எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி – ஆ இலக்கியம்
6. பெரியபுராணம்
– நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
Q1: திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர் [2018 G2]
(A) அடியார்க்கு நல்லார்
(B) அரும்பத உரைகாரர்
(C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(D) பெரிவாச்சான் பிள்ளை
Q2: “பெருஞ் சூலையினால் ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்?” – இவ்வடிகள்
யாரை குறிப்பிடுகிறது? [2018 G2]
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்
(C) மாணிக்கவாசகர்
(D) நாவுக்கரசர்
Q3: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய்
பணிபுரிந்தார்? [2018 G2]
(A) இராசராசன்
(B) திருமலை நாயக்க மன்னர்
(C) மகேந்திரவர்மன்
(D) குலோத்துங்கள்
Q4: கடிகை முத்துப்புலவரின் மாணவர் யார்? [2018 G2]
(A) அப்துல் காதர்
(B) உமறுப்புலவர்
(C) அகமது மரைக்காயர்
(D) அபூபக்கர்
Q5: மாணிக்கவாசகர்
வரலாறும் கால ஆராய்ச்சியும் என்ற
ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
[2018 G2]
(A) சுப. சந்தோஷம்
(B) மறைமலை அடிகள்
(C) வ.உ.சி
(D) செல்வக் கேசவராய முதலியார்
Q6: உலகம், உயிர், கடவுள் ஆகிய
மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம்
எது? [2018 G2]
(A) பெரியபுராணம்
(B) கம்ப இராமாயணம்
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
Q7: அடியார்க்கு உணவளித்தலைச் சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?
[2018 G2]
(A) சிவபூசை
(B) மகேசுவர பூசை
(C) திருத்தொண்டு
(D) மாதேவன் தொண்டு
Q8: திருநாவுக்கரசர்
பிறந்த ஊர் [2018 G2]
(A) திங்களூர்
(B) திருவாமூர்
(C) திருவழுந்தூர்
(D) திருவாதவூர்
Q9: இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் [2018 G2]
(A) திருவருட்பிரகாச
வள்ளலார்
(B) திருஞானசம்பந்தர்
(C) அடியார்க்கு நல்லார்
(D) சிவஞான முனிவர்
Q10: பொருளறிந்து பொருத்துக: [2018 G2]
(a) ஒல்லை- 1. சிவன்
(b) ஈறு- 2. எருமை
(c) மேதி-3. எல்லை
(d) அங்கணர் - 4. விரைவு
(A) 1234
(B) 2341
(C) 3412
(D) 4321
Q11: கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது
கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர். [2017 G2]
(A) பெரியாழ்வார்
(B) அப்பூதியடிகள்
(C) மாணிக்கவாசகர்
(D) அப்பர்
Q12: “உயிரிரக்கமே
பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறியவர் [2017 G2]
(A) கம்பர்
(B) திருவள்ளுவர்
(C) இளங்கோவடிகள்
(D) வள்ளலார்
Q13: ”ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகம்
பாடியவர் யார்? [2017 G2]
(A) சேக்கிழார்
(B) திருநாவுக்கரசர்
(C)இளங்கோவடிகள்
(D) பாரதியார்
Q14: தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது? [2017 G2]
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) திருக்குறள்
Q15: ‘மூலன்’ என்னும் இயற்பெயரை உடையவர்?
[2017 G2]
(A) திருமூலர்
(B) அப்பர்
(C) சாத்தனார்
(D) தாயுமானவர்
Q16: சீறாப்புராணத்தை
இயற்றியவர் யார்? [2017 G2]
(A) உமறுப்புலவர்
(B) சீதக்காதி
(C) அபுல்காசிம்
(D) திருநாவுக்கரசர்
Q17: பட்டியல் 1 ஐ பட்டியல் II டன்
பொருத்தி விடை எழுது [2017 G2]
(a) திருஞானசம்பந்தர்
- 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர்
- 2. திருவெண்ணெய்
(c) சுந்தரர் - 3.
