எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
10ஆம் வகுப்பு புதிய தமிழ்
புத்தகம்
UNIT 1: அமுதஊற்று [163 வினா விடை] |
♦ அன்னை மொழியே
(பெருஞ்சித்திரனார்) ♦ தமிழ்ச்சொல்
வளம் (தேவநேயப்பாவணர்) ♦ இரட்டுற மொழிதல்
(கடல் குறித்து தமிழழகனார்) ♦ உரைநடையின் அணிநலன்கள் ♦ எழுத்து, சொல்
(இலக்கணம்) |
UNIT 2: உயிரின் ஓசை [146 வினா விடை] |
♦ கேட்கிறதா என்குரல்! (காற்று) ♦ காற்றே வா!
(பாரதியார்) ♦ முல்லைப்பாட்டு
(பத்துபாட்டு) ♦ புயலிலே ஒரு தோணி ♦ தொகைநிலைத் தொடர்கள்
(இலக்கணம்) |
UNIT 3: கூட்டாஞ்சோறு [117 வினா விடை] |
♦ விருந்து போற்றுதும்! ♦ காசிக்காண்டம் (அதிவீராம பாண்டியர்) ♦ மலைபடுகடாம் (பத்துப்பாட்டு
நூல்களுள் ஒன்று) ♦ கோபல்லபுரத்து மக்கள் ♦ தொகாநிலைத் தொடர்கள்
(இலக்கணம்) ♦ திருக்குறள் |
UNIT 1: அமுதஊற்று
1. "அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும்
முன்னை முகிழ்ந்த நறுங்கனியே!" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் – கனிச்சாறு
2. சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்.
என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர் - க.சச்சிதானந்தன்
3. “மகபுகுவஞ்சி' என்ற நூலின் ஆசிரியர் - பெருஞ்சித்திரனார்
4. பெருஞ்சித்தினார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமிழ்
உணர்வை பரப்பினார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு
5. "உலகியல் நூறு" என்ற நூலின் ஆசிரியர்
- பெருஞ்சித்திரனார்
6. பெருஞ்சித்தினாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்
7. பாவியக்கொத்து,பள்ளிப்பறவை, நூறாசிரியம், எண்சுவை
எண்பது, கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் - பெருஞ்சித்திரனார்
8. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய்
அமைந்தது - திருக்குறள் மெய்ப்பொருளுரை
9. "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே"
என்ற பாடலில் தென்னன் என்பது எம்மன்னனைக் குறிக்கிறது- பாண்டியன்
10. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்'' என்றவர்
- பாரதியார்
11. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின்
ஆசிரியர் - கால்டுவெல்
12. நெல், கேழ்வரகு போன்றதாவரத்திரன் அடிப்பகுதியைக்
குறிப்பதற்கான சொல் – தாள்
13. தமிழாசிரியர், நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் - இரா. இளங்குமரனார்
14. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில்
'திருவள்ளுவர் தவச்சாலை' நிறுவியவர் -இளங்குமரனார்
15. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் - இளங்குமரனார்
16. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி
வருபவர் தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் - இளங்குமரனார்
17. திரு.வி.க போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக்
கற்றுக்கொண்டவர் - இளங்குமரனார்
18. திருக்குறள் தமிழ் மரபுரை என்ற நூலை எழுதியவர்
- இளங்குமரனார்
19. இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் - காக்கைபாடினிய உரை,புறத்திரட்டு உரை,தேவநேயம்
20. இலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் - Leaf
21. இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் - தாள்,
இலை,தோகை, ஓலை
22. கோதுமையின் வகைகள் - சம்பா கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை
23. சம்பா நெல் வகைகள் எத்தனை உள்ளது - 60
24. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
- மலேசியா
25. மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்டவர் - தேவநேயப்
பாவாணர்
26. தமிழ் சொல்வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து
எடுக்கப்பட்டது - தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு
கட்டுரை
27. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராகப்
பணியாற்றியவர் - தேவநேயப் பாவாணர்
28. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் - தேவநேயப்
பாவாணர்
29. கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி - தமிழ்
30. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் - லிசுபன்
31. கார்டிலா என்னும் நூல் முதன்முதலில் தமிழ்மொழியில்
மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு - 1554
32. ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின்
முழுப்பெயர் - Carthila de lingoa tamul e
portugues
33. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறிமாறி
நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது - கறுப்பு,
சிவப்பு
34. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில்
முதலில் அச்சேறிய மொழி - தமிழ்
