Type Here to Get Search Results !

6th தமிழ் (இயல் 4,5,6) Short Notes PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 6th Std Tamil Term 2

UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும்

♦ மூதுரை (ஒளவையார்)

♦ துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்)

♦ நூலகம் நோக்கி (நூலகம் பற்றிய செய்திகள்)

♦ இன எழுத்துகள் (இலக்கணம்)

UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

♦ ஆசாரக்கோவை (பெருவாயின் முள்ளியார்) (பதினெண்கீழ்கணக்கு)

♦ கண்மணியே கண்ணுறங்கு (பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும் ஒன்றாகும்.) (நாட்டுப்புறப்பாட்டு)

தமிழர் பெருவிழா

♦ மனம் கவரும் மாமல்லபுரம் (மாமல்லபுரம்)

♦ மயங்கொலிகள்

திருக்குறள்

UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்

♦ நானிலம் படைத்தவன் (முடியரசன்)

♦ கடலோடு விளையாடு

♦ வளரும் வணிகம் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்)

♦ உழைப்பே மூலதனம்

♦ சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் (இலக்கணம்)


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Revision UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும்

1.     "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் - ஒளவையார்

2. “மாசற" என்ற சொல்லின் பொருள் - குற்றம் இல்லாமல்

3.     சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் - ஒப்பிட்டு ஆராய்தல்

4.     “ஆத்திசூடி" என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்

5.     கொன்றை வேந்தன்,நல்வழி,மூதுரை  என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்

6.     மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31

7.     மாணவர்கள் நூல்களை - மாசற கற்க வேண்டும்

8.     இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது - இடம் + எல்லாம்

9.     மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- மாசு அற

10.   குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- குற்றமில்லாதவர்

11.   சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- சிறப்புடையார்

12.   "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

13.   தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் – இகழும்படி

14.   மூத்தோர் என்ற சொல்லின் பொருள் - பெரியோர்

15.   எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியவர் - கல்யாண சுந்தரம்

16.   திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்- கல்யாண சுந்தரம்

17.   மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

18.   மாணவர் பிறர் - தூற்றம்படி நடக்கக் கூடாது

19.   நாம் - மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்

20.   கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- கை + பொருள்

21.   மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- மானமில்லா

22.   மூதுரை ஆசிரியர் – ஔவையார்.

23.   மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் பாடல் ஆசிரியர்- ஔவையார்.

24.   ஔவையார் இயற்றியுளளார் நூல்கள் – ஆத்திசூடி, கொன்றை வேந்தன் , நல்வழி.

25.   மூதுரை என்னும் சொல்லின் பொருள்- மூத்தோர் கூறும் அறிவுரை.

26.   துன்பம் வெல்லும் கல்வி நூல் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

27.   ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று கூறியவர் - காமராசர்

28.   காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தார்- 50000

29.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 1

30.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 3

31.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 5

32.   கல்விக்கண் திறந்தவர் என்று காமராசை போற்றியவர் - பெரியார்

33. “பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

34. “கருப்புக்காந்தி" என்று அழைக்கப்படுபவர் – காமராசர்

35.“படிக்காத மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

36.   "ஏழைப்பங்காளர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

37.   "கர்மவீரர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

38.   "தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

39.   காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன- 6000

40.   இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்- காமராசர்

41.   மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்

42.   பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்

43.   பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்

44.   எம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - மதுரை

45.   நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது - 1976

46.   காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது- சென்னை, விருதுநகர்

47.   சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது- காமராசர்

48.   கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது  - 2000

49.   ஆண்டு தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது- ஜீலை 15 காமராசர் பிறந்த நாள்

50.   பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

51.   பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- பசி + இன்றி

52.   படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- படிப்பு + அறிவு

53.   காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டாறு

54.   ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்குள்ளது - தமிழ்நாடு

55.   ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்

56.   அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுக்குகளைக் கொண்டுள்ளது - 8

57.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் - 8

58.   ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது - சீனா

59.   நூலக விதிகளை உருவாக்கியவர்- இரா.அரங்கநாதன்

60.   "இந்திய நூலகவியலின்தந்தை'' என அழைக்கப்படுபவர்- இரா.அரங்கநாதன்

61.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்

62.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது - முதல் தளம்

63.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கு மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது - 20000

