வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் (6ஆம் வகுப்பு சமூகஅறிவியல்)
உங்களுக்கு தெரியுமா? 1. ரிக்வேதமக்கள்
அறிந்திருந்த உலோகங்கள் தங்கம் (ஹிரண்யா) இரும்பு (சியாமா) * தாமிரம் /செம்பு (அயாஸ்) 2. பாலி
- இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை
இவ்வரியாகச் செலுத்த வேண்டும். 3. சபா
- மூத்தோர்களைக் கொண்ட மன்றம் 4. சமிதி-மக்கள்
அனைவரையும் கொண்ட பொதுக்குழு. 5. இந்தியாவின்தேசியகுறிக்கோள்
"சத்யமேவஜெயதே" ("வாய்மையேவெல்லும்”) என்ற வாக்கியம் முண்ட உபநிடதத்தில்
இருந்து எடுக்கப்பட்டது. 6. உப்பாற்றின்
இரு கரைகளிலும் பழங்கால வாழ்விடங்கள் இருந்ததை கட்டிக்காட்டுகின்றன.மதுரை மாவட்டம்
நரசிங்கம் பட்டியிலும், ஈரோடு மாவட்டம் குமரிக்கல் பாளையத்திலும், கொடுமணலிலும் இது
போன்ற நினைவுத் தூண்கள் உள்ளன 7. இறந்துபோன
வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் நடுக்கல்லாகும். தனது கிராமத்தை
கொடிய விலங்குகளிடமிருந்து அல்லது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில்
மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய வீரர்களின் நினைவாக நடப்படுவது ஆகும். திண்டுக்கல்
மாவட்டம் பழனிக்கு அருகேயுள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் கோட்டை, திண்டுக்கல்
புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் நடுகற்கள் காணப்படுகின்றன. 8. கற்திட்டைகள்
(Dolmens) : இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக
நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இக்கற்திட்டைகள்
வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்) நரசிங்கம்பட்டி
(மதுரைமாவட்டம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. 9. நினைவுகற்கள்
(Menhir) : பிரிட்டானிய(Breton) மொழியில் 'மென்' என்றால் கல்,'கிர்' என்றால் “நீளமான” என்றுபொருள். ஒரே கல்லிலான இத்தூண்கள்
இறந்தோரின் நினைவாக செங்குத்தாக நடப்படும். திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம்,
தேனிமாவட்டம் வெம்பூர் ஆகிய இடங்கிளல் இவ்வாறான நினைவுத் தூண்கள் உள்ளன. 10. தமிழ்நாட்டில்
பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் புதியகற்காலத்தின் கடைப்பகுதியில் வாழ்ந்தமக்கள்
பெருங்கற்காலப் புதைப்பு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இம்முறையின் படி இறந்தவர்களின்
உடல் பெரியமட்பாண்டத்தில் வைக்கப்படும். ஏனைய சிலபொருட்களும் அதனுடன் வைக்கப்படும்.இந்தபெருங்கற்கால
நினைவுச் சின்னங்கள் இரும்பைக் குறித்த அறிவைப் பெற்றிருந்த சமூகமாக கூடி வாழத் தெரிந்திருந்த
மிகவும் முன்னேறிய தமிழ் நாகரிகத்திற்கான சாட்சிகளாகும். 11. இந்திய
தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து
கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. |
1. யாருடைய வருகையால் வேதகாலம் காலகட்டம் தொடங்கியது -
ஆரியர்கள்.
2.வேதகாலம் ஆண்டு
- பொ.ஆ.மு 1500 - 600.
3. ஆரியர்கள் மொழி - இந்தோ , ஆரிய.
4. ஆரியர்ளின் காலம் - இரும்புக்காலம்.
5. ஆரியர்ளின் கால அளவு - பொ.ஆ.மு 1500 - 600.
6. ஆரியர்ளின் புவியியல் பரப்பு - வட இந்தியா.
7. ரிக் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்.
8. நான்கு வேதங்கள் - ரிக் , யஜீர் , சாம , அதர்வன.
9. தொடக்கால வேதகாலம் - பொ.ஆ.மு 1500 - 1000.
10. பின்வேதகாலம் - பொ.ஆ.மு 1000 - 600.
11. ஆரியர்களின் முதன்மைத்தோழில் கால்நடை மேய்த்தல், அழித்தும் எரித்து சாகுபடி
செய்யும் வேளாண்மை முறை.
12. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள
எந்த கணவாய் வழியாக வந்தனர் - கைபர் கணவாய்.
13. சபா - முத்தோர்களை கொண்ட மன்றம்.
14. சமிதி - மக்கள் அணைவரையும் கொண்ட பொதுக்குழு.
15. செம்பு கால பண்பாடும் முதிர்ந்த நிலை ஹரப்பாபண்பாடும்
- சமகாலம்.
16. வடஇந்தியாவில் பின்வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில்
இரும்புகாலமும் - சமகாலத்தை சேர்ந்தது.
17. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் எந்த ஆண்டைச் சேர்ந்தவை
- கி.மு.200.
18. அமெரிக்காவில் புளோரிடா இடத்தில் உள்ள கதிரியக்க கார்பன்
வயதுகணிப்பு நிறுவனம் - பீட்டா அனாலடிக்.
19. தீபகற்ப இந்தியாவிலிருந்து
எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில்
இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்று எதில் குறிப்பிடபட்டுள்ளது - பெரிப்பிளஸிக்.
20. பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் ரேடியோ கார்பன்
முறையில் கணிக்கப்பட்ட காலம் - பொ.ஆ.மு -1000.
21. இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய
மண் பானை -முதுமக்கள் தாழிகள்.
22. இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும்
கல் - நடுக்கல்.
23. நம் நாட்டின் தேசிய குறிக்கோல் வாய்மையே வெல்லும் எதிலிருந்து
எடுக்கப்பட்டது -உபநிடதம்.
24. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூல் செய்யப்பட்டது
- 1/6 பங்கு.
25. ரோம்நாட்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ள
இடம் - கீழடி
26. கொடுமணல் ஊர் இடம் பெற்றுள்ள பாடல் - பதிற்றுப்பத்து.
27. இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள
இடம் -பையம்பள்ளி.
28. நடுகற்கள் கிடைக்கபெற்றுள்ள இடம் :
i.மானுர் - திண்டுக்கல்.
ii.வெள்ளாளன் கோட்டை - தூத்துக்குடி.
ii.புலிமான் கோம்பை - திண்டுக்கல்.
29. ஆதிச்சநல்லுர் உள்ள மாவட்டம் - தூத்துக்குடி.
30. ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றவை
.
i. இரும்பாலான்
குத்துவாள் ,
ii.கத்தி,
ஈட்டி , அம்பு ,
ii.சில கல்மணிகள்,
தங்க ஆபரணங்கள்.
iii.புலி
, மான் , யானை , வெண்கலத்தாலான சிலை.
31. கீழடி உள்ள மாவட்டம் - சிவகங்கை.
32. கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள்.
i. தமிழ
பிராமி எழுத்துகள் பொரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் ,
ii.கண்ணாடி
மணிகள் , செம்மணிகள் வெண்கல படிகம் ,
iii.முத்துக்கள்
, தங்க ஆபரணங்கள் ,
iv. இரும்புப்
பொருட்கள் சங்கு வலையல்கள் ,
v.தந்தத்தால்
செய்யப்பட்ட பகடை.
33. பொருத்தல் உள்ள மாவட்டம் - திண்டுக்கல் .
34. பொருத்தலில் கிடைத்துள்ள பொருட்கள் :
i. கண்ணாடி
மணி (பச்சை , சிவப்பு, மஞ்சள் , நீலம் , வெள்ளை) ,
ii. இரும்பு
வால், படிகக்கல் , சிவப்பு நிற மணிக்கற்கள் ,சங்கு ,
iii. கண்ணாடி
வளையல்கள்,மட்பாண்டங்கள் ,
iv. அரிசி
நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள்.
35. பையம்பள்ளி உள்ள மாவட்டம் - வேலூர் .
36. பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் .
i. கருப்பு
, சிவப்பு மட்பாண்டங்கள்.
ii. இரும்பு
உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள்.
37. கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.
38. கொடுமணலில் கிடைத்துள்ள பொருட்கள்.
i. சுழல்அச்சுக்கள்
,
ii. சிவப்பு
நிற மணிகற்கள்,
iii. துணிகளின்
சிறிய துண்டுகள்.
39. கற்திட்டைகள் காணப்படும் இடம் .
i. வீரராகவபுரம் - காஞ்சிபுர மாவட்டம்.
ii. கும்மாளமருதுபட்டி - திண்டுக்கல் மாவட்டம் .
iii. நரசிங்கப்பட்டி - மதுரை மாவட்டம் .
40. நினைவுகற்கள் உள்ள இடம்.
i. சிங்கப்பாளையம் -திருப்பூர் மாவட்டம்,
ii. வெம்பூர் -தேனி மாவட்டம் ,
iii. நரசிங்கப்பட்டி -மதுரை மாவட்டம் ,
iv. குமரிக்கல் பாளையம் ,கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.
41. பெருத்துக.
i. கீழடி - பகடை.
ii. பொருத்தல் - கொழுமுனைகள்.
iii. கொடுமணல் - சுழல் அச்சுக்கள்.
iv. ஆதிச்சநல்லூர் - தங்க ஆபரணங்கள்.
BOOK BACK
v. பையம்பள்ளி - கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள்.
நீங்கள் செய்யும் இந்த பணி தொடருட்டும் உங்களால் பல மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று அந்த வெற்றியை உங்களுக்கு சமர்ப்பணம் செய்வோம் நன்றி ஐயா
பதிலளிநீக்குminnal vega kanitham