35. சொல்லுதல் என்பதற்கு உரிய சொல் - பேசுதல்,
விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்
36. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை - கவை
37. பூ விரியத் தொடங்கும் குறிக்கும் நிலை – போது
38. முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த
வணிகலமும் மேவலால் - நித்தம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - தமிழழகனார்
39. சந்தக்கவிமணி பாடிய இரட்டுற மொழிதல் பாடலில் தமிழ்
எதனுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது- ஆழி
40. துய்ப்பது என்ற சொல்லின் பொருள் - கற்பது
41. மேவலால் என்பதன் பொருள் - பொருந்துதல்
42. மூன்று வகையான சங்குகள் - வெண்சங்கு ,சஞ்சலம் , பாஞ்சசன்யம்
43. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது - சிலேடை அணி, இரட்டுற மொழிதல் அணி
44. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடுபவர் - தமிழழகனார்
45. தமிழழகனாரின் இயற்பெயர் - சண்முக சுந்தரம்
46. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்
- 12
47. இரட்டுறமொழிதல் பாடலில் முத்தமிழ் என்பது கடலுக்கு
எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது-முத்தினை
அமிழ்ந்து எடுத்தல்
48. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு
எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது- மூன்று
வகையான சங்குகள் தருதல்
49. தமிழில் மெத்த அணிகலன் என குறிப்பிடப்படும் நூல்கள்
- ஐம்பெரும் காப்பியம்
50. இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு
எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது- மிகுதியான
வணிகக் கப்பல்கள்
51. இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது
கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது - நீரலையைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்
52. காலையிலேயே மாலையும் வந்துவிட்டது என சிலேடையாக
கூறியவர் - கி.வா.ஜகந்நாதன்
53. "அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும்
கம்மல், குரலிலும் கம்மல்' என்றுக் கூறியவர்-
சுப்புடு
54. கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவ நண்பரை எவ்வாறு
அறிமுகம் செய்தார் - பல்துறை வித்தகர்
55. உரைநடையின் அணிநலன்கள் என்ற நூலின் ஆசிரியர் - எழில் முதல்வன்
56. குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் - கபிலர்
57. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் - நா. பார்த்த சாரதி
58. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென
மாட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் - தண்டி
59. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி வெளியிடப்பட்ட
ஆண்டு -1983 செப்டம்பர்
60. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால்
வெளியிடப்பட்டது - டி.சி.எம். டேட்டா புரொடக்டஸ்
61. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளி விவரத்துறை
அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கும் கோப்புகளையும், செய்திகளையும் பறிமாறிக்கொண்ட
முதல் நேர்வழிக் கணினி - திருவள்ளுவர்
62. "திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே
இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த
கண்மாய்கள் என்ற உவமைக் காணப்படும் நூல் - குறிஞ்சி
மலர்
63. 'களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு
கிடைத்துவிட்டது உண்டு மகிழ்ந்தாய் : உன் புன்னகை தான் அதற்குச் சான்று ' என்று கூறியவர்
- அண்ணா
64. "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால்
காணப்படும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி - எடுத்துக்காட்டு உவமை அணி
65. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை
- இணை ஒப்பு
66. "ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும்
என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை''
என்று கூறியவர் - வ.ராமசாமி
67. மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் - வ.ராமசாமி
68. "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப்
பொருள்கள், சொல்லும் போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" என்று எழுதும்
திறத்தை குறிப்பிட்டவர் - தொல்காப்பியர்
69. தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் - திரு.வி.க
70. "தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில்
அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும்'' என்று எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை
71. தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் - இரா.பி.சேதுபிள்ளை
72. சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் - மு.வரதராசனார்
73. நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர்
- மு.வரதராசனார்
74. வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும் என்று
எழுதியவர் - மு.வரதராசனார்
75. முரண்பாடு மெய்ம்மை - Paradox
76. "இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர
வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?" இது எதற்கான எடுத்துக்காட்டு - முரண்படு மெய்ம்மை
77. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும்
புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு பெயர் - எதிரிணை இசைவு
78. கலப்பில்லாத பொய்யை - சொல் முரண் (Oxymoron)
79. "குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம்,
பசித்த வயிறுகள் ஒரு பக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்" என்று கூறியவர்
- ப.ஜீவானந்தம்
80. பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர்
உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர்
- அண்ணா
81. உச்சநிலை என்பது - Climax
82. "இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின்
நன்மைதான் என் நன்மை” என்று கூறியவர் - பாரதியார்
83. புதிய உரைநடை என்ற நூலின் ஆசிரியர் - எழில் முதல்வன்
84. எழில் முதல்வனின் வேறு பெயர் - மா.இராமலிங்கம்
85. குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராக பணி செய்தவர் - எழில் முதல்வன்
86. மா.இராமலிங்கம் எழுதியகள் நூல்-இனிக்கும் நினைவுகள்,எங்கெங்கு
காணினும்,யாதுமாகி நின்றாய்
87. “புதிய உரைநடை" என்ற நூலுக்காக மா. இராமலிங்கம்
பெற்ற விருது - சாகித்திய அகாடமி
88. 'வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும்
பலாவும் சூழ்அடுத்து ஓங்கி' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்
89. சிறுமலை என்ற ஊர் எம்மாவட்டத்தில் உள்ளது- திண்டுக்கல்
90. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவதை
- இணை ஒப்பு என்கிறோம்
91. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால்
காணப்படும்” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - எடுத்துக்காட்டு உவமை அணி
92. சார்பெழுத்து எத்தனை வகைப்படும் - பத்து
93. அளபெடுத்தல் என்பது - நீண்டு ஒலித்தல்
94. உயிரளபெடை எத்தனை வகைப்படும் - மூன்று
95. உயிரளபெடையின் வகைகள் - செய்யுளிசை அளபெடை,இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை
96. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய,
நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் - செய்யுளிசை
அளபெடை
97. இசைநிறை அளபெடை என அழைக்கப்படுவது- செய்யுளிசை அளபெடை
98. இசைநிறை அளபெடைக்கு எடுத்துக்காட்டு தருக - ஓஒதல் வேண்டும், உறாஅர்க்கு உறுநோய், நல்ல படாஅ பறை
99. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக
அளபெடுப்பது அளபெடை - இன்னிசை அளபெடை
100. "கெடுப்பதூம்உம், கெட்டார்க்குச் சார்வாய்
மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லம் மழை" -
இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை - இன்னிசை அளபெடை
101. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து
அளபெடுப்பது அளபெடை - சொல்லிசை அளபெடை
102. "உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார வரனசைஇ இன்னும்
உளேன்" - இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை
- சொல்லிசை அளபெடை
103. நசை என்பதன் பொருள் - விருப்பம்
104. ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துகள் அளபெடுக்கும்
- 11
105. ஒற்றளபெடையில் பயன்படும் எழுத்துகள் - ங், ஞ், ண், ந்,ம், ன், வ்,ய்,ல்,ள், ஃ
106. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள்
தரும் வகையில் அமைவது - சொல்
107. மொழியின் மூன்று வகை – தனிமொழி,தொடர்மொழி,பொது மொழி
108. "ஒரு மொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு
எனபொது இருமையும் ஏற்பன" என்று கூறும் நூல் - நன்னூல்
109. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது - தனிமொழி
110. தனிமொழிக்கு எடுத்துக்காட்டு தருக - கண், படி , கண்ணன்
111. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து
வந்து பொருள் தருவது - தொடர்மொழி
112. தொடர்மொழிக்கு எடுத்துக்காட்டு தருக - கண்ணன்
வந்தான்
113. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே
பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது
¬- பொது மொழி
114. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு தருக - வேங்கை
115. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்
