எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
100
Questions Test = https://www.minnalvegakanitham.in/p/tamil-2022.html
11ஆம் வகுப்பு புதிய தமிழ்
புத்தகம்
11th
Std Tamil Term 3 |
UNIT 7: வையத் தலைமை கொள் [57 வினா விடை] |
♦ காற்றில்
கலந்த பேரோசை (ப. ஜீவானந்தம்) ♦ புரட்சிக்கவி
(பாரதிதாசன்) ♦ பதிற்றுப்பத்து
(எட்டுத்தொகை நூல்களும்,
புறப்பொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து) ♦ சிந்தனைப்
பட்டிமன்றம் (தாராபாரதி, பாரதியார்) ♦ ஆக்கப்பெயர்கள்
(நாமக்கல் கவிஞர்) |
UNIT 8: யாரையும் மதித்து வாழ் [75 வினா
விடை] |
♦ தாகூரின்
கடிதங்கள் (கடித இலக்கியம்) ♦ ஒவ்வொரு புல்லையும் ♦ தொலைந்து
போனவர்கள் (அப்துல்
ரகுமான்) ♦ மனோன்மணீயம் ♦ செவ்வி ♦ மெய்ப்புத்
திருத்தக் குறியீடுகள் (திரு. வி. கலியான கந்தரனார்) |
நூல் வெளி
பாடம்
1.1 யுகத்தின் பாடல்
நூல் வெளி |
·
இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார் ·
இவர் கவிதைகள் “உயிர்த்தெழும்
காலத்துக்காக” என்னும்
தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன ·
இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர். ·
வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில்
இடம் பெறுகின்றன. |
பாடம்
1.3 நன்னூல் – பாயிரம்
நூல் வெளி |
·
நன்னூல், தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும். ·
இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண
நூலாகும். ·
இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது. ·
எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும்
புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது. ·
சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5
பகுதியாக அமைந்துள்ளது. ·
சீயங்கன் எனற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார்
என்று பாயிராம் குறிப்பிடும். ·
ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப்
பிரபாவின் கோயில் உள்ளது. இங்கோ பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது. |
பாடம்
1.4 ஆறாம் திணை
நூல் வெளி |
·
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில்
உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். ·
பணி தொடர்பாக பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில்
வசித்து வருகிறார். ·
அக்கா,
மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை
வெளியிட்டிருக்கின்றார். ·
வம்சவிருந்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக
1996 தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெறறவர். ·
வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார். |
Lesson
2.2 – ஏதிலிக்குருவிகள்
நூல் வெளி |
·
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நத அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். ·
அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார். ·
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர். ·
“தகப்பன்
கொடி” புதினத்திற்காக 2003-ம் ஆண்டு தமிழக
அரசின் விருது பெற்றவர். ·
குறடு,
நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும்
இவரின் படைப்புகள் |
பாடம்
2.3 காவியம்
நூல் வெளி |
·
பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர். ·
இவர் பானுசந்திரன்,
அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர். ·
புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில்
இயங்கியவர். ·
ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். ·
இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. ·
லங்காபுரி
ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. |
பாடம்
2.4 திருமலை முருகன் பள்ளு
நூல் வெளி |
·
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம். ·
இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை. ·
குன்றின் மேலுள்ள முருகக்கடவுளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. ·
இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன. ·
இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” எனவும் வழங்கப்படுகிறது. ·
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயன். ·
இவர் காலம் 18-ம் நூற்றாண்டு. |
பாடம்
2.5 ஐங்குறுநூறு
நூல் வெளி |
·
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு ·
இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். ·
திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. ·
ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம்
– ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார் ·
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ·
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் ·
இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை ·
பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன. |
பாடம்
2.6 யானை டாக்டர்
நூல் வெளி |
·
ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ·
விஷ்ணுபுரம்,
கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும்,
கட்டுரைகளும் எழுதியுள்ளார். ·
இயற்கை ஆர்வலர். ·
யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளயும் எழுதியுள்ளார். ·
இந்தக் குறும்புதினம் “அறம்” என்னும்
சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது. |
பாடம்
3.2 காவடிசிந்து
நூல் வெளி |
·
19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார், பாடிய காவடிச்சிந்து
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம். ·
காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும். ·
தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார். ·
18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப்
புலவராக இருந்தார் ·
இவர் இந்நநூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி,
கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார் |
பாடம்
3.3 குறுந்தொகை
நூல் வெளி |
·
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு ·
கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது. ·
“நல்ல
குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது ·
உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே
முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது. ·
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். ·
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ·
வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர். ·
சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. |
பாடம்
3.4 புறநானூறு
நூல் வெளி |
·
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ·
புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது. ·
புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். ·
அ்கவற்பாக்களால் ஆ்னது. ·
புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின்
சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது. ·
இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக
வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது. கடலுள்
மாய்ந்த இளம்பெருவழுதி ·
பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய
குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள்
போற்றினர் ·
கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி”
என அழைக்கப் பெற்றார். ·
இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள்
காணப்படுகின்றன. |
பாடம்
3.5 வாடிவாசல்
நூல் வெளி |
·
சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை,
மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார். ·
சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார். ·
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். ·
வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி,
தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். ·
இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது. |
பாடம்
4.2 பிள்ளைக்கூடம்
நூல் வெளி |
·
இரா.மீனாட்சி 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம்,
வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். ·
இவர் பாண்டிச்சேரி “ஆரோவில்” என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார். ·
ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். ·
“கொடிவிளக்கு” என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது. |
பாடம்
4.3 நற்றிணை
நூல் வெளி |
·
எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து போற்றப்படுவதாகும். ·
“நல்ல திணை” என்ற அடைமொழியில் போற்றப்படும் சிறப்புடையது. ·
இது நானூறு பாடல்களைக் கொண்டது. ·
இந்நூல் 9
அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்டது. ·
இப்பாடல்கள் 275
புலவர்களால் பாடப்பெற்றது. ·
நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி ·
இந்நூலுக்க கடவுள் வாழ்த்தினை பாடியவர் பெருந்தேவனார். ·
போதனார் : சங்ககால புலவர். ·
நற்றிணையில் 110-ம் பாடலை மட்டும் பாடியுள்ளார். ·
நற்றிணையில் பேரெல்லை 12 அடி விதி விலக்காக 13 அடிகளை கொண்டதாக இவரது பாடல்
அமைந்துள்ளது |
பாடம்
4.4 தொல்காப்பியம்
நூல் வெளி |
·
நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். ·
இதன் ஆசிரியர் தொல்காப்பியர் ·
இது எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது. ·
தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களாக இருபத்தேழு
இயல்களை கொண்டுள்ளது. ·
தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ·
அவர்களுள் பழைமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார்,
சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர். ·
நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரை விளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக
இடம் பெற்றுளளது. |
பாடம்
5.2 சீறாப்புராணம்
நூல் வெளி |
·
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். ·
“சீறா” என்பது “சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். ·
“சீறா” என்பதற்கு “வாழ்க்கை என்பது பொருள். ·
“புராணம்” என்பது பழைய வரலாறு. ·
சீறாப்புராணம் என்பதற்கு, “நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது” என்பது பொருள் ·
இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் பாடினார். ·
விலாதத்துக்காண்டம்,
நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும்,
5027 விருத்தப்பாக்களையும் கொண்டது. ·
நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தினால் “பனி அகமது மரைக்காயர்” இதன் தொடர்ச்சியாக “சின்னச்சீறா” என்ற நூலைப் படைத்துள்ளார். ·
உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப்புலவர். ·
கடிகை முத்துப் புலவரின் மாணவர் ·
நபிகள் நாயகத்தின் மீது “முதுமொழிமாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார். ·
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள் வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர் |
Lesson
5.3 – அகநானூறு
நூல் வெளி |
||||||||||||||||||
·
கநானூறு 145 புலவர்கள் பாடல்களின் தொகுப்பாகும். ·
(அகம் + நான்கு + நூறு = அகநானூறு) அகப்பொருள் குறித்த நானூறு பாக்களை கொண்ட
தொகுப்பாகும். ·
களிற்றியானை
நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்று மூன்று பிரிவுகளை கொண்டது. ·
இதனை அகம், நெடுந்தொகை எனக் கூறுவர் ·
நெடுந்தொகை
நானூறு என்ற பெயரும் உண்டு. ·
இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு. ·
வீரை
வெளியன் தித்தனார் பாடிய
ஒரேயொரு பாடல் பாடப்பதியாக இடம் பெற்றுள்ளது.
|
பாடம்
5.4 பிம்பம்
நூல் வெளி |
·
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர்
வைத்தியலிங்கம். ·
இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில்
இயங்கி வருபவர். ·
1995இல் இவருடைய வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ சாகித்திய அகாதெமி விருது பெற்றது. ·
இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |
பாடம்
6.2 ஆத்மாநாம் கவிதைகள்
நூல் வெளி |
·
மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட “ஆத்மாநாம்” தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். ·
“காகிதத்தில்
ஒரு கோடு” என்பது அவருடைய முக்கியமான கவிதைத்
தொகுப்பு ·
“ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார் ·
கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார். ·
இவருடைய கவிதைகள் ஆத்மாநாம்
கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்
பெற்றுள்ளன. |
பாடம்
6.3 குற்றாலக் குறவஞ்சி
நூல் வெளி |
·
தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின்
சிறப்பைப் புகழந்து அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றி பாடப்பட்டது குற்றலாக்குறவஞ்சி. ·
இந்நூல் திரிகூட ராசப்பகவிராயரின் “கவிதைக் கீரிடம்” என்று போற்றப்பட்டது. ·
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. ·
திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். ·
குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில சைவ சமயக் கல்வியிலும் இலக்கிய
இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். ·
“திருக்குற்றாலநாதர்
கோவில் வித்துவான்” என்ற சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர். ·
குற்றாலத்தின் மீது தலபுராணம்,
மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றிருக்கின்றார். |
பாடம்
6.4 திருச்சாழல்
நூல் வெளி |
·
திருவாசகம் என்பது சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு
ஆகும். ·
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் ·
இது பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. ·
திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள்
குறித்துப் பாடப்பெற்றுள்ளன. ·
திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை. ·
பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசப் பாடல்கள்
“திருவாசகத்த்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பது முதுமொழி. ·
ஜி.யு.போப் திருவாசகம் முழுவதையும் ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்துள்ளளார். ·
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் ·
இவர் திருவாவூரைச் சேர்ந்தவர். எனவே “திருவாதவூரார்” எனவும் அழைக்கப் பெற்றார். ·
அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர். ·
மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும், திருக்கோவையார் ஆகியனவாகும். |
பாடம்
7.1 காற்றில் கலந்த பேரோசை
நூல் வெளி |
·
ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும்
பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைம இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார். ·
சிறந்த தமிழ்ப் பற்றாளர். ·
எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ·
எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடை பேச்சாளர் ·
நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர் ஒருவர். ·
பசுவய்யா என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதியவர் ·
ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் ஒரு
புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும்
எழுதியுள்ளார். ·
செம்மீன், தோட்டியின் மகள் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்த்துள்ளார். ·
பாடப்குதியாக உள்ள இக்கட்டுரை 1963-ல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்பு மலரில்
வெளியானது. |
பாடம்
7.2 புரட்சிக்கவி
நூல் வெளி |
·
வடமொழியில் எழுதப்பட்ட பீல்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி பாரதிதாசனால்
1937-ல் எழுதப்பட்டது புரட்சிக்கவி ·
பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் கனக சுப்புரத்தினம் என்னும் தம்
பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். ·
மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால்
புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். ·
பிரெஞ்சு மொழில் அமைந்த தொழிலாளர் நலச்சட்டத்தை தமிழ் வடிவில் தந்தார். ·
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம் ஆகிய காப்பியங்களையும்
எண்ணற்ற பாடல்களையும் இயற்றியுள்ளார். ·
இவருடைய “பிசிராந்தையார்” நாடகத்திற்காக சாகித்திய அகாதெமி விரு
வழங்கப்பட்டது. ·
“வாழ்வினில்
செம்மையைச் செய்பவள் நீயே” என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசது தனது தமிழ்தாய் வாழ்த்தாக
ஏற்றுக் கொண்டுள்ளது. ·
தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது. |
பாடம்
7.3 பதிற்றுப்பத்து
நூல் வெளி |
·
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. ·
சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது. ·
இது பாடாண் திணையில் அமைந்துள்ளது. ·
முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. ·
ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம் தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்
பெற்றிருக்கின்றன. ·
பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்கு தலைப்பாக தரப்பட்டிருக்கிறது. ·
பாடல்பகுதிக்குப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர் முன் நிரையபாலரைப்
போல் (நகரத்து வீரர்கள்) படை வெள்ளமாக நின்றதால் “நிரைய வெள்ளம்” என்ற தலைப்பு இடப்பட்டுள்ளது. ·
இரண்டாம் பத்தியின் பாட்டுடைத் தலைவன் “இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்”. ·
இவனைப் பாடிய குமட்டூர் கண்ணனார். உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு
வருவாயுள் பாதியைும் பரிசாகப் பெற்றார். |
பாடம்
8.2 ஒவ்வொரு புல்லையும்
நூல் வெளி |
·
சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய “இன்குலாப்” கட்டுரை, கவிதை, சிறுகதை, கட்டுரை,
நாடகம் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர். ·
அவருடைய கவிதைகள் “இன்குலாப்
கவிதைகள்” ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி
அழைப்பேன்” என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. ·
இவர் மரணத்திற்கு பின் இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு
இவருடைய உடல் கொடையாக அளிக்கப்பட்டது. |
பாடம்
8.3 தொலைந்து போனவர்கள்
நூல் வெளி |
·
அப்துல்
ரகுமான்புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை என்று
கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். ·
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர். ·
இவர் வானம்பாடிக்
கவிஞர்கள் ஒருவர். ·
பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார். ·
தமிழபல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, “ஆலாபனை” என்னும்
கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ·
இப்பாடல் “சுட்டுவிரல்” என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது. |
பாடம்
8.4 மனோன்மணீயம்
நூல் வெளி |
·
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் ·
“லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி 1891-ல் பேராசிரியர்
சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். ·
இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. ·
இந் நூல் ஐந்து அங்கங்களும் இருபது களங்களும் கொண்டது. ·
நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. ·
மனோன்மணீயத்தில் உள்ள கிளைக் கதை “சிவகாமியின் சரிதம்”. ·
பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் “மனோன்மணீயம்”
1885-ல் பிறந்தார். ·
திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார் ·
சென்னை மகான அரசு இவருக்கு “ராவ்பகதூர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ·
இவருக்குப் பெருமை சேரக்கும் வகையில் தமிழக அரசு இவர் பெயரால் திருநெல்வேலியில்
பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. |
minnal vega kanitham