திருவாமூர்
(d) மாணிக்கவாசகர்
-4. சீர்காழி
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 2 4 3 1
(D) 2 3 4 1
Q18: “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது
[2017 G2]
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
Q19: குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல்
எது? [2017 G2]
(A) நந்திக்கலம்பகம்
(B) நாலாயிரத்திவ்வியப்
பிரபந்தம்
(C) கலித்தொகை
(D) நற்றிணை
Q20: திருஞானசம்பந்தருக்கு
தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க. [2017 G2]
(A) உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
(B) 220 தலங்கள் வழிப்பட்டார்
(C) திராவிடச் சிசு என ஆதிசங்கிரரால்
குறிப்பிடப்பட்டார்
(D) அப்பூதியடிகளின்
மூத்த மகளை உயிர் பெற
செய்தார்
Q21: உமறுப்புலவர்
பாடிய முதுமொழி மாலை என்ற நூலில்
உள்ள பாக்கள் [2017 G2]
(A) 120 பாக்கள் .
(B) 204 பாக்கள்
(C) 80 பாக்கள்
(D) 67 பாக்கள்
Q22: பொருந்தாத இணையைக் கண்டறிக. [2017 G2]
(A) மேதி – எருமை
(B) சந்தம் – அழகு
(C) கோதில் – பசு
(D) அங்கணர் – சிவன்
Q23: "தோடுடைய
செவியன், விடமுண்ட கண்டன்’
என்ற தொடரால் குறிக்கப்படுபவர் (தேவாரம்)
[2016 G2]
a. உமையொரு பாகனாம் சிவபெருமான்
b. குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
c. மாமரம் ஏழினைத் துளைத்த இராமன்
d. மாமரம் தடிந்த தணிகை வேலன்
Q24: நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
[2016 G2]
(a) பெருமாள் திருமொழி - 1. காரைக்கால் அம்மையார்
(b) திருத்தொண்டத்
தொகை - 2 ஆண்டாள்
(c) அற்புதத் திருவந்தாதி - 3. சுந்தரர்
(d) நாச்சியார் திருமொழி - 4. குலசேகர ஆழ்வார்
a. 4 2 3 1
b. 3 4 1 2
c. 2 1 4 3
d. 4 3 1 2
Q25: பொருந்தாத விடையைக் குறிப்பிடுக : [2016 G2]
a. மனுமுறை கண்ட வாசகம்
b. திருப்புகழ்
c. திருவருட்பா
d. ஜீவகாருண்ய ஒழுக்கம்
Q26: கீழ்க்காணும்
கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக [2016 G2]
a. தேம்பாவணியில் அறம், பொருள், வீடு
மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை
b. தேம்பாவணியை, புறநிலைக் காப்பியம்" என்று, தன்னை, புறநிலைக்
காப்பியன் என்னும் தொன்னூலில் வீரமாமுனிவர்
குறிப்பிடுகிறார்
c. சீறாப்புராணத்தில்
மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன
d. அரபுச்சொற்கள்,
அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை
நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது
Q27: சரியான விடையைத் தெரிவு செய்க
"கிறித்தவக் கம்பர்" எனப் புகழப் பெறுபவர்
[2016 G2]
a. வீரமாமுனிவர்
b. ஜி.யூ போப்
c. எல்லீஸ்
d. ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினணார்
Q28: "சின்னச்சீறா"
என்ற நூலை எழுதியவர் [2016 G2]
a. பனு அகமது மரைக்காயர்
b. உமறுப்புலவர்
c. அப்துல் ரகுமான்
d. சேக் மீரான்
Q29: "அழுது அடியடைந்த அன்பர்" எனக் குறிப்பிடப் பெறுபவர்
[2016 G2]
a. சுந்தரமூர்த்தி
b. மாணிக்கவாசகர்
c. திருஞானசம்பந்தர்
d. திருநாவுக்கரசர்
Q30: பொருத்துக:
[2016 G2]
(a) மருமக்கள் வழிமான்மியம் - 1. திரு. வி. க
(b) தமிழ்ச் சோலை - 2. சுரதா
(c) இரட்சணியக் குறள் - 3. கவிமணி
(d) தேன்மழை - 4. எச்.ஏ. கிருட்டிணனார்
a. 4 1 2 3
b. 1 4 3 2
c. 2 1 3 4
d. 3 1 4 2
Q31: பட்டியல் I-இல் உள்ள செய்யுள்
தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு
பொருத்தி, கீழே - கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
உரிய விடையைத் தேர்ந்து எழுதுக [2016 G2]
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
- 1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல் - 2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - 3. சீத்தலைச்
சாத்தனார்
(d) நீரின்றமையாது
உலகு - 4. ஒளவையார்
a. 4 1 2 3
b. 1 4 3 2
c. 2 4 3 1
d. 3 1 4 2
Q32: கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன்
கருக்கமே திரு.வி.க.