இடம் காலம் பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது - தொழிற்பெயர்
116. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்
- விகுதி பெற்ற தொழிற்பெயர்
117. நடத்தல் என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக்
காண்க – நட, தல்
118. வாழ்க்கை என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக்
காண்க - வாழ், கை
119. ஆளல் என்ற தொழிற்பெயரில் வினையடி, விகுதியைக் காண்க
- ஆள், அல்
120. எதிர்மறைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக
- நடவாமை
121. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் வருவது
- முதனிலை தொழிற்பெயர்
122. முதனிலைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக
– தட்டு,உரை,அடி
123. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்-
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
124. கெடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயரில் - கெடு
என மாறும்
125. கெடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயரில்
- கேடு என மாறும்
126. சுடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயரில்
- சுடு என வரும்
127. சுடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயரில்
- சூடு என வரும்
128. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை
உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது - வினையாலணையும் பெயர்
129. வினையாலணையும் பெயர் எந்தெந்த இடங்களில் வரும் - தன்மை,முன்னிலை,படர்க்கை
130. வினையாலனையும் பெயர் எந்தெந்த காலங்களில் வரும்
- இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
131. வினையாலணையும் பெயருக்கு எடுத்துக்காட்டு தருக - பொறுத்தார் பூமியாள்வர்
132. மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
- வணிகக்கப்பலும் ஐம்பெரும் காப்பியம்
133. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் " நிலத்துக்கு
நல்ல உரங்கள்”. இதில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது - சருகும் சண்டும்
134. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
- எம் + தமிழ் + நா
135. கேட்டவர் மகிழப்பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே - பாடல் : கேட்டவர்
136. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை - மணி வகை
137. மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் - சுந்தர கவிராசர்
138. "தேனிலே ஊறிய செந்தமிழின் தேறும் சிலப்பதி
காரமதை" - என்ற பாடலின் ஆசிரியர் - கவிமணி
தேசிய விநாயகனார்
139. "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு
வளங்குறத் திகழுந்தென் மொழியே'' என்ற பாடலின் ஆசிரியர் - கா.நமச்சிவாயர்
140. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர்
- சேதுமணி மணியன்
141. தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர்
- மா.நன்னன்
142. பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் - உதய சங்கர்
143. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய
நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை - செய்யுளிசை
அளபெடை
144. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகள் - 11
145. பொருத்துக.
i.
தண்டு - கீரை, வாழை
ii.
கோல் - நெட்டி, மிளகாய்ச் செடி
iii.
தூறு - குத்துச்செடி, புதர்
iv.
தட்டு (அ) தட்டை - கம்பு, சோளம்
146. பொருத்துக.
i.
கழி - கரும்பின் அடி
ii.
கழை - மூங்கிலின் அடி
iii.
அடி - புளி, வேம்பு
iv.
தாள் - நெல், கேழ்வரகு
147. கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக.
1.
அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை –
கவை
2.
கவையின் பிரிவு - கொம்பு/கொப்பு
3.
கொம்பின் பிரிவு – கிளை
4.
கிளையின் பிரிவு – சினை
5.
சினையின் பிரிவு – போத்து
6.
போத்தின் பிரிவு – குச்சு
7.
குச்சியின் பிரிவு - இணுக்கு
148. காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களைக்
கொண்டு பொருத்துக
1.
சுள்ளி - காய்ந்த குச்சு (குச்சி)
2.
விறகு - காய்ந்த சிறுகிளை
3.
வெங்கழி - காய்ந்த கழி
4.
கட்டை - காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
149. தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
இலை - புளி, வேம்பு
2.
தாள் - நெல், புல்
3.
தோகை - சோளம், கரும்பு
4.
ஓலை - தென்னை, பனை
5.
சண்டு - காய்ந்த தாளும் தோகையும்
6.
சருகு - காய்ந்த இலை
150. கொழுந்து வகை பொருத்துக.
1.
துளிர் (அ) தளிர் - நெல், புல்
2.
முறி (அ) கொழுந்து - புளி, வேம்பு
3.
குருத்து - சோளம், கரும்பு, தென்னை, பனை
4.
கொழுந்தாடை - கரும்பின் நுனிப்பகுதி
151. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக
1.