64.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது- 50000

65.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது- ஏழாம் தளம்

66.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்

67.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- முதல் தளம்

68.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- இரண்டாம் தளம்

69.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- மூன்றாம் தளம்

70.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- நான்காம் தளம்

71.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம், அறிவியல், மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- ஐந்தாம் தளம்

72.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஆறாம் தளம்

73.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஏழாம் தளம்

74.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாகப் பிரிவு எத்தளத்தில் அமைந்துள்ளது- எட்டாம் தளம்

75.   நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம் - தமிழ்நாடு

76.   சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது - இரா.அரங்கநாதன் விருது

77.   சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்

78.   ஒற்றுமை உள்ள எழுத்துகள் - இன எழுத்துகள்

79.   சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய - வல்லினம் எழுத்து வரும்

80.   மெய் எழுத்துகளைப் போலவே- உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் உண்டு

81.   உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்- குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும்

82.   ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இன எழுத்து -

83.   ஒள என்னும் எழுத்துக்கு இன எழுத்தாகும் -

84.   தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்து க்கு மட்டுமே இன எழுத்து இல்லை

85.   ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- பழமொழி நானூறு

86.   காமராசர் பிறந்த நாள்- ஜீலை 15, கல்வி வளர்ச்சி நாள்

87.   டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்

88.   அப்துல் கலாம் பிறந்த நாள் - அக்டோபர் 15, மாணவர் தினம்

89.   விவேகானந்தர் பிறந்த நாள் - ஜனவரி 12 , தேசிய இளைஞர் தினம்

90.   ஜவஹாலால் நேரு பிறந்த நாள்- நவம்பர் 14, குழந்தைகள் தினம்

91.   இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்- பற்றுச்சீட்டு

92.   தொடக்கப்பள்ளி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - Primary school

93.   பொருத்துக

1. மின்படிக்கட்டு - Escalator

2. மின்தூக்கி - Lift

3. குறுந்தகடு - Compact Disk

4.  மின்னஞ்சல்- E-mail

94.   பொருத்துக

1. நூலகம்- Library

2. மின்நூலகம்- E-Library

3. மின்நூல்- E-Book

4.  மின் இதழ்கள்- E-Magazine

95.   பொருத்துக

1. மேதைகள்- அறிஞர்கள்

2. மாற்றார்- மற்றவர்

3. நெறி- வழி

4. வற்றாமல்- குறையாமல்

96.   பொருத்துக

1. மேதைகள்- அறிஞர்கள்

2. மாற்றார்- மற்றவர்

3. நெறி- வழி

4. வற்றாமல்- குறையாமல்

 

Revision  UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

1.  "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - ஆசாரக்கோவை

2.     ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளி்யார்.

3.     பெருவாயின் முள்ளி்யார் பிறந்த ஊர் - கயத்தூர்.

4.     ஆசாரக்கோவை என்பதன் பொருள் - நல் ஒழுக்கங்களின் தொகுப்பு.      

5.     பதினேன் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று - ஆசாரக்கோவை.

6.     ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்கலை கொண்டது - 100.

7.     பிறரிடம் நான் - இன்சொல் பேசுவேன்

8.     பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது - பொறை

9.     அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- அறிவுடைமை

10.   இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இவையெட்டும்

11.   நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நன்றி + அறிதல்

12.   பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பொறை + உடைமை

13.   முத்தேன் - கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்.

14.   முக்கனி - மா, பலா, வாழை.

15.   முத்தமிழ் - இயல், இசை, நாடகம்.

16.   தாலாட்டு என்பது - வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று

17.   தால் என்பதன் பொருள் - நாக்கு

18.   தாலாட்டு எவ்வாறு பிரியும் - தால் + ஆட்டு

19.   பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பாட்டு + இசைத்து

20.   கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கண் + உறங்கு

21.   வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - வாழையிலை

22.   கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- கையமர்த்தி

23.   உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த

24.   பொங்கல் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்

25.   உழவர்கள் எந்த மாதத்தில் விதை விதைத்து எந்த மாதத்தில் அறுவடை செய்வர்- ஆடி, தை

26.   கதிரவனுக்கு நன்றி கூறும் விழா - பொங்கல் விழா

27.   அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை விழாவாக கொண்டாடப்பட்டது  - இந்திரவிழா

