டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு! |
குரூப்
2 & 2ஏ தேர்வு குறித்து நாளை பகல் 12.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்
என டி.என்.பி.எஸ்.சி. தகவல் |
TNPSC குரூப் 2/2A தேர்வுக்கான தேதிகள் நாளை
[18-01-2022] வெளியிடப்படும் என Dr, V.P.Jeyaseelan IAS., அவர்கள் அறிவித்துள்ளார்
அதற்கான ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
குரூப்
2 தேர்வை எழுத உள்ளவர்கள் அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த குரூப் 2 தேர்வானது
நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்,
உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு
அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய்
உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் என பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. மேற்கண்ட
பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை
முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதல் கட்ட எழுத்து தேர்வு, இறுதித்தேர்வு, நேர்கானல் ஆகியவற்றின் மூலம் தகுதியானோர்
தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியானது பணிகளை பொறுத்து மாறுபடும். அதாவது தனிப்பட்ட
எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும். |
minnal vega kanitham