அரும்பு ¬- பூவின் தோற்ற நிலை
2.
போது - பூ விரியத் தொடங்குதல்
3.
மலர் (அ) அலர் - பூ மலர்ந்த நிலை
4.
வீ - செடியினின்று பூ கீழே விழுதல்
5.
செம்மல் - பூ வாடின நிலை
152. தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
பூவோடு கூடிய இளம்பிஞ்சு – பூம்பிஞ்சு
2.
இளம் காய் – பிஞ்சு
3.
மாம்பிஞ்சு – வடு
4.
பலாப்பிஞ்சு – மூசு
5.
எள்பிஞ்சு – கவ்வை
153. தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
தென்னை, பனை – குரும்பை
2.
சிறு குரும்பை – முட்டுக்குரும்பை
3.
முற்றாத தேங்காய் – இளநீர்
4.
இளம் பாக்கு – நுழாய்
5.
இளம் நெல் – கருக்கல்
6.
வாழைப்பிஞ்சு - கச்சல்
154. தாவரத்தின் குலை வகைகளைக் குறிக்கும் சொற்களைக்
கொண்டு பொருத்துக
1.
கொத்து - அவரை, துவரை
2.
குலை - கொடி முந்திரி
3.
தாறு - வாழைக் குலை
4.
கதிர் - கேழ்வரகு, சோளம்
5.
அலகு (அ) குரல் - நெல், தினை
6.
சீப்பு - வாழை
155. கெட்டுப்போன காய்கனிகளைக் குறிக்கும் சொற்களைக்
கொண்டு பொருத்துக
1.
சூம்பல் - நுனியில் சுருங்கிய காய்
2.
சிவியல் - சுருங்கிய பழம்
3.
சொத்தை - புழு பூச்சி அரித்த காய் (அ) கனி
4.
வெம்பல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு
5.
அளியல் - குளுகுளுத்த பழம்
156. பொருந்துக.
1.
அழுகல் - குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
2.
சொண்டு - பதராய்ப் போன மிளகாய்
3.
கோட்டான் காய் (அ) கூககக்காய் - கோட்டான் உட்கார்ந்ததால்
கெட்ட காய்
4.
தேரைக்காய் - தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்
5.
அல்லிக்காய் - தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
6.
ஒல்லிக்காய் - தென்னையில் கெட்ட காய்
157. பழங்களின் தோல்பகுதியைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக.
1.
தொலி - மிக மெல்லியது
2.
தோல் – திண்ணமானது
3.
தோடு – வன்மையானது
4.
ஓடு - மிக வன்மையானது
158. பொருட்களின் தோல்பகுதியை குறிக்கும் சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
குடுக்கை – சுரை
2.
மட்டை – தேங்காய்
3.
உமி - நெல், கம்பு
4.
கொம்பை - வரகு, கேழ்வரகு
159. தானியங்களுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக
1.
கூலம் - நெல், புல், கம்பு
2.
பயறு - அவரை, உளுந்து
3.
கடலை - வேர்க்கடலை, கொண்டைக்கடலை
4.
விதை - கத்தரி, மிளகாய்
5.
காழ் - புளி, காஞ்சிரை (நச்சு மரம்)
160. தானியங்களுக்கு வழங்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக
1.
முத்து - வேம்பு, ஆமணக்கு
2.
கொட்டை - மா, பனை
3.
தேங்காய் – தென்னை
4.
முதிரை
- அவரை, துவரை
161. தாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
நாற்று - நெல், கத்தரி
2.
கன்று - மா, புளி, வாழை
3.
குருத்து – வாழை
4.
பிள்ளை - தென்னை
162. தாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்களைக் கொண்டு
பொருத்துக
1.
குட்டி – விளா
2.
மடலி/வடலி – பனை
3.
பைங்கூழ் - நெல், சோளம்
163. பொருத்துக.
1.
Vowel – உயிரெழுத்து
2.
Consonant – மெய்யெழுத்து
3.
Homograph – ஒப்பெழுத்து
4.
Monolingual - ஒரு மொழி
5.
Conversation – உரையாடல்
6.
Discussion – கலந்துரையாடல்
minnal vega kanitham