28.   "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்

29.   எந்த மாதத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது- மார்கழி

30.   திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது- தை முதல் நாள்

31.   திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது- தை 2ம் நாள்

32.   பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- மாட்டுப்பொங்கல்

33.   மாடு என்னும் சொல்லுக்கு பொருள் - செல்வம்

34.   திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31

35.   மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் - மாடு பிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல்

36.   மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- காணும் பொங்கல்

37.   அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன பெயரில் வழங்கப்படுகிறது – மகரசங்கராந்தி

38.   பொங்கல் விழா 'லோரி' என்ற பெயரில் ‌எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- பஞ்சாப்

39.   பொங்கல் விழா 'உத்தராயன்' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- குஜராத், ராஜஸ்தான்

40.   கதிர் முற்றியதும் - அறுவடை செய்வர்

41.   விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் - தோரணம் கட்டுவர்

42.   பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- பொங்கலன்று

43.   போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- போகி - பண்டிகை

44.   பழையன கழிதலும் - புதியன புகுதலும்

45.   பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப்போன மரத்தை காண - துன்பம் தரும்

46.   பொங்கல் பண்டிகை எவ்வாறு அழைக்கப்படுகிறது – தமிழர், திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள்.

47.   மற்போரில் சிறந்தவன் - நரசிம்மவர்மன்

48.   மாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு- நரசிம்மவர்மன்

49.   பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் - மாமல்லபுரம்

50.   முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 7 நூற்றாண்டு

51.   நரசிம்மவர்மன் தந்தை பெயர் - முதலாம் மகேந்திரவர்மன்

52.   மாமல்லபுர சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது – 4 தலைமுறை

53.   சிற்பக்கலையின் உச்சம் - அர்ச்சுனன் தபசு

54.   "அர்ச்சுனன் தபசு"ன் வேறு பெயர் - பகீரதன் தவம்

55.   தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் - மாமல்லபுரம்

56.   ஆகாயக்கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது - மாமல்லபுரம்

57.   சிற்பக்கலை எத்தனை வகைப்படும் - நான்கு

58.   உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்- மயங்கொலிகள்

59.   மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை - 8

60.   நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து -

61.   நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து -

62.   நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து - ந

63.   வாணம் என்ற சொல்லின் பொருள் - வெடி

64.   வானம் என்ற சொல்லின் பொருள் - ஆகாயம்

65.   பணி என்ற சொல்லின் பொருள் - வேலை

66.   பனி என்ற சொல்லின் பொருள் - குளிர்ச்சி

67.   நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து - ல

68.   நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து -ள

69.   நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து - ழ

70.   நாவின் நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து -ர

71.   நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து- ற

72.   ஏரி என்பதன் பொருள்- குளம்

73.   கூரை என்பதன் பொருள் - வீட்டின் கூரை

74.   கூறை என்பதன் பொருள் - புடவை

75.   சிரம் என்பதன் பொருள்- தலை

76.   இலையின் வேறுபெயர்- தளை

77.   வண்டியை இழுப்பது - காளை

78.   கடலின் வேறுபெயர் ­- பரவை

79.   பறவை வானில்  - பறந்தது

80.   பூ – மணம் வீசியது

81.   புலியின் ­- கண் சிவந்து காணப்படும்

82.   வீட்டு வாசலில் - கோலம் போட்டனர்

83.   பொருத்துக:

1. நந்தவனம் - பூஞ்சோலை

2. உலகம் - பார்

3. பண் - இசை

4. இழைத்து - பதித்து

84.   பொருத்துக:

1. விலை - பொருளின் மதிப்பு

2. விளை - உண்டாக்குதல்

3. விழை - விரும்பு

85.   பொருத்துக:

1. இலை - செடியின் இலை

2. இளை - மெலிந்து போதல்

3. இழை - நூல் இழை

86.   பொருத்துக:

1. நல்வரவு- Welcome

2. சிற்பங்கள்­- Sculptures

3. சில்லுகள்- Chips

4. ஆயத்த ஆடை - Readymade Dress

5. ஒப்பனை – Makeup

6. சிற்றுண்டி - Tiffin

87.   பொருத்துக:

1. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை

2. ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்

3. நட்டல் - நட்புகொள்ளுதல்

4. பொறை - பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்ளுதல்

88.   பொருத்துக:

1. ஆந்திரா - மகரசங்கராந்தி

2. பஞ்சாப் - லோரி

3. தமிழ்நாடு - அறுவடைத்திருவிழா

4. குஜராத் – உத்தராயன்

 

Revision  UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்

1.     “கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி'' என்ற பாடலின் ஆசிரியர் - முடியரசன்

2.     "ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புதியதொரு விதி செய்வோம்

3.     முடியரசனின் இயற்பெயர் - துரைராசு

4.     முடியரசன்  எழுதிய நூல்கள் : பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை.

5.     திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்-முடியரசன்.

6.     கவியரசு என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.

7.     வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல் ஆசிரியர் – பாரதியார்.

8.     போர்க்களத்தில் வெளிப்படும் குணம்- வீரம்

9.     கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கல் + எடுத்து

10.   நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நான்கு + நிலம்

11.   நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- நாடென்ற

12.   கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- கலமேறி

13.“புதியதொருவிதி செய்வோம்'' என்ற நூலை இயற்றியவர் - முடியரசன்

14.   கடலும் கடல் சார்ந்த இடம் - நெய்தல்

15.   நெய்தல் நிலத்தல் வாழும் மக்கள் - பரதர், பரத்தியர் , எயினர் , எயிற்றியர்

16.   நெய்தல் நில மக்களின் தொழில் என்ன- மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

17.   நெய்தல் நிலத்தின் பூ - தாழம் பூ

18.   காதால் கேட்டு வாய்மொழியாகவே வழக்கப்பட்டு வருவதால் நாட்டுப்புற பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது- வாய்மொழி இலக்கியம்

19.   நாட்டுப்புறப்பாடலில் அடங்குபவை - ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு,விளையாட்டுப்பாடல், தொழில் பாடல், தாலாட்டுப் பாடல்

20.   நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைத் தொகுத்தவர் - சு.சக்திவேல்

21.   கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கதிர் + சுடர்

22.   மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- மூச்சு + அடக்கி

23.   பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- பெருவானம்

24.   அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- அடிக்கும் அலை

25.   "பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா'' என்ற பாடலின் ஆசிரியர் - சு. சக்திவேல்

26.   பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது- பண்டமாற்று வணிகம்

27.   சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றனர்- உப்பு

28.   சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து எதைப் பெற்றனர்- தானியம்

29.   வணிகம் எத்தனை வகைப்படும் - இரண்டு

30.   வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு குழுவாக வெளியூருக்குச் செல்வர் இக்குழுவிற்கு பெயர்- வணிகச்சாத்து

31.   துறைமுக நகரங்கள் - பட்டினம் ,பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன

32.   பண்டைய தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகம் - பூம்புகார்

33.   தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் - தனிநபர் வணிகம்

34.   ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது - நிறுவன வணிகம்

35.   “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி உமணர் போகலும்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை

36.   “பாலொடு வந்து கூழொடு பெயரும்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - குறுந்தொகை

37.   “பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு

38.   சிறு வணிகர்கள் - நுகர்வோர் உடன் நேரடித்தொடர்பு கொள்வார்கள்

39.   தமிழ்நாட்டில் இருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை - தேக்கு, மயில்தோகை,அரிசி, சந்தனம்,இஞ்சி, மிளகு

40.   சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் - கண்ணாடி ,கற்பூரம் , பட்டு

41.   அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை

42.   “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” என்று வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் - திருக்குறள்

43.   வணிகரை 'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என்று கூறும் நூல் - பட்டினப்பாலை

44.   'கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது' என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – பட்டினப்பாலை

45.   "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்

46.   வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்- நுகர்வோர்

47.   வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- வணிகசாத்து

48.   பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதம் கிடைக்கும் சொல்- பண்டமாற்று

49.   வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- வண்ணம் + படங்கள்

50.   விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- விரிவு + அடைந்த

51.   கரன்சி நோட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பணத்தாள்

52.   பேங்க் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வங்கி

53.   செக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - காசோலை

54.   டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வரைவோலை

55.   டெபிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பற்று அட்டை

56.   கிரெடிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - கடன் அட்டை

57.   ஈகாமாஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - மின்னணு வணிகம்

