களைக் கொண்டது.

·         இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்டது.

·         இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பெற்றது.

·         நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி

·         இந்நூலுக்க கடவுள் வாழ்த்தினை பாடியவர் பெருந்தேவனார்.

·         போதனார் : சங்ககால புலவர்.

·         நற்றிணையில் 110-ம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.

·         நற்றிணையில் பேரெல்லை 12 அடி விதி விலக்காக 13 அடிகளை கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது

 

பாடம் 4.4 தொல்காப்பியம்

நூல் வெளி

·         நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.

·         இதன் ஆசிரியர் தொல்காப்பியர்

·         இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது.

·          தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு இயல்களை கொண்டுள்ளது.

·         தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.

·         அவர்களுள் பழைமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர்.

·         நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரை விளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுளளது.

 

 

பாடம் 5.2 சீறாப்புராணம்

நூல் வெளி

·         இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.

·         “சீறா” என்பது “சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.

·         “சீறா” என்பதற்கு “வாழ்க்கை என்பது பொருள்.

·         “புராணம்” என்பது பழைய வரலாறு.

·         சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள்

·         இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் பாடினார்.

·         விலாதத்துக்காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.

·         நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தினால் “பனி அகமது மரைக்காயர்” இதன் தொடர்ச்சியாக “சின்னச்சீறா” என்ற நூலைப் படைத்துள்ளார்.

·         உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப்புலவர்.

·         கடிகை முத்துப் புலவரின் மாணவர்

·         நபிகள் நாயகத்தின் மீது “முதுமொழிமாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.

·         உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்

 

Lesson 5.3 – அகநானூறு

நூல் வெளி

·         கநானூறு 145 புலவர்கள் பாடல்களின் தொகுப்பாகும்.

·         (அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட தொகுப்பாகும்.

·         களிற்றியானை நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது.

·         இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர்

·         நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.

·         இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.

·         வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பதியாக இடம் பெற்றுள்ளது.

திணை

பாடல் வரிசை

எண்ணிக்கை

பாலை

1, 3, 5, 7…

200

குறிஞ்சி

2, 8, 12, 18…

80

முல்லை

4, 14, 24, 34…

40

மருதம்

6, 16, 26, 36…

40

நெய்தல்

0, 20, 30, 40…

40

 

பாடம் 5.4 பிம்பம்

நூல் வெளி

·         புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.

·         இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.

·         1995இல் இவருடைய வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

·         இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

பாடம் 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

நூல் வெளி

·         மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட “ஆத்மாநாம்” தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.

·         “காகிதத்தில் ஒரு கோடு” என்பது அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு

·         “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்

·         கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

·         இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப் பெற்றுள்ளன.

 

 

பாடம் 6.3 குற்றாலக் குறவஞ்சி

 

நூல் வெளி

·         தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழந்து அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றி பாடப்பட்டது குற்றலாக்குறவஞ்சி.

·         இந்நூல் திரிகூட ராசப்பகவிராயரின் “கவிதைக் கீரிடம்” என்று போற்றப்பட்டது.

·         மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.

·         திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர்.

·         குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில சைவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

·         “திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்” என்ற சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர்.

·         குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றிருக்கின்றார்.

 

பாடம் 6.4 திருச்சாழல்

 

நூல் வெளி

·         திருவாசகம் என்பது சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

·         இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்

·         இது பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.

·         திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.

·         திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.

·         பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசப் பாடல்கள் “திருவாசகத்த்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பது முதுமொழி.

·         ஜி.யு.போப் திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளளார்.

·         மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர்

·         இவர் திருவாவூரைச் சேர்ந்தவர். எனவே “திருவாதவூரார்” எனவும் அழைக்கப் பெற்றார்.

·         அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.

·         மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும், திருக்கோவையார் ஆகியனவாகும்.

 

பாடம் 7.1 காற்றில் கலந்த பேரோசை

நூல் வெளி

·          ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைம இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்.

·         சிறந்த தமிழ்ப் பற்றாளர்.

·         எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.

·         எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடை பேச்சாளர்

·         நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர்.

·         பசுவய்யா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர்

·         ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.

·         செம்மீன், தோட்டியின் மகள் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

·         பாடப்குதியாக உள்ள இக்கட்டுரை 1963-ல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.

 

பாடம் 7.2 புரட்சிக்கவி

நூல் வெளி

·         வடமொழியில் எழுதப்பட்ட பீல்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி  பாரதிதாசனால் 1937-ல் எழுதப்பட்டது புரட்சிக்கவி

·         பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

·         மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.

·         பிரெஞ்சு மொழில் அமைந்த தொழிலாளர் நலச்சட்டத்தை தமிழ் வடிவில் தந்தார்.

·         குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம் ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியுள்ளார்.

·         இவருடைய “பிசிராந்தையார்” நாடகத்திற்காக சாகித்திய அகாதெமி விரு வழங்கப்பட்டது.

·         “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசது தனது தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.

·         தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

 

பாடம் 7.3 பதிற்றுப்பத்து

நூல் வெளி

·         எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.

·         சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது.

·         இது பாடாண் திணையில் அமைந்துள்ளது.

·         முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை.

·         ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம் தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம் பெற்றிருக்கின்றன.

·         பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்கு தலைப்பாக தரப்பட்டிருக்கிறது.

·         பாடல்பகுதிக்குப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் நிரையபாலரைப் போல் (நகரத்து வீரர்கள்) படை வெள்ளமாக நின்றதால் “நிரைய வெள்ளம்” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது.

·         இரண்டாம் பத்தியின் பாட்டுடைத் தலைவன் “இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்”.

·         இவனைப் பாடிய  குமட்டூர் கண்ணனார். உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியைும் பரிசாகப் பெற்றார்.

 

பாடம் 8.2 ஒவ்வொரு புல்லையும்

நூல் வெளி

·         சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய “இன்குலாப்”  கட்டுரை, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர்.

·         அவருடைய கவிதைகள் “இன்குலாப் கவிதைகள்” ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

·         இவர் மரணத்திற்கு பின் இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

 

பாடம் 8.3 தொலைந்து போனவர்கள்

நூல் வெளி

·         அப்துல் ரகுமான்புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.

·         வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

·         இவர் வானம்பாடிக் கவிஞர்கள் ஒருவர்.

·         பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

·         தமிழபல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, “ஆலாபனை” என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

·         இப்பாடல் “சுட்டுவிரல்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

 

பாடம் 8.4 மனோன்மணீயம்

நூல் வெளி

·         தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம்

·         “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி 1891-ல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார்.

·         இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது.

·         இந் நூல் ஐந்து அங்கங்களும் இருபது களங்களும் கொண்டது.

·         நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.

·         மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை “சிவகாமியின் சரிதம்”.

·         பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் “மனோன்மணீயம்” 1885-ல் பிறந்தார்.

·         திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்

·         சென்னை மகான அரசு இவருக்கு “ராவ்பகதூர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

·         இவருக்குப் பெருமை சேரக்கும் வகையில் தமிழக அரசு இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்