என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற
ஊரில் திரு.வி.க.
பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன்
அல்லது அழகு, பெண்ணின் பெருமை,
பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத்
திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய
இவர் தமிழ்த் தென்றல் என்று
சிறப்பிக்கப்படுகிறார்
a. I மற்றும் IV பொருத்தமற்றவை
b. II மற்றும் IV பொருத்தமற்றவை
c. IV மற்றும் III
பொருத்தமற்றவை
d. II மற்றும் III
பொருத்தமற்றவை
Q33: பொருந்தா இணையைக் கண்டறிக
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர் [2015 G2]
a. இயேசு பெருமான் - எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
b. சிவபெருமான் - சுந்தரர்
c. புத்தபிரான் - நீலகேசி
d. நபிகள் நாயகம் - உமறுபுலவர்
Q34: திருவிளையாடல்
புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில்
சரியானவை எவை? [2015 G2]
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து
மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று
நூல் திருவிளையாடல் புராணம்
II. திருவிளையாடல்
புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர்
வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல்
புராணம், மதுரைக் காண்டம், கூடல்
காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று
பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல்
புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
a. I மற்றும் III சரியானவை
b. II மற்றும் III
சரியானவை
c. III மற்றும் IV
சரியானவை
d. I மற்றும் IV சரியானவை
Q35: கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க [2015 G2]
a. சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக்
கொண்டவர் தாயுமானவர்
b. தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது
பாடல்கள் ஆகும்
c. ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
d. பராபரக்கண்ணிகள்
தாயுமானவரால் இயற்றப்பட்டவை
Q36: நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
[2015 G2]
a. பனூ அகமது மரைக்காயர்
b. சீதக்காதி
c. உமறு புலவர்
d. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
Q37: பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினைத் தெரிவு செய்க: [2015 G2]
(a) மாணிக்கவாசகர்
- 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் - 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் - 3.
திருக்கோவை
(d) திருநாவுக்கரசர்
- 4. நாச்சியார் திருமொழி
a. 3 4 1 2
b. 1 2 3 4
c. 4 3 2 1
d. 2 4 1 3
Q38: மாணிக்கவாசகர்
கட்டிய கோவில் எங்குள்ளது? [2015 G2]
a. புதுக்கோட்டை
b. திருப்பெருந்துறை
c. திருவெண்ணெய் நல்லூர்
d. பெரியகுளம்
Q39: தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர்? [2015 G2]
a. சுந்தரர்
b. கம்பர்
c. சேக்கிழார்
d. மாணிக்கவாசகர்
Q40: திருக்கோட்டியூர்
நம்பியால் எம்பெருமானார் என்று அழைக்கப்பட்டவர் யார்?
[2015 G2]
a. நாதமுனிகள்
b. இராமாநுசர்
c. திருவரங்கத்தமுதனார்
d. மணவாள மாமுனிகள்
Q41: திருவேங்கடத்தந்தாதி
என்னும் நூலை இயற்றியவர் [2015 G2]
a. நம்மாழ்வார்
b. பிள்ளைப்பெருமாள்
ஐயங்கார்
c. குலசேகராழ்வார்
d. திருமங்கையாழ்வார்
Q42: பாந்தள், உரகம், பன்னகம், பணி
என்னும் சொற்களின் பொருள்__________ என்பதாகும். [2015 G2]
a. கரடி
b. யானை
c. முதலை
d. பாம்பு
Q43: பொருத்துக:
[2014 G2]
(a) திருக்கோவையார்
- 1. சேக்கிழார்
(b) திருப்பாவை -
2. மாணிக்கவாசகர்
(c) கலிங்கத்துப்பரணி
- 3. ஆண்டாள்
(d) பெரியபுராணம்
- 4. செயங்கொண்டார்
a. 1 2 3 4
b. 2 3 4 1
c. 4 2 1 3
d. 2 3 1 4
Q44: விடைத் தேர்க: [2014 G2]
"பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்"-
என்று கூறியவர் யார்?
a. திரு.வி.க
b. மறைமலையடிகள்
c. பரிதிமாற் கலைஞர்
d. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Q45: விடைத்தேர்க:[2014
G2]
"புதுநெறிகண்ட
புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட
சிறப்புக்குரியவர் எவர்?
a. சேக்கிழார்
b. தாயுமானவர்
c. மாணிக்கவாசகர்
d. இராமலிங்க அடிகளார்
Q46: விடைத்தேர்க:
[2014 G2]
அகராதி என்னும் சொல் முதன்
முதலாக இடம் பெற்றுள்ள நூல்
எது?
a. சதுரகராதி
b. திருமந்திரம்
c. திருவருட்பா
d. திருக்குறள்
Q47: திருநாவுக்கரசரைக்
குறிப்பிடாத பெயர் எது? [2014 G2]
a. தருமசேனர்
b. தாண்டகவேந்தர்
c. தம்பிரான் தோழர்
d. வாகீசர்
Q48: திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
[2014 G2]
a. ரேணியஸ்
b. ஜி.யு.போப்
c. எல்லீசர்
d. லாசரஸ்
Q49: Pilgrims Progress என்னும்
நூலினைத் தழுவி எழுதிய தமிழ்
நூல் எது? [2014 G2]
a. மனோன்மணியம்
b. தேம்பாவணி
c. சீறாப்புராணம்
d. இரட்சணிய யாத்திரிகம்
Q50: "உயிரிரக்கமே
பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்? [2014 G2]
a. இராமலிங்க அடிகளார்
b. தாயுமானவர்
c. திருநாவுக்கரசர்
d. சுந்தரர்
Q51: தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச்
சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே
என்றான் ஐயன்
- இதில் அல்கு என்பதன் பொருள்?
[2014 G2]
a. மருள்
b. இருள்
c. உருள்
d. திரள்
Q52: திருமங்கையாழ்வார்
சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
[2013 G2]
a. திருக்குறுந்தாண்டகம்
b. திருவெழுக்கூற்றிருக்கை
c. திருநெடுந்தாண்டகம்
d. திருவந்தாதி
Q53: பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது? [2013 G2]
a. தைப்பாவை
b. திருப்பாவை
c. திருவெம்பாவை
d. காவியப்பாவை
Q54: சீறாப்புராணத்தில்
தீர்க்கதரிசனத்தைக் கூறுவது? [2013 G2]
a. நுபுவத்துக் காண்டம்
b. விலாதத்துக் காண்டம்
c. ஹிஜ்ரத்துக் காண்டம்
d. மேற்கூறிய அனைத்தும்
Q55: "மானுடப்
பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை
அறிவுறுத்தும் நூல்? [2013 G2]
a. தேவாரம்
b. திருவாசகம்
c. திருக்கோவையார்
d. திருப்பள்ளியெழுச்சி
Q56: "அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக்
குறிக்கிறது? [2013 G2]
a. அருணகிரியார்
b. சம்பந்தர்
c. சுந்தரர்
d. மாணிக்கவாசகர்
Q57: திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண
இலக்கிய நூல் எது? [2013 G2]
a. யான் கண்ட இலங்கை
b. எனது இலங்கைச்செலவு
c. யான் கண்ட ஜப்பான்
d. உலகம் சுற்றிய தமிழன்
Q58: சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால்
பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப்
புலவர் போற்ற அரங்கேறிய நூல்
எது? [2013 G2]
a. பெரிய புராணம்
b. திருவிளையாடற்புராணம்
c. கந்தபுராணம்
d. திருவாசகம்
Q59: பெரியபுராணத்தில்
யாருடைய வரலாறு மிக விரிவாக
விளக்கப்பட்டுள்ளது? [2013
G2]
a. திருநாவுகரசர்
b. திருஞானசம்பந்தர்
c. சுந்தரர்
d. காரைக்கால் அம்மையார்
Q60: சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது? [2013 G2]
a. திருச்செங்குன்றம்
b. திருவெண்ணெய் நல்லூர்
c. திருச்செந்தூர்
d. திருவாரூர்
Q61: தேம்பாவணி நூலில் உள்ள படலங்களின்
எண்ணிக்கை? [2013 G2]
a. 39 படலங்கள்
b. 30 படலங்கள்
c. 32 படலங்கள்
d. 36 படலங்கள்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/04/proof-tamil-group-2.html
minnal vega kanitham