58.   சங்ககால வணிகம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருந்தது- தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்

59.   துறைமுக நகரங்கள் பட்டினம் என்று அழைக்கப்பட்டது

60.   பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்' என்பது யாருடைய கூற்று- ஒளவையார்

61.   ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள்- சுட்டு எழுத்து

62.   சுட்டு எழுத்துகள் - அ, இ,உ

63.   தற்போது எந்த சுட்டெழுத்தை பயன்படுத்துவது இல்லை - உ

64.   சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது- புறச்சுட்டு

65.   சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது  - அகச்சுட்டு

66.   அண்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து  - இ

67.   சேய்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - அ

68.   அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ள சுட்டெழுத்து - உ

69.   அ. இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து பொருள் தருவது- சுட்டுத்திரிபு

70.   வினா எழுத்துகள் - எ, யா, ஆ,ஓ ,ஏ

71.   மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் - எ, யா

72.   மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து - ஆ, ஓ

73.   மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து - ஏ

74.   வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது - அகவினா

75.   அகவினா எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டு - எது, யார், ஏன்

76.   வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அது - புற வினா

77.   துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பட்டினம், பாக்கம்.

78.   பொருள்களை விற்பவர் – வணிகர்.

79.   நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்ற வரி வணிகரின் எத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன - நேர்மை.

80.   நானிலம் படைத்தவன் பாடல் எந்நூலில் இடம்பெற்றது - புதியதொரு விதி செய்வோம்.

81.   நெய்தல் திணைக்குரிய நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்.

82.   போர்க்களத்தில் வெளிப்படும் குணம் – மறம்.

83.   பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று பாடியவர் – ஒளவையார்.

84.   ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப்பிற நாடுகளுக்கு அனுப்புவது – ஏற்றுமதி.

85.   பாரம்பரியம் என்ற சொல்லின் கலைச்சொல் தருக – Heritage.

86.   நானிலம் படைத்தவன் பாடலில் அதன் ஆசிரியர் கூறும் நான்கு நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்.

87.   எந்த நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன – அரேபியா.

88.   வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் – பாரதியார்.

89.   நானிலம் என்ற சொல்லை பிரித்து எழுதுக - நான்கு + நிலம்.

90.   பொருள்களை வாங்குபவர் – நுகர்வோர்.

91.   அவ்வானம் என்ற சொல்லின் சுட்டு எழுத்தை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தருவது- புறச்சுட்டு.

92.   பொருத்துக

1.  விடிவெள்ளி - விளக்கு

2. மணல் - பஞ்சு மெத்தை

3. புயல்- ஊஞ்சல்

4. பனிமூட்டம் - போர்வை

93.   பொருத்துக

1. கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி

2. மின்னல்வரி - மின்னல் கோடுகள்

3. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

94.   பொருத்துக

1. மல்லெடுத்த- வலிமை பெற்ற

2.  கழனி - வயல்

3. சமர் - போர்

4.  நல்கும் - தரும்

95.   பொருத்துக.

1. மறம் - வீரம்

2. எக்களிப்பு- பெருமகிழ்ச்சி

3. கலம்- கப்பல்

4. ஆழி- கடல்

96.   பொருத்துக.

1. பண்டம்- Commodity

2.  பயணப்படகுகள் - Ferries

3. பாரம்பரியம்- Heritage

4. நுகர்வோர்- Consumer

97.   பொருத்துக.

1. கடற்பயணம் - Voyage

2. தொழில் முனைவோர் -  Entrepreneur

3. கலப்படம் - Adulteration

4. வணிகர்- Merchant

98.   பொருத்துக:

1. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - பட்டினப்பாலை

2. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து - நற்றிணை

3. பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறுந்தொகை

4. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு

99.   பொருத்துக:

1. அகச்சுட்டு - இம்மலை

2. புறச்சுட்டு - இது

3. அகவினா - எது

4. புறவினா - அவனா

100.  ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க.

1. டிஜிட்டல் - மின்னணுமயம்

2. டெபிட் கார்டு - பற்று அட்டை

3. இ-காமர்ஸ் - மின்னணுவணிகம்

4. டிமான்ட் ட்ராப்ட் - வரைவோலை

tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்