Type Here to Get Search Results !

[Last Minute Study -7] 11th தமிழ் (இயல் 1, 2, 3) 172 வினா விடை PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


100 Questions Test  = https://www.minnalvegakanitham.in/p/tamil-2022.html

11ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்

                                                 11th Std Tamil Term 1

UNIT 1: என்னுயிர் என்பேன் [53 வினா விடை]

♦ யுகத்தின் பாடல் (கவிஞர் சு. வில்வரத்தினம்)

♦ பேச்சு மொழியும் கவிதை மொழியும்  – (இந்திரனின்)

நன்னூல் பாயிரம்

♦ ஆறாம் திணை - (இந்திரனின்)

♦ மொழி முதல், இறுதி எழுத்துகள்  (இலக்கணம்)

UNIT 2: மாமழை போற்றுதும் [55 வினா விடை]

♦ இயற்கை வேளாண்மை (திருவள்ளுவர்,நம்மாழ்வர்)

♦ ஏதிலிக்குருவிகள் (அழகிய பெரியவன்)

♦ காவியம்

திருமலை முருகன் பள்ளு (96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று) (அழகிய பெரியவன்)

ஐங்குறுநூறு

யானை டாக்டர் (டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி) (யானை டாக்டர் என்ற சிறப்பு பெயரினை பெற்றவர்)

♦புணர்ச்சி விதிகள் (இலக்கணம்)

UNIT 3: பீடு பெற நில் [64 வினா விடை]

காவடிச்சிந்து (அண்ணாமலையார்)

குறுந்தொகை

புறநானூறு

வாடிவாசல் (சி.சு.செல்லப்பா)

♦ பகுபத உறுப்புகள் (இலக்கணம்)

♦ திருக்குறள்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

நூல் வெளி

பாடம் 1.1 யுகத்தின் பாடல்

நூல் வெளி

·         இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார்

·         இவர் கவிதைகள் “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன

·         இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர்.

·         வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம் பெறுகின்றன.

பாடம் 1.3 நன்னூல் – பாயிரம்

நூல் வெளி

·         நன்னூல், தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும்.

·         இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

·         இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது.

·         எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும் புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

·         சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது.

·         சீயங்கன் எனற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிராம் குறிப்பிடும்.

·         ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப் பிரபாவின் கோயில் உள்ளது. இங்கோ பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.

பாடம் 1.4 ஆறாம் திணை

நூல் வெளி

·         எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.

·         பணி தொடர்பாக பல நாடுகளுக்குப்  பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

·         அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி,  திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.

·         வம்சவிருந்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1996 தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெறறவர்.

·         வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

Lesson 2.2 – ஏதிலிக்குருவிகள்

நூல் வெளி

·         வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நத அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன்.

·         அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

·         நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர்.

·         “தகப்பன் கொடி” புதினத்திற்காக 2003-ம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர்.

·         குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும்  மீள்கோணம், பெருகும் வேட்கை  உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரின் படைப்புகள்

பாடம் 2.3 காவியம்

நூல் வெளி

·         பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர்.

·         இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.

·         புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.

·         ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

·         இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

·         லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

 

பாடம் 2.4 திருமலை முருகன் பள்ளு

நூல் வெளி

·         திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம்.

·         இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை.

·         குன்றின் மேலுள்ள முருகக்கடவுளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.

·         இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன.

·         இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” எனவும் வழங்கப்படுகிறது.

·         திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயன்.

·         இவர் காலம் 18-ம் நூற்றாண்டு.

பாடம் 2.5 ஐங்குறுநூறு

நூல் வெளி

·         ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு

·         இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.

·         திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.

·         ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி  – கபிலர், முல்லை – பேயனார், மருதம் – ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார்

·         ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

·         இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

·         இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

·         பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

பாடம் 2.6 யானை டாக்டர்

நூல் வெளி

·         ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்

·         விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

·         இயற்கை ஆர்வலர்.

·         யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளயும் எழுதியுள்ளார்.

·         இந்தக் குறும்புதினம் “அறம்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.

 

பாடம் 3.2 காவடிசிந்து

நூல் வெளி

·         19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார், பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

·         காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும்.

·         தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார்.

·         18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப் புலவராக இருந்தார்

·         இவர் இந்நநூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்

 

பாடம் 3.3 குறுந்தொகை

நூல் வெளி

·         எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு

·         கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது.

·         “நல்ல குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது

·         உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது.

·         இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

·         இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

·         வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர்.

·         சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

 

பாடம் 3.4 புறநானூறு

நூல் வெளி

·         புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

·         புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது.

·         புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.

·          அ்கவற்பாக்களால் ஆ்னது.

·         புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது.

·         இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

·         பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள் போற்றினர்

·         கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என அழைக்கப் பெற்றார்.

·         இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள் காணப்படுகின்றன.

 

பாடம் 3.5 வாடிவாசல்

நூல் வெளி

·         சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

·         சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார்.

·         “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

·         வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